கண்ணதாசனின் வனவாசம்

கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ. கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு, முவப்பிக்கா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 45ரூ. சமச்சீர் பெற்ற வாழ்வு திருமணத்தில்தான் உண்டு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. திருமணம் செய்யாதவன் என் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்பது நபி மொழி. அந்த வகையில், இஸ்லாத்தில் திருமணம் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது? திருமண உறவில் ஆணுக்கும், பெண்க்கும் எத்தகைய உரிமைகளும், கடமைகளும் உள்ளன? திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரு மணம் கொண்ட திருமண வாழ்வில் என்ற இந்த நூலில் உடன்குடி […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார்

ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார், தந்தி பதிப்பகம் ,சென்னை, விலை 160ரூ. தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது ஆளுமைத்திறன்: பாதை தெரியுது பார் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? உணர்வுகளைக் கையாள்வது […]

Read more

மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

வரலாற்றுச் சுவடுகள்

வரலாற்றுச் சுவடுகள் (நான்காம் பதிப்பு), தினத்தந்தி பதிப்பகம், விலை 650ரூ. தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற வரலாற்றுச் சுவடுகள் நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது வரலாற்றுச் சுவடுகள். இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட ‘கியூ’வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. விடுதலைபெற்று 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுயசிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை என் 34 ஆண்டுக்காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன் என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா. முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வுயும் அகப்பட்டுத் தவிக்கிறதே? என்கிற ஆதங்கத்தொடு பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான். மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பல நூறு […]

Read more
1 89 90 91 92 93 336