ஸ்ரீராஜ மாதங்கி

ஸ்ரீராஜ மாதங்கி, டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத் சங்கம், பக். 320. தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், அவை வைர மாலையாக, வரலாற்றுப் பெட்டகமாக, ‘ஸ்ரீ ராஜ மாதங்கி’ அமைந்திருக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் கட்டமைப்பு உணர்த்தும் தத்துவங்கள், இசை பாடும் துாண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, திருவிழாக்கள், தமிழ் சங்க வேந்தர்கள் பற்றி ஒவ்வொரு அடியாக நமக்கு விளக்கும் […]

Read more

கம்பன் கண்ட இராமன்

கம்பன் கண்ட இராமன், கீரனூர் ராமமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி, பக். 271. சொற்பொழிவுகள் மூலம், கம்பனின் கவிநயத்தையும், ராமனின் புகழையும் பரப்பி வந்த நுாலாசிரியர், கவிதையின் உச்சத்தைத் தொட்ட கம்பனின் கவிதைகளை இடையிடையே இணைத்து, எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் நுாலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். கம்ப ராமாயணக் கடலில் மூழ்கி, கம்ப ராமாயணத்தையே கதையாகவும், கம்பன் கவிதைகளோடும் ‘கம்பன் கண்ட ராமன்’ என்னும் பெயரில் நுாலை வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயண கதையை தெரிந்து கொள்ள விரும்புவோர், இதைப் படித்தால் […]

Read more

பல்லவப் பேரழகி

பல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை, வ.உ.சி நூலகம், பக்.1328, விலை ரூ.1500. ‘வெற்றிக்கு விளக்கம் சொல்லக் கூடாது; தோல்வி என்றால் ஏன் தோற்றோம் என சொல்ல ஆளே இருக்கக் கூடாது‘ என்ற பிரபல வாசகத்துக்கு சொந்தக்காரர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இன்று அவர் குறித்து பல விமரிசனங்கள், விவாதங்கள் – பதிலளிக்க அவர் இல்லை. அப்படிப்பட்ட பிரபாகரனின் வரலாற்று நூலினை இரு பிரிவாக படைத்திருக்கிறார்கள். முற்பகுதி பிரபாகரன் வரலாறு – பிற்பகுதி ஆவணங்கள். […]

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள்,  வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், பக்.576, விலை ரூ.450. தமிழகத்தில் விவசாயத்துக்கு போதுமான நீரின்றி, குறைந்த நீரைப் பயன்படுத்தி இப்போது விவசாயம் செய்து வருகின்றனர். இந்நூல் 1956-க்கு முன்பு வரை தென்னிந்தியாவில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தந்த மண்ணுக்குரிய விவசாய முறைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் நூலாசிரியர் கோவை விவசாய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னிந்திய அளவிலான பயிர்கள் குறித்த நீண்ட ஆய்வை மேற்கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி முறைகள், நெல், கரும்பு, […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும்,  ஓல்கா பெரோவ்ஸ்கயா, தமிழில் – ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 260, விலை ரூ.180. வீடுகளில் ஓநாய், புலி, கழுதை, குதிரை, நரி, மான் ஆகியவற்றை சிறு குட்டிகளில் இருந்து வளர்ந்து வருவதைப் பற்றிய வித்தியாமான, சுவாரசியமான அனுபவங்களை இப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகளும் இந்த விலங்குகளைக் குட்டியில் இருந்தே வளர்ப்பதும், அவற்றுடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் வீட்டுச் சூழ்நிலையில் வளரும்போது […]

Read more

சிந்தித்த வேளையில்…

சிந்தித்த வேளையில்…, சி.சைலேந்திரபாபு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.232, விலை ரூ.200. மனம், மாணவர், இளைஞர், பெற்றோர், அறிவியல், ஆசிரியர், வாழ்க்கை, போராட்டம், கல்வி, விளையாட்டு, பொது ஆகிய 11 பிரிவுகளில், மண்ணில் எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இவற்றையெல்லாம் இனிமேல் கடைப்பிடிப்பேன் என சபதம் செய்து கொள்பவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது? தொடர்ந்து கடைப்பிடிக்க எப்படித் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்? என்பது நூலின் முதல் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவில், […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம், கே.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், உடலில் ஏற்படும் சிறு, சிறு வியாதிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நிலைமை உள்ளது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் மூலமாகவே அந்த நோய்களை விரட்டலாம் என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி உள்ளது. மேலும், எந்த வியாதிக்கு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006865.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

கவிதைப் பேழை

கவிதைப் பேழை, ஆ.கோ.குலோத்துங்கன், குகன் பதிப்பகம், விலை 350ரூ. காதல், அழகு, மழை, தனிஈழம் என மொத்தம் 82 தலைப்புகளில் 350க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கற்பனையில் உதித்த ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு. கருத்து மணம் பரப்பும், தமிழ் இன உணர்வை உரசும் கவிதைகள் சமகால நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது. கண்ணியம் இதழில் வெளிவந்த கவிதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027068.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 4 5 6 7 8