இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம்

இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம், லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட்., பக்.272, விலை ரூ.150. ‘கோயில்‘ என்றாலே வைணவர்களுக்கு ‘ஸ்ரீரங்கம்‘தான். இக்கோயின் சிறப்பை ‘ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்; அம்புயத்தோன் அயோத்தி மண்ணில் களித்த கோயில்; செழுமறையின் முதலெழுத்துச் சேர்த்த கோயில்; தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோயில்; திருவரங்க மெனத் திகழுங் கோயில்தானே‘ என அதிகார சங்கிரகம் போற்றுகிறது. ஸ்ரீரங்கமே வைணவர்களுக்குப் பெரிய கோயிலாகும். ‘பேரும் பெரியது, ஊரும் பெரியது‘ என்று சொல்வது வழக்கம். காரணம் ‘கோயில் -பெரியகோயில்; பெருமாள் – […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. வருடம் 365 நாட்களும் வாசகர்களை சிந்திக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கக்கூடிய 365 குட்டிக்கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு கதையைப் படித்தால் போதும். ஒரு வருடம் ஓடிவிடும். கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி,8/11/2017.

Read more

குளச்சல் போர்

குளச்சல் போர், எஸ்.ஆன்றனி கிளாரட், என்.டி. தினகர், ஆர். பிரேம்குமார், நகர்வு வெளியீட்டகம், விலை 100ரூ. குளச்சல் போர் என்பது, திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கும் டச்சு கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே நடந்த மோதல் ஆகும். 1740-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, டச்சு கப்பல்களில் இருந்து குளச்சல் நகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியதில் இருந்து, குளச்சல் போர் தொடங்கியது. வரலாற்று முக்கியம் பெற்ற இந்தப் போரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இந்த நூலில் உள்ளன. விறுவிறுப்பான நாவலைப் போல […]

Read more

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்)

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்), இடைமருதூர் கி.மஞ்சுளா, செம்மூதாய் பதிப்பகம், பக்.232, விலைரூ.100. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சேரமான் பெருமாள் நாயனாரின் "திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். உயிர்கள் எல்லாம் […]

Read more

சட்டப் பேரவையில் எனது பணிகள்

சட்டப் பேரவையில் எனது பணிகள். டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக்.360, விலை ரூ.255. மருத்துவரான நூலாசிரியர், 1996-2001, 2006-2011 ஆகிய பத்தாண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அப்போது அவர் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து ஆற்றிய உரைகளும், அதற்கான பதில்களும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டு காலத்தில் பள்ளிப்பட்டு தொகுதியில் அவர் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சாதாரண மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகளை […]

Read more

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, மணல்வீடு வெளியீடு, விலை 90ரூ. உதிரி மனிதர்கள். ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில் சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள். உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள். சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கறிர்கள். சமயங்களில் வெறுமனே இருக்கிறார்கள். […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. கவி அனுபவம் ‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை ஈடு செய்ய முடிவதில்லை நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை. அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டு பிச்சைக்காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டனின் குரவளையை நெரிக்கும் மௌனம், தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என […]

Read more

நாயகிகளின் நாயகன்

நாயகிகளின் நாயகன், சுரேஷ் பிரதீப், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. மாசிலன் என்ற தாத்தாவின் சாவுக்குச் செல்லும் பேரனின் மனநிலையை விவரிக்கும் கதையில் தொடங்கும் இத்தொகுப்பு ஊருக்கு அம்மாவுடன் செல்லும் பேரன் தாத்தா வெட்டிய குளத்தை ரசிக்கும் ஆலரசு குளம் என்ற சிறுகதையில் முடிவடைகிறது. இந்த இரண்டு ஊர்திரும்புதல்களுக்கு இடையே சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை உலகம் நம்மை நோக்கி விரிந்துகிடக்கிறது. தஞ்சைப் பகுதிக்கு உரிய வசைச்சொற்களும், உரையாடல்களும் நிறைந்த கதைகள். எல்லா கதைகளிலும் ஊரும் அங்கிருக்கும் உறவுகளின் ஏதோவொரு வகைப்பட்ட உணர்வுகளும்தான். அம்மாவிடம் இருந்து […]

Read more

நூறு நிலங்களின் மலை

நூறு நிலங்களின் மலை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. இந்தியாவின் குறுக்கே நூலாசிரியரும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008 இல் மேற்கொண்ட பயணத்தின் பதிவு இந்த நூல். விமானத்தில் பெங்களூரில் ஏறி தில்லியில் இறங்கி மற்றொரு விமானத்தில் ஸ்ரீநகரை அடைவதாகத் தொடங்குகிறது பயணம். சோனாமார்க், கார்கில், ஸீரு சமவெளி, பென்ஸீலா கணவாய், லே நகரம், முல்பெக், நுப்ரா சமவெளி, யாராப்úஸா ஏரி, திங்கித் மடலாயம், சங்லா கணவாய், ஷே நகரம், மூர் சமவெளி, இமயமலைப் பகுதிகள், லே – மணாலி நெடுஞ்சாலை என […]

Read more

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்,  ஆ.மாதவன், வாலி பதிப்பகம், பக்.160, விலை ரூ.110. மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் […]

Read more
1 3 4 5 6 7 9