பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் வி. நடராஜன், அ. பன்னீர்செல்வம், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கும் இந்த நூல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்ட, பி.எட்., புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பொருள் அறிவியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் நூல். –மயிலை கேசி. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

திருவாசகம்

திருவாசகம் – மூலமும் உரையும், உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.552, விலை ரூ.200. திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, ‘பா39’ வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல். சிவபுராணத்தில்,‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 39’ என்பது திருத்தமான […]

Read more

புரட்சியாளன்

புரட்சியாளன், ஆல்பர்ட் காம்யூ, ப்ரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், விலை 475ரூ. ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது. நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது. மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள். நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை, பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம்,  பக்.136, விலை ரூ.80. அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்! நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் […]

Read more

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்,  ப. முருகன், கங்காராணி பதிப்பகம்,   பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாப்ஃட் நிறுவனம் தயாரித்துள்ள ‘சொல்39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஒüவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை […]

Read more

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ. மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி. இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Read more

நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.104, விலை 55ரூ. நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார். சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு […]

Read more

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள்

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள், மண்னை சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 50ரூ. அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர். மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர் முதல், பாமரர் வரை மயங்குவர். அவரது பேச்சை கேட்க, சில சமயங்களில் கட்டணம் வைத்தனர். அப்படி இருந்தும் மக்கள் பணம் கட்டி, பெருமளவில் பேச்சைக் கேட்க வந்தனர். மேடையில் பேசும் போதும், ஏடுகளில் கட்டுரைகள் எழுதும் போதும், சொல்ல வந்த கருத்தை எளிதில் விளக்குவதற்காக […]

Read more

கொடுமைகள் தாமே அழிவதில்லை

கொடுமைகள் தாமே அழிவதில்லை, செ. கணேசலிங்கம், குமரன் புத்தக இல்லம், விலை 300ரூ. தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செ. கணேசலிங்கன் தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர். ஈழத் தமிழ் எழுத்தாளரான அவரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1974-ல் வெளியானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2015?ல் இந்தத் தொகுப்பு மீளச்சு கண்டது. ழுபதுகளில் இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களைச் சித்தரிக்கும் 17 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் பல கதைகள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தி […]

Read more
1 2 3 4 9