பொன்னியின் செல்வன் ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ. ‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் […]

Read more

அறிவியல் பயணம் 2016

அறிவியல் பயணம் 2016, பேரா.கே. ராஜு, மதுரை திருமாறன் வெளியீட்டகம், விலை 120ரூ. அறிவியல் பார்வையுடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்கிற ஆவலில் விளைந்த 50 அறிவியல் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மாறிவரும் மனித வாழக்கைக்கேற்ப அறிவியலின் அற்புதங்களை எவ்விதம் நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரைகள் இவை. ‘செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…?’, ‘சிம்பன்ஸிகளுக்கு சமைக்கத் தெரியுமா?’ ‘தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மிஷின்’, ‘சிறுநீரிலிருந்து மின்சாரம்’ என ஒவ்வொரு கட்டுரையும் நம்மை தலைப்பிலேயே கவனிக்க வைக்கின்றன. நன்றி: தி இந்து, 24/6/2017.

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஆயிஷா இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், விலை 60ரூ. சிறுவர்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எளிய மொழியில் தரும் ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள அறிவியல் நெடுங்கதை இது. நம் தேசத்தை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்மையாளும் வெறியோடு வருகிறார்கள். அவ்வாறு நுழையும் அந்நிய சக்திகளை, அறிவியல் ஆற்றலின் சக்தியோடு குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் போராட்டமே இந்தக் கதை. குழந்தைகளின் அறிவியல் சிந்தனைக்கும் தேசபக்திக்கும் ஒரு ‘சலாம்’ போட வைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தி […]

Read more

மன்னார்குடி இறைபணி வரலாறு

மன்னார்குடி இறைபணி வரலாறு, தந்தை எம்.எல். சார்லஸ், புனித யோசேப்பு ஆலயம் வெளியீடு. பல்வேறு மதங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவுடன் தழைத்து வளர்ந்திருக்கும் கலாச்சாரத்தைக் கொண்ட ஊர் மன்னார்குடி கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. மன்னார்குடிக்கு கிறிஸ்தவம் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் மன்னார்குடி பாமணி ஆற்றங்கரையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சிறப்புகளை வரலாறாக, தனது சீரிய முயற்சியின் பலனாக, எல்லோர் முன்னும் வைத்திருக்கிறார் பங்குத் தந்தை எம்.எல். சார்லஸ். நன்றி: தி இந்து, 24/6/2017.

Read more

திரைப்பட ரசனையின் வரலாறு

திரைப்பட ரசனையின் வரலாறு, இண்டியாஸ் ஃபிலிம் சொசைட்டி மூவ்மெண்ட், த ஜர்னி அண்ட் இட்ஸ் இம்பாக்ட், வி.கெ.செரியன், சேஜ் பப்ளிகேஷன்ஸ், விலை 895ரூ. திரைப்படங்கள் குறித்த ரசனையை மக்களிடையே பரப்ப முனைந்த திரைப்படக் கழகங்களே இந்தியாவில் மாற்றுத் திரைப்பட இயக்கம் தோன்றுவதற்கான அடித்தளமாக இருந்தன. பாம்பே(1940), கல்கத்தா (1947), மதராஸ்(1957), திருவனந்தபுரம்(1965) ஆகிய முன்னோடி திரைப்படக் கழகங்கள் உலகத்தின் சிறந்த திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற உலகம் போற்றிய திரைப்பட இயக்குநர்களையும் உருவாக்கித் தந்தன. இந்தியாவில் சர்வதேச […]

Read more

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ், தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384. ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க வேண்டுமென்ற […]

Read more

அகநானூறு

அகநானூறு, ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், பக்.374, விலைரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன.‘கம்பர் விலாசம் 39‘; ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், 91 முதல் 400 […]

Read more

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்

யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்,   குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை. இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் […]

Read more

சகத்திப்பூ

சகத்திப்பூ, ஆம்பல் கனகராஜ், தீவிகா பதிப்பகம், விலை 150ரூ. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கும் நாவல். ஒவ்வொரு நாளும் நாளைய பிழைப்பைத் தேடி உண்மையாய் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி இந்த நாவலில் ஆம்பல் கனகராஜ் சித்தரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள், காளீஸ்வரி பதிப்பகம், விலை 110ரூ. மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பைத் தரக்கூடியவை. அந்த சித்தர்கள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மூலிகை மருத்துவ […]

Read more

பிரபஞ்ச இரகசியங்கள்

பிரபஞ்ச இரகசியங்கள், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 208, விலை 200ரூ. அண்டசராசரங்கள் என்று கூறப்படும் சூரியன், சந்திரன், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விண்வெளிக்கற்கள், ஆகாயம், கேலக்ஸி… என்று இயற்கையின் ஒட்டுமொத்த தொகுப்பான பிரபஞ்சத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். பிரம்மாண்டமான இப்பூமியே இப்பிரபஞ்சத்தில் ஒரு அணு அளவிலான புள்ளிதான். ஒன்றுமே இல்லாத இந்த வெட்ட வெளியில் சுமார் 1370கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய அணுத்துகளின் பெரு வெடிப்பு (பிக்-பேங்) மூலம்தான், கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. […]

Read more
1 2 3 4 5 9