தத்வமஸி

தத்வமஸி, சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. தத்வமஸி என்ற வார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் செய்துள்ள […]

Read more

புகழ் மணக்கும் அத்தி வரதர்

புகழ் மணக்கும் அத்தி வரதர், க.ஸ்ரீதரன், நர்மதா வெளியீடு, விலை: ரூ.60 முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், […]

Read more

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் […]

Read more

மருந்தும்.. மகத்துவமும்…!

மருந்தும்.. மகத்துவமும்…!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029565.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1)

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1) – உரையாசிரியர்: சிவ.சண்முகசுந்தரம்; பாரி நிலையம், பக்.1648; விலை ரூ.1500; சிவபெருமானின் மூன்று திருக்கண்களுள் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகப் போற்றப்படுகிறது. "வடமொழியில் உள்ள பதிணென் புராணங்களுள் சிவபெருமானுக்குரியவை பத்துப் புராணங்கள். அவற்றுள் ஒன்று கந்தபுராணம். அதிலுள்ள ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டம் சிவரகசிய காண்டம். அதனுள் உள்ள நமது வரலாற்றைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக' என முருகப்பெருமான், கச்சியப்ப சிவாசாரியார் கனவில் தோன்றி கட்டளையிட்டும், முதலடியும் (திகடச் சக்கரம்) எடுத்துக் […]

Read more

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு

கஸ்தூர்பா ஒரு நினைவுத்தொகுப்பு, சுசிலா நய்யார், தமிழில்-பாவண்ணன்; சந்தியா பதிப்பகம், பக். 160;  விலைரூ.160. தேசப்பிதா காந்தியடிகளைப் பற்றி அறிந்த அளவுக்கு அவரது வெற்றிக்குபின்புலமாக இருந்த கஸ்தூர்பா குறித்து நாம் அறிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கஸ்தூர்பா குறித்த மிக அரிய உருக்கமான பல தகவல்களை வெளிப்படுத்தும் நூலாக இதுஅமைந்துள்ளது. மிகப்பெரியதலைவரின் மனைவியாகவும், நண்பராகவும், குழந்தைகளுக்கு நல்ல மாதாவாகவும் அவர் பல்வேறு அவதாரம் எடுத்திருப்பதை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் சுசிலா நய்யார். கஸ்தூர்பாவுடன் ஆசிரமத்தில் சிறுவயது முதலே தங்கிய நூலாசிரியர், கஸ்தூர்பாவின் தாய்மை உணர்வை ஒரு வீட்டுச் […]

Read more

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230 ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் […]

Read more

கானல் நீர் காட்சிகள்

கானல் நீர் காட்சிகள்-(தினமணி – சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள்): வானதி பதிப்பகம், பக். 160; ரூ.120;, தினமணி – சிவசங்கரி சிறுகதைப் போட்டி (2018) -இல் பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு இந்நூல். தொழில் நுட்பம் அசுர வேகமாக வளர்ந்துள்ள இன்றையச் சூழ்நிலையில் வாட்ஸ் அப் மூலம் இருவரிடையே நடக்கும் பதிவுகளில் பெண்கள் எப்படி எளிதில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை உரையாடல்களின் மூலம் நம் கண் முன்னே காட்டுகிறது முதல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்ட கதை. மாதவிலக்கின்போது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி […]

Read more

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்,  கு.கணேசன், காவ்யா, பக்.445, விலை ரூ.450. நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை கூறுவது போல் […]

Read more
1 3 4 5 6 7 8