நமது நடிப்புக்கலை செல்வங்கள்

நமது நடிப்புக்கலை செல்வங்கள், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சிறந்த டைரக்டரும், பட அதிபருமான முக்தா சீனிவாசன், சினிமா பற்றி புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது நமது நடிப்புக்கலை செல்வங்கள் பாகம் 1 என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய நடிகர் நடிகைகள் பற்றிய, சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு (வெள்ளையர் ஆட்சியின்போதுஇதுதான் உச்சநீதிமன்றம்) மெர்சி பெட்டிஷன் […]

Read more

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள்

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் எல்லை மீறும்போதுதான் எதிர்க்குரலாளர்கள் தோன்றுகிறார்கள். அத்தகைய சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பெரியார், லெனின், சேகுவாரா போன்றவர்களின் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை இந்த நூல் ஆராய்கிறது. அதோடு அந்தச் சமூகப் புரட்சியாளர்களின் குரலோடு, புதுச்சேரி ஹைக்கூ (துளிப்பா) கவிதைகளின் பாடுபொருள் ஒத்துப்போவதை முனைவர் கு. தேன்மொழி இந்த நூலில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- சங்கத் தொன்மம், கெ. […]

Read more

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, உயர் கல்வி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அண்மையில் 80 வயது நிறைந்து, முத்து விழா கொண்டாடியவர். வாழ்நாளில் கணிசமான பகுதியை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழின் பெருமையை பரப்பி வருகிறவர். கவிதை, உரைநடை, சொற்பொழிவு என்று பல துறைகளில் தமிழ்ப்பணியாற்றி வருகிற பெருங்கவிக்கோவின் தமிழ்த்தொண்டினை வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ச. குணா. அந்த […]

Read more

நிலவொளி எனும் இரகசிய துணை

நிலவொளி எனும் இரகசிய துணை, கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும், அடையாளம், புத்தாநத்தம், விலை 200ரூ. தமிழ்ப் படைப்புலகத்தைப் பொறுத்தவரை 1990களில் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சிக்கலான இலக்கிய, தத்துவக் கருத்தாக்கங்களையும் உரையாடக்கூடிய மொழியில் அறிமுகம் செய்த எம்.டி. முத்துக்குமாரசாமி முக்கியமானவர். இவரது சிறுகதைகள் அக்காலத்தில் தேக்கமடைந்திருந்த தமிழ் நவீனச் சிறுகதை மொழியைப் பரிசீலிக்கத் தூண்டியவை. அவர் சமீப காலத்தில் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. தமிழில் மொத்தை மொத்தையாக சீரியதும் சிறப்பும் இரண்டும்கெட்டானும் மோசமானதுமாகப் படைப்புகளைக் கலந்துகட்டிப் […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, கவிஞர் தியாரூ, ஜேபிரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாம் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு […]

Read more

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில், தமிழில் மு.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.விவேகானந்தம், அகநி வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மருது பாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, மருதுபாண்டியன் தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார். அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, தி. சந்தான கிருஷ்ணன், நிழல் வெளியீடு, பக். 140, விலை 150ரூ. தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ். பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதிவரை, படிப்பவர் கண் முன், படமாக விரிகிறது. கடந்த, 1941ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளதில், […]

Read more

வந்தேறிகள்

வந்தேறிகள், இரா. பாரதிநாதன், மதி நிலையம், பக். 376, விலை 325ரூ. நூற்றாண்டு கடந்தாலும் தொடரும் சமூக வலிகள் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின் படப்பிடிப்பு இந்த நாவல். நூல் ஓட்டம் சினிமா திரைக்கதை போலவே செல்கிறது. நூலாசிரியர், தானும் ஒரு அங்கமாக இருந்த கூட்டத்தின், அவலங்களின் உண்மை பின்னணியில் படைக்கப்பட்டது. உள்ளூர் முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பயந்து, புலம்பெயர்ந்து, வயிற்று பிழைப்புக்காக வேற்று முதலாளியிடம் அடிமையாகி, காலமெல்லாம் உழல்கிறது அப்பாவி தொழிலாளர் வர்க்கம். […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றியாளர்களாகப் பரிணமிக்க முடியும். சாதனையாளர்கள் அவர்களின் வெற்றி இலக்கை அடைய எடுத்த முயற்சிகளையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் படிப்பினைகளாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் சாதிக்க எத்தனை துறைகிளில் கவனம் செலுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. விபத்து ஒன்றில் வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்று மீண்ட தன்னம்பிக்கையாளர் ரீவ்ஸ், விடுடக் கொடுப்பவர்கள் எதையும் இழப்பதில்லை என்று உணர்த்திய சு […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 274, விலை 250ரூ. தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் வசியப்படுத்தாத, அவரிடம் வசியப்படுத்தாத, அவரிடம் வசப்படாத இலக்கிய உலக ஆளுமைகள், வெகு குறைவு. எழுதத் தொடங்கும் எல்லார் மீதும் அவர் பாராட்டு மழை பொழிந்தார். அந்தப் பாராட்டு மழையை உரமாக்கிக் கொண்டு இலக்கிய உலகில் வாழ்ந்து செழித்தவர்கள் பலர். அவ்வாறு தி.க.சி.யால் உரம் பெற்ற பலரும், அவர் மறைந்துவிட்டார் என்ற உடன், தாமே முன்வந்து தமது நினைவலைகளை எழுத்தில் வடித்திருக்கின்றனர். […]

Read more
1 87 88 89 90 91 336