வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more

இசையின் சித்திரங்கள்

இசையின் சித்திரங்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எழுத்து லக்ஷ்மி தேவ்நாத், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 72ரூ. சித்திரமடலில் இசையரசி காமிக்ஸ் என்று வழங்கப்படுகிற வண்ணம் சித்திர மடலாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தந்திருக்கிறார்கள் ஹெரிடேஜ் வெளியீட்டகத்தார். லக்ஷ்மி தேவ்நாத் எழுதி, ஓவியர் அரஸ் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள இச்சிறு நூலில் குழந்தை சுப்புலக்ஷ்மி குஞ்சாவிலிருந்து, உச்ச நிலையை எட்டி அமரத்துவம் பெறுகிறவரை, ஒரு குறும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தோடு படித்தும் பார்த்தும் மகிழலாம். அடிக்குறிப்பு விவரங்களில் அரியக்குடி போன்றவர்களின் காலமும் […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html தெய்வீக இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்ந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், […]

Read more

சட்டம் உன் கையில்

சட்டம் உன் கையில், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டு தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் சட்டம் உன் கையில் புத்தகம். மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப்போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, […]

Read more

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9,  விலை 2000ரூ. தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் […]

Read more

அப்பா சிறுவனாக இருந்தபோது

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமுது ஷெரிபு, மறுவடிவம் ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன். உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்குமா, எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிக்குமா? நிச்சயமாகப் பிடிக்காது இல்லையா? அப்படி ஒரு சிறுவன். தினசரி பிரெட்டைச் சாப்பிட மறுத்து, அதைத் தரையில் வீசி எறிகிறான். யார் சொல்லியும் அந்தச் சிறுவன் பிரெட்டைச் சாப்பிடவில்லை. கடைசியாக அடுத்த நாள் காலையில் இருந்து சிறுவனுக்கு பிரெட்டே தரப்படவில்லை. குளிர்பானங்களும் தரப்படவில்லை. இரவுச் சாப்பாடும் இல்லை. பிரெட் இல்லாமல் காலையில் சீஸ், மதியம் […]

Read more

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை […]

Read more

ஆலிஸின் அற்புத உலகம்

ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், வம்சி, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-144-4.html தோட்டத்துக்குச் செல்லும் சிறுமி ஆலிஸ், ஒரு முயலைப் பின்தொடர்ந்து அதன் வளைக்குள் செல்கிறாள். அங்கே முயலுக்கு ஒரு வீடே இருக்கிறது. அங்கே ஒரு பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்தவுடன் சின்னஞ்சிறியவளாகச் சுருங்கிப் போகிறாள் ஆலிஸ். பிறகு ஒரு கேக்கைச் சாப்பிடும்போது பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறாள். இப்படியே கதை முழுவதும் அவள் சிறியவளாவதும், பிறகு வளர்வதுமாக இருக்கிறாள். நிறைய கதவுகள் வருகின்றன. […]

Read more

கலிவரின் பயணங்கள்

கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், தமிழில் யூமா வாசுகி, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 260ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-199-8.html கலிவருக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார். களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் […]

Read more

தீப்பறவையின் கூடு

தீப்பறவையின் கூடு (பிற மொழி நவீன சிறுகதைகள்), தமிழில் திலகவதி, அம்ருதா பதிப்பகம், சென்னை, பக். 186, விலை 120ரூ. ஷ்ர்லி, சல்மான் ருஷ்டி, ஜான்ஸ்டேன் ஜான்சன், ஆன்டன் செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஐஸக் பாஷெவிஸ், சிங்கர், பிரதிபாரே, பென் ஓக்ரி, லூவிஸ் எட்ரிச் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் நூல். அந்நிய நாட்டின் மோகத்தால் தாய் நாட்டை பழிப்பதில் எதிர்காலத் தலைமுறை அடையும் பிரச்னைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் சோகம், காதலின் பிரிவு, இப்படிப் பல கருத்துகளை […]

Read more
1 5 6 7 8 9