உத்தம நாயகன்

உத்தம நாயகன், த. தியாகையா, நூலக உலகம் வெளியீடு, பக். 88, விலை 60ரூ. ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருகிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார். விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக். 25). கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 647, விலை 525ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024623.html ஒரு வரலாற்றுப் புதினம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரி இந்த நூல். கலிங்கத்துப் பரணி காலம்தான், கதை நிகழும் காலம். குலோத்துங்க சக்கரவர்த்தியும், கருணாகரனும், இன்னும் பல கதை மாந்தர்களும் நாம் அறிந்தவர்களே. இந்த வரலாற்று நாயகர்களை தனது காப்பியத்திலிட்டுக் கதைப்படுத்தி, வாசகரைச் சோழ தேசத்தில் வாழ்வதுபோல் ஓர் மயக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறார். காலிங்கராயரின் உதிரத்தில் மீண்டும் […]

Read more

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ. ‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சொல்லில் அடங்காத உலகத்தை, ஏதேனும் ஒரு தருணத்தில் எல்லோரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் ‘பராக்கா’ எனும் திரைப்படத்தை முன் வைத்து, ஒரு விமர்சனப் பார்வையாக வந்துள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பு. ‘பராக்கா’ ஆவணப்படத்தில், பழங்குடி இனச் சிறுவன், தனது பசுமை உலகத்திலிருந்து வெளியேறத் துடிப்பதையும், பரவசமோ பதற்றமோ அற்று அது உணர்த்தும் பெருத்த அமைதி, காண்பவரை உறங்கவிடாமல் செய்யும் நிதர்சனத்தையும், நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வகையில் […]

Read more

மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், பக். 288, விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024069.html எவ்வித பிரச்னையையும் தீர்க்க, புதிய கோணத்தில் சிந்தியுங்கள் என, அறிவுறுத்தும் புத்தகம். அதை, அறிவுரையாக கூறி தெவிட்டாமல், நண்பனாக வாசகனோடு, நூலாசிரியர் பேசுகிறார். புராணங்கள், கணிதம், நாட்டுப்புற கதைகள், மேல்நாட்டு கதைகளில் உள்ள புதிர்கள் மூலம், நம்மை கட்டுரைக்குள் இழுக்கும் லாவகம், ஆசிரியருக்கே உரியது. மொத்தம் 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. குழு ஒற்றுமையை விளக்கும் ஆசிரியர், […]

Read more

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 216, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024227.html பெண் கவிகள், புதுக்கவிதை, சிறுகதை, எழுத்தாளர்கள் என, இலக்கிய சுற்றத்தை விமர்சித்தும், ஆய்வு செய்தும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தமிழில் பெண் கவிகள் முதல், கணினியில் வளரும் தமிழ்வரை, மொத்தம் 16 கட்டுரைகள், சீரான நேர்கோட்டில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, கதை எழுதுவது, ஈட்டி எறிதல் போல இருக்க […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும், பதிப்பாசிரியர் சு. சதாசிவம் உள்ளிட்டோர், செம்மூதாய் பதிப்பகம், பக். 538, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024280.html இந்த தொகுப்பில், மொத்தம் 121 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் முதலாக ஆயிஷா நடராசன் படைப்புக்கள் ஈறாக ஆய்வுப் பொருள், பல்வேறு களங்களில் அமைந்துள்ளது. சித்தர் குறித்த ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. களஆய்வின் வெளிப்பாடாக, திருவக்கரை வக்கர காளியம்மன் கோவில் ஓர் ஆய்வு, வீரராகவப் பெருமாள் கோவில் கல்வெட்டுக்கள் கூறும் சமுதாயம் ஆகிய […]

Read more

மீறல்

மீறல், ஆங்கிலம் மாலதி ராவ், தமிழில் அக்களூர் இரவி, சாகித்ய அகாடமி, பக். 368, விலை 250ரூ. இந்த நாவல் 2007ம் ஆண்டின் சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது. 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அந்தக் காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும் ஓர் அற்புதச் சித்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில்தான், இந்தியப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார சமூக விடுதலையைக் கனவு காணும் துணிச்சல் பெற்றனர். நாவலில் வரும் […]

Read more

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக். 544, விலை 500ரூ. இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல்களை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இனம் பிரித்து தொகுத்தளித்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின், பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் படிப்பதுவே ஒரு சுவையான அனுபவமாகத்தான் இருக்கிறது. பல தலைப்புகளை உட்பிரிவாகவும் பிரித்து, அதில் அடங்கக்கூடிய பாடல்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக இசைக்கருவிகள் என்ற தலைப்பில் தோல் இசைக்கருவிகள், துளை இசைக்கருவிகள், நரம்பு இசைக்கருவிகள், […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more
1 6 7 8 9