மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி […]

Read more

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம்

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம், ஸ்ரீகுளத்து ஹரிஹர புத்ர சர்மா, பக். 380, விலை 200ரூ. கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள நூல் இது. வேதங்கள் இந்த நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் ஆவணம். காலம்காலமாக போற்றப்படும் வேதத்தின் ஒரு பகுதியான, கிருஷ்ண யஜுர் வேத தைத்ரியச் சிறப்புகளை விளக்குகிறது இந்த நூல். தைத்ரிய யஜுர்வேதத்தில் உள்ள சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், மந்திரபிரச்னம், அனுவாகம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ள, யாஜ்யா, ப்ரோநுவாக்யா போன்ற மந்திரங்களின் விவரங்கள், பிரதீகம் என்ற […]

Read more

வையை தடம் தேடி

வையை தடம் தேடி, ப. திருமலை, இரா.சிவக்குமார், பட்டறிவு பதிப்பகம், பக். 106, விலை 120ரூ. வைகையின் தடம் தேடி புறப்பட்டு, அத்தனை தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்தி உள்ளனர், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் திருமலை, சிவக்குமார். வைகையை தெய்வமாக மதித்து, அதற்கு படையல் செய்தனர் அன்றைய மதுரை மக்கள். நற்றிணையும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும் கொண்டாடிய வைகை, இன்று நாறுதே என்ற பெருங்கவலையுடன் நூலாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். சிங்கள கதையிலும் வைகை பற்றி குறிப்பிட்டிருப்பதாக கூறும் ஆசிரியர், இன்று வேதிக்கழிவால் வைகை படும் வேதனையையும் விவரிக்கின்றனர். வைகையின் […]

Read more

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள்

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள், தொகுப்பு ஜெயசிம்ஹன், எழில்முத்து. ஜே.கே. வாசகர் வட்டம் வெளியீடு, விலை 150ரூ. ஜே.கே.வின் பார்வை கல்பனா பத்திரிகை 1979ல் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இது சிறுகதை, குறுநாவலுக்கு முக்கியத்துவம் தந்த பத்திரிகை. இதில் அவர் எழுதிய வலுமையான கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் ஆகியவை இடம்பெற்ற பக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. கலைஞர் கருணாநிதியை ஜெயகாந்தன் சந்தித்து எடுத்த நேர்காணல் மிகமுக்கியமானது. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு அர்த்தமுள்ள கேள்விகள் என்ற பெயரில் அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளைப் படிக்கும்போது […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more

நம்மோடுதான் பேசுகிறார்கள்

நம்மோடுதான் பேசுகிறார்கள், சீனிவாசன் – பாலசுப்ரமணியன், வம்சி புக்ஸ், விலை 200ரூ. மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம் மொழியை ஊமையாக்கும் ஓவியம் ஓவியத்தைப் பேச வைக்கும் மொழி -இது எனது ஒரு கவிதை. இந்தக் கவிதைக் கருவுக்குக் காரணமாக இருந்தவை நண்பர் சீனிவாசனின் ஓவியங்கள். அவர் ஒரு சிறந்த ஓவியர். சுதந்திரமான தன் மனதை இன்னும் சுதந்திரமாகக் கித்தானில் பறக்க விடுபவை அவரது வண்ணங்களும், கோடுகளும். ஓவியர் சினிவாசனும் அவரது சக ஓவியரும் நண்பருமான பாலசுப்ரமணியமும் ஓவியம் சார்ந்து உரையாடிப் பகிர்ந்து கொண்ட […]

Read more

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு, யமுனாராஜேந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 300ரூ. பல்வேறு காலகட்டங்களில் எழுத்தாளர் யமுனா ராஜேதிரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் நடைபெற்ற சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை ஓர் ஆய்வுரை என்றே சொல்லலாம். ஜெயகாந்தனின் கருத்துலகம், எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் விருட்சம் போன்றவை யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- நபி நேசம் நம் சுவாசம், மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை […]

Read more

எத்திசையும் தமிழ்

எத்திசையும் தமிழ், திருக்குறள் பதிப்பகம், விலை 200ரூ. இந்நூல் சேர நாடாக இருந்த கேரளத்தின் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட இலக்கிய வரலாற்றை முரசறைந்து தமிழுலகிற்கு அறிவிக்கின்றது. சங்க காலத்திலிருந்து விடுதலைக்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் படைப்புகளை வகுத்தும், தொகுத்தும் ஆய்வு செய்கின்றது. மலையாள நாட்டில் தாய்த்தமிழ் பொலிவோடு சிறப்புற்றிருப்பதைக் கண்டறிகின்றது. கேரளத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவுகள் விளக்கப்படுகின்றன. கேரளத்தின் இன்றைய விழாக்களான திருவோணமும், திருவாதிரையும் தமிழரின் பழம்பெரும் விழாக்கள் என சுட்டப்படுகின்றது. கேரளத்தில் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள், அகத்தியம், […]

Read more

பெண்களும் நலவாழ்வும்

பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ. மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   […]

Read more

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள், பி.வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 50ரூ. நடிக மன்னன் பி.யூ. சின்னப்பா, திரைப்பட டைரக்டர் ப. நீலகண்டன், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழா ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே மூவரின் சிறப்பை விவரிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார் பி. வெங்கட்ராமன். இவரும் புதுக்கோட்டைக்காரரே! இன்னும் நிறைய தகவல்களுடனும், படங்களுடனும் இதை பெரிய புத்தகமாக வெளியிடலாமே! நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- சிவரகசியம், கீர்த்தி, சங்கர் பதிப்பகம், […]

Read more
1 4 5 6 7 8 9