சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more

நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ. பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. […]

Read more

அண்ணா அருமை அண்ணா

அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக […]

Read more

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 416, விலை 330ரூ. தமிழக அரசின் அனைத்து துறைகள் குறித்து முழு விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி, வெளிநாட்டு கல்வி வழிகாட்டி என்று மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளவர் இந்நூலாசிரியர். அதே முறையில் இந்நூலையும் உருவாக்கியுள்ளார். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றே, ஒரு கிராமத்தை […]

Read more

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன், ஆலன் ரமோன் கிளின்ட்டன். மவுனப் படங்களின் சகாப்தம் சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான நூல், பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆலன் ரமோன் கிளின்ட்டன் என்பவர் எழுதிய ‘தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்!’ கடந்த 1920களில் அமெரிக்காவின் மவுனப் படங்கள், உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பார்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்ற முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கீட்டன். உலகப் போரால் தங்களது வாழ்க்கையை இழந்து வெறுப்பிலும் வேதனையிலும் […]

Read more

கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ. செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ. தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம்

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம், பா. சசிக்குமார், விஜயா பதிப்பகம், பக். 248, விலை 160ரூ. சேர மண்ணை சேர்ந்தவர் சாணக்கியர்? சேர மண்டலத்தின் வரலாறு, இலக்கியம், ஆன்மிகப் பெருமைகளை காலவாரியாக தொகுத்து, வரலாற்றுக் களஞ்சியமாக மிகவும் சுவையுடன், இந்த நூல் வழங்குகிறது. ‘சேரலரே’ இன்றைய, ‘கேரளர்’ என்கிறார், நூலாசிரியர். இந்திய தேசமெங்கும் தமிழ் பரவியிருந்தது. இதற்கு ஆதாரமாக, இன்றைய பல பெயர்கள், தமிழிலிருந்து வந்தவையே. பேலாப்பூர் (வேளார்புரம்), பேலூர் (வேள்ஊர்), பெல்காம் (வேள்அகம்), பெல்லாளன் (வெள்ளான்) என்று ஆதாரத்துடன் கூறுகிறார். உலக வர்த்தகத்தில், […]

Read more
1 5 6 7 8 9