மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது. இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து […]

Read more

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 1670ரூ. சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத் தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும் அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் – ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அக்னி நதி

அக்னி நதி, குல் அதுல்ஜன் ஹைதர், தமிழில் சௌரி, என்.பி.டி. வெளியீடு. ‘அக்னி நதி’யை வாசித்துவிட்டு அந்நாவலில் வரும் கதாபாத்திரமான கௌதம நீலாம்பரனாகத் தன்னை நினைத்துக்கொண்டுத் திரிந்தவர்கள் ஏராளம் பேர். இந்த நாவல், உருது இலக்கியத்துக்குப் புதிய பாணியை அளித்தது. தலைசிறந்த நாவலாசிரியாக ஹைதர் கருதப்பட்டதற்கு இந்நாவலின் படைப்பாற்றல் மிக முக்கியமான காரணம். பல காலமாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’. நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம், விலை 1000ரூ. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விதுர நீதியில் நிர்வாகம்

விதுர நீதியில் நிர்வாகம்,  நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், பக்.400, விலை ரூ.325. ஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு. பழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், […]

Read more

நீலகண்டப் பறவையைத் தேடி

நீலகண்டப் பறவையைத் தேடி, அதீன் பந்த்யோபாத்யாய, தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, என்.பி.டி.வெளியீடு, இதுவரை பழக்கப்பட்ட வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறு தளத்துக்கு அழைத்துச்செல்லும் நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’. எல்லாவற்றிலும் வேகத்தைத் தேடும் மனதைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசிக்கச்சொல்லும் இந்நாவலில் இயற்கை ஒரு பாத்திரம்போல வலம்வருகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ரம்மியமான மனநிலைக்கு இட்டுப்போகும் இந்நாவலை உங்கள் கட்டாய வாசிப்புப் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. சுவர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி ஒவ்வொரு மாநிலவாரியாக இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் மூத்த ஓவியர் அரவக்கோன். பல்வேறு விதமான ஓவிய பாணிகள், அதன் வரலாற்றுப் பின்னணி என நீண்ட விவாதங்களையும் இந்தப் புத்தகத்தில் முன்னெடுத்திருக்கிறார். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737441.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல், பாதசாரி, தமிழினி பதிப்பகம், விலை 70ரூ. ‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது நன்றி: தி இந்து, 10/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள்,சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.150. செல்லம்மாள் பிறந்த கடையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம், அங்குள்ள சான்றோர்களிடம் கேட்டறிந்த தகவல் மூலம் இந்தப் படைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர். மகாகவியின் வாழ்க்கையில் ஆதார சுருதியாக இருந்தவர் செல்லம்மாள். ஏறத்தாழ 24 ஆண்டுகளே அவர்களுடைய மணவாழ்க்கை. அதிலும் அவர்கள் சில சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பிரிந்திருந்தார்கள். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் செம்மை பற்றியும், பாரதியின் வாழ்வில் செல்லம்மாள் ஆற்றிய முக்கியமான பங்கை பற்றியும் நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். பாரதியின் ஒரு பழக்கம் எப்படி […]

Read more

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை

தொ.பரமசிவன் நூல்கள் வரிசை, காலச்சுவடு வெளியீடு, விலை 620ரூ. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும் பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 2 3 4 5 7