ஆரியர் திராவிடர் சங்கமம்

ஆரியர் திராவிடர் சங்கமம், ஜி. கிருஷ்ணசாமி, புதுயுகம் பதிப்பகம், மதுரை, விலை 275ரூ. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த உருவாக்கியது ஆரிய – திராவிட இனக்கொள்கை. அது அரசியல் தந்திரம். உண்மையில்லை என்று பிரிட்டிஷ் வானொலி நிறுவனம் (பி.பி.சி.) ஆவணப்படத்தி உள்ளது. ஆனால் அந்த பிரிவினை கொள்கையை இன்றும் தமிழகத்தில் பல அறிஞர்களும், அரசியல்வாதிகளும் பேசி வருகின்றனர். அது இன்றுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இடையூறாகவே உள்ளது. அந்த நிலை மாறி, உண்மையை உணர்ந்து, இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம்

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, வீடியா மாஸ்டர்ஸ், பக். 358, 404, 472, விலை 900ரூ (3 பாகங்கள் சேர்த்து). இந்த நூலில், 16 பர்வங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பர்வத்தின் பொருளடக்கமும் நூலின் முன்பகுதியில் இருப்பதால், நமக்குத் தேவையான பகுதியை மட்டும் படித்து அறியமுடிகிறது. சூரியனின் தேரோட்டி அருணனின் பெருமையும் (பக். 41), கவுரவர் நூறு பேரின் பெயர்கள் (பக். 77), சகுந்தலையின் கதை (பக். 101), அறுவகை வாரிசுகளின் பெயர்கள் (பக். 147), ஜராசந்தன் கதை (பக். 286), யட்சனின் […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை. கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, […]

Read more

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும், ஜோஷ்வா கலபாடி, டி.அம்புரோஸ், ஜெயசேகரன், தமிழில் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 640, விலை 300ரூ. சென்னையில் கிறித்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மூன்றும் முதன்மைக் கல்லூரி துவங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி 1940ல் துவங்கப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி, 1842ல் துவங்கப்பட்டது. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வரலாறு ஆங்கிலத்தில், 2010ல் வெளியிடப்பட்டது. அது, தற்போது தமிழில் வெளியாகி உள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது, கல்லூரி வரலாறு மட்டும் அல்லாமல், கல்வியின் வரலாறும் வெளிப்படுகிறது. இந்தியாவின் […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழை மறக்காத தமிழர் அரிசோனா மகாதேவன். கம்பனில் தோய்ந்தவர். அதேநேரம், வடமொழியிலேயே வால்மீகியையும் வாசித்தறிந்தவர். எனவே, வால்மீகியிலிருந்து எங்கெல்லாம் கம்பன் வித்தியாசப்படுகிறான், மூலக்கதையின் சம்பவங்களை தமிழ்ப்பண்பாடு கெடாமல் எப்படியெல்லாம் மாற்றி உருவகப்படுத்துகிறான் என்ற அருமையான ஒப்பீட்டு நோக்கில், தாம் ஆய்ந்து தெளிந்த விஷயங்களை, நான்கு கட்டுரைகளில் வடித்தெடுத்து வழங்கியுள்ளார். அகலிகை சாபவிமோசனம், ராமன் – சீதை முதல் சந்திப்பு, வனவாச காலத்தில் நிகழ்ந்த மாயமான் காணல், […]

Read more

கோ.கேசவனின் திறனாய்வாளுமை

கோ.கேசவனின் திறனாய்வாளுமை, முனைவர் ஜெ. கங்காதரன், வையவி பதிப்பகம், பக். 264, விலை 150ரூ. முப்பத்து மூன்று நூல்கள் படைத்து, தமிழ் திறனாய்வு உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் கோ. கேசவன். பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும் செயற்பட்ட அவரது திறனாய்வு முறைமைகளைத் திறம்பட ஆய்வு செய்கிறது இந்த நூல். தமிழ்த் திறனாய்வு வரலாற்றையும், அந்த வரலாற்றில் கோ.கேசவன் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டி, மார்க்சிய இயங்குதளத்தில் அவரது திறனாய்வுக் கோணங்கள் அமைந்ததை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். முனைவர் பட்ட ஆய்வு நூல் என்பதால், மேற்கோள்களின் […]

Read more

காஷ்மீர் அமைதியின் வன்முறை

காஷ்மீர் அமைதியின் வன்முறை, கவுதம் நவ்லாகா, தமிழில் வெண்மணி அரிதரன், விடியல் பதிப்பகம், விலை 25ரூ. காஷ்மீருக்குள் எட்டிப்பார்க்கும் ஜன்னல் குடும்பத்துக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரச்னைகள்! நாட்டு நிர்வாகமும் குடும்ப நிர்வாகம் போன்றுதான். காஷ்மீரில் மக்கள் ராணுவத்துக்கு எதிராகக் கல்லெறியும் போராட்டம் நடத்தினார்கள் என கேள்விப்படும்போது ராணுவத்துக்கும் மக்களுக்குமான பரஸ்பர நம்பிக்கையைப் பற்றிய சந்தேகம் நமக்கெல்லாம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் கவுதம் நவ்லாகா காஷ்மிரின் உள்ளே நடப்பவற்றை நமக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு குடும்ப ஜனநாயகத்தின் அம்சங்களாக அந்த நிகழ்வுகள் இல்லை. கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்பைப் […]

Read more

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் என்ற பெயர் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அகராதியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனெனில் பெப்ரிசியஸ்தான் தமிழின் முதல் ‘தமிழ் – ஆங்கிலம்’ அகராதியான ‘பெப்ரிசியஸின் தமிழ் – ஆங்கிலம் அகராதி’யை (Fabricius’s Tamil-English Dictionary) உருவாக்கினார். ஜெர்மனியில் பிறந்தவரும், லுத்தரன் சபையைச் சேர்ந்தவருமான பெப்ரிசியஸின் இந்த அகராதி, வீரமாமுனிவரின் சதுரகாதி வெளிவந்து 47 ஆண்டுகளுக்குப் பின் 1779-ல் வெளியானது. இந்த அகராதியின் முதல் பதிப்பில் 9000 […]

Read more

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

கணினித்தமிழ்

கணினித்தமிழ், முனைவர் இல.சுந்தரம், விகடன் பிரசுரம், விலை 230ரூ. நம் அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளும் கணினி இல்லாமல் நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாள்வதற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது. வன்பொருள், மென்பொருள் தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்து கொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் எளிதில் புரியும் வகையில் முனைவர் இல.சுந்தரம் விரிவாக விளக்கிக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.   —- மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கதைகள், […]

Read more
1 24 25 26 27 28 336