இங்கே எதற்காக

இங்கே எதற்காக?, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட், சென்னை, விலை 150ரூ. உதாசீனங்களே சன்மானமாய் வெற்றி பெற்றவர்களின் வரலாறு எளிதில் பரவிவிடும். அதற்குப் பெரும் எத்தனிப்புகள் அவசியமல்ல. ஆனால் வெற்றிபெறும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் அவஸ்தையானவை. வெற்றிக்கும் மரியாதையும் தோல்விக்கு உதாசீனமுமே சன்மானங்கள். இந்த மாயம் புரிபடாதபோதும் படைப்பின் மீது கொண்ட தீராத காதலால் பல ஆளுமைகள் திரையென்னும் சுழலுக்குள் சிக்கிச் சுழல்கிறார்கள். அப்படியொரு ஆளுமை ஜெயபாரதி. தீவிரமான தமிழ் திரைப்படங்களில் ஈடுபாடு கொண்ட ஜெயபாரதி என்னும் பெயர் […]

Read more

தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்கா பயண அனுபவங்கள், கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. நட்பின் பெருமை பேசும் ஒரு பயண நூல் தென் ஆப்பிரிக்கப் பயண அனுபவங்கள் என்று தலைப்பிட்டிருந்தாலும் இந்த வித்தியாசமான நூலில் நீண்ட கலமாக நிலவிவருகிற நட்பின் பெருமையை நினைவு கூர்கிற பகுதிகள் அதிகம். 1970, 1990 ஆண்டுகளில் அறிமுகமான நண்பர்களை 2011, 12 ஆண்டுகளிலும் அதே பாசத்துடன் சந்திப்பது என்பது அதிகம் பேருக்குக் கிடைக்க முடியாத பேறு. அப்படிப்பட்ட அரிய வாய்ப்புகளைப் பெற்றதோடு அந்த நினைவுகளைப் படப்பதிவுகளாகவும் […]

Read more

இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக்ஹோல்மீடியா, சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லாப் பிரச்னைகளையும், சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். முல்லா, ஜென், புராண சம்பவங்கள்… […]

Read more

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. 4-5 மி.மீ. குறுக்களவுள்ள கோள வடிவிலான ‘நாணயங்கள்’ சிலவற்றைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. இவற்றின் எடை கூட ஒரு கிராமில் ஆறில் ஒரு பங்குக்கும் சற்றே கூடுதலாகத்தான் இருந்திருக்கிறது. 4மி.மீ. என்பது சராசரியான ஒரு நெல்மணியின் நீளம்தான் இருக்கும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே தமிழகத்தில் இப்படிப்பட்ட நாணயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். சின்னஞ்சிறியதாக இந்த மாதிரி ஒரு பொருள் நதிப்படுகைகள் போன்ற […]

Read more

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள்

கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள், தொகுப்பாசிரியர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ. புகழ்பெற்ற கவிஞர்களின் திரையிசைப் பாடல்களை ஆண்டு வரிசைப்படி தொடர்ந்து தொகுத்துவரும் தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து இம்முறை தொகுத்தளித்திருக்கும் நூல் கவி கா. மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள். கவி. கா. மு. ஷெரீப் 1949 முதல் 1963 வரை 14 ஆண்டுகளில் 30 படங்களில் 90 பாடல்கள் எழுதியுள்ளார். கா. மு. ஷெரீப்பின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பணம் பந்தியிலே குணம் […]

Read more

மின்புறா கவிதைகள்,

மின்புறா கவிதைகள், சீராளன் ஜெயந்தன், மெய்ப்பொருள் வெளியீடு, சென்னை, விலை 180ரூ. காலம்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, வாழ்வனுபவம் சார்ந்து வெளிப்படுத்தப்படும் படைப்புகளையே தமிழ்க் கவிதையும் நம்பியிருக்கிறது. சீராளன் ஜெயந்தனின் ‘மின்புறா கவிதைகள்’ நூலில் ஒரு குறுங்காவியம் உட்பட 56 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் வாழ்வின் அன்றாடப்பாடுகளை, அரசியலை, அதிவேகப் பாய்ச்சல் காட்டும் நவீன அறிவியலையும் கூட உள்வாங்கிப் பிரதிபலிக்கும் கவிதைகளாக இருக்கின்றன. எளிமை தனக்கே உரிய கம்பீரத்துடன் ஊடாடும் மொழியில் முதல் வாசிப்பிலேயே நம்முடன் நேரடியாக உறவாடக் கூடியவை இந்தக் கவிதைகள். “முதுகில் […]

Read more

படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும், உதயை மு. வீரையன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 125ரூ. வாசிப்பின் மீது வாஞ்சை கால ஓட்டத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது வாசகருக்கு மட்டுமல்ல, படைப்பாளருக்கும் அவசியமான ஒன்றே. வாசிப்பென்பது அனைவருக்கும் பொதுவென்றாலும், புத்தக வாசிப்பின் வழியே ஒரு வாசகர் அடைந்த அனுபவம் அவருக்குள்ளேயே தங்கிவிடுகிறது. ஒ ரு படைப்பாளியோ தனக்குள் அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசகருக்கே அனுபவக் கடத்தியாய்த் திருப்பியனுப்பும் வேலையைச் செய்துவிடுகிறார். அப்படியான எழுத்துக்களின் பதிவே உதயை மு. வீரையனின் ‘படித்ததும் […]

Read more

சத்யஜித் ரே

சத்யஜித் ரே, திரைமொழியும் கதைக்களமும், பிரக்ஞை பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. அறிந்துகொள்ளலாம் சத்யஜித் ரேயை இந்திய எதார்த்தத்தை முதல்முறையாக செல்லுலாய்டில் பிடித்த திரைக்கலைஞர் சத்யஜித் ரே. வணிக சினிமாவுக்கு மாற்றாகத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கும் திரைப்பட முயற்சிகளுக்குத் தூண்டுதலைத் தருபவராக மறைந்த பிறகும் சத்யஜித் ரேயின் படைப்புகள் இருந்துவருகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர் ரே. சத்யஜித் ரே என்னும் […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும் (நெய்தல் – 2014), பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. கௌசல்யாதேவி, மு. இராசேந்திரன், ஞா. சுஜாதா, க. பூபதி, இல. தங்கராஜ், செம்மூதாய் பதிப்பகம், பக். 556, விலை 400ரூ. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் ஆய்வு மாணவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு, தமிழிலக்கியவகைமைகள் தொடர்பான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் எதைச் சொல்வது? எதை விடுவது? பா. சம்பத்குமாரின் ‘பெண்மையைப் போற்றும் சங்க இலக்கியம்’ தொடங்கி, க. சதாசிவத்தின் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், பக். 248, விலை 130ரூ. தான் படித்து, பார்த்து, பழகிய செய்திகளை எல்லாம் தொகுத்து இந்த நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். நம் நாட்டுத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகள் முதல் எம்.ஜி.ஆர். வரையும், வெளிநாட்டு சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி ஓஷோ வரை அனைவரைப் பற்றியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை இந்நூலின் மூலம் நாம் அறியலாம். உதாரணமாக, சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான முகமது அலி […]

Read more
1 91 92 93 94 95 336