ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, விலை 120ரூ. சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. படத் தயாரிப்பில், உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் என்ற சினிமா நகரை உருவாக்கி, பல ஸ்டுடியோக்களை அமைத்து, படங்களை தயாரித்தனர். ஹாலிவுட் அளித்த நடிகர் – நடிகைகள் உலகப்புகழ் பெற்று விளங்கினர். அவர்களில் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மார்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், புரூஸ் லீ, ஜாக்கிசான் உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழா கட்டுரைகள் தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 576, விலை 560ரூ. முதல் முன்னோடி நூல்; புதுவரவு தமிழியியலின் பல்வேறு பொருண்மைகளின் சங்கமே, இந்த நூல். சென்னை பல்கலை பேராசிரியர் வீ. அரசிடம், ஆய்வு செய்த, பல ஆய்வாளர்களது பல்வேறு ஆய்வு பொருண்மை குறித்த, 85 கட்டுரைகளும், பேராசிரியரது தன் விவரக் குறிப்பு குறித்த ஒரு கட்டுரையும் ஆக, 86 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், […]

Read more

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும், தி ஓல்ட் மேன் அண்டு தி சீ, எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பதிப்பகம். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே ஆங்கிலத்தில் எழுதிய தி ஓல்ட் மேன் அண்டு தி சீ என்ற நாவலை தமிழில், கிழவனும் கடலும் என்ற பெயரில் எம். எஸ். மொழிபெயர்த்து உள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்ற நாவல், சினிமாவாகவும் வந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலை படித்தேன். ஈராக் அதிபர் சதாம் உசேன் சிறைப்பட்டு இருந்தபோது, கடைசி ஆசை என்ன என சிறை […]

Read more

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு, சமந்த் சுப்பிரமணியன், தமிழில் கே. ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 160ரூ. ஒரு இனப்போரின் நிஜக்கதை ஒரு பத்திரிகையாளரான சமந்த் சுப்பிரமணியனின் பயணக் கட்டுரையாக விரிவடையும் இந்த நூல், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த முடிந்த ஒரு இனப்போரின் நிஜக் கதைகளை சொல்கிறது. போருக்கு பிந்தைய தமிழர்களின் வாழ்க்கை, ராணுவ நெருக்கடிகளில் கதைகள் துவங்கி, போரின் துவக்க காலங்களையும் கூறுகிறது. போரால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர், ராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றிய தமிழர், விடுதலை புலிகள், புலி […]

Read more

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள், மீனாட்சி புத்தக நிலையம். சிறுகதையில் சாதித்தவர் ஜெயகாந்தன் மறைந்த எழுத்து சிற்பி ஜெயகாந்தனின் சிறுகதைகள் பலவற்றை திரும்பத் திரும்ப படிக்கிறேன். அவற்றில் சிலவற்றை சமீபத்தில் படித்தேன். மீனாட்சி புத்தக நிலையம் அந்த நூல்களை வெளியிட்டுள்ளது. பெண் விடுதலைக்காக, கவிதைகள் மூலம் போராடினார் பாரதி; சிறுகதைகள் மூலம் சாதித்தார் ஜெயகாந்தன். அவரது எழுத்து நடை, காட்சிப்படுத்தும் முறை, சம்பவங்களை சினிமா பார்ப்பது போல காட்டும். சிறுகதையின் ஒவ்வொரு நிகழ்வும் கதையின் பாத்திரங்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளும், மனதில் ஆணி அடித்ததுபோல பதிந்துவிடும். சிறுகதைகள் […]

Read more

அன்புக்கு பஞ்சமில்லை

அன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]

Read more

இலக்கிய விதி இனியவன்

இலக்கிய விதி இனியவன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. கவனக கலைக்கு மறுவாழ்வு தந்தவர் படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர், தன் படைப்பு குந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ் மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால் தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், இலக்கிய வீதி இனியவர். விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் […]

Read more

விதையினைத் தெரிந்திடு

விதையினைத் தெரிந்திடு, தொகுப்பு வலம்புரி லேனா, எழில்மீனா பதிப்பகம், தஞ்சை. அபூர்வ அறிமுகங்கள் ஒரு சமூகத்தின் சிந்தனைமுறை மற்றும் மதிப்பீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 18ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை தமிழ் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அச்சிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் பேரிதழ்கள் ஒருபுறம் என்றால், சிறிய தொகையில் குறைந்த அளவில் அடிக்கப்படும் சிற்றிதழ்கள் மறுபுறம். குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரே ஊரில் வசிப்பவர்கள், தொழில் சமூகத்தினர், அரசியல் குழுவினர், புலவர்கள், அறிஞர், […]

Read more

அறவாணரின் படைப்பிலக்கியங்கள்

அறவாணரின் படைப்பிலக்கியங்கள், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தலைசிறந்த ஆய்வறிஞர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் க.ப. அறவாணன். கலையும், இலக்கியமும் வாழ்க்கைக்காக என்னும் கருத்துடைய அறவாணரின் சிறுகதை மற்றும் நாவல்களை ஆராய்ந்து வீர. ஆதிபராசக்தி இந்த நூலைப் படைத்துள்ளார். அறன், அன்பு, ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்றவை அவரது படைப்புகளில் பரிணமிக்கின்றன. படைப்பிலக்கியங்களில் மனித சமுதாயத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதற்கு அவரது சிறுகதைகளும், நாவல்களும் முன்னோடிகளாக அமைந்துள்ளன என்பதை இலக்கிய தராசில் நூலாசிரியர் […]

Read more

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள்

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் எல்லை மீறும்போதுதான் எதிர்க்குரலாளர்கள் தோன்றுகிறார்கள். அத்தகைய சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பெரியார், லெனின், சேகுவாரா போன்றவர்களின் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை இந்த நூல் ஆராய்கிறது. அதோடு அந்தச் சமூகப் புரட்சியாளர்களின் குரலோடு, புதுச்சேரி ஹைக்கூ (துளிப்பா) கவிதைகளின் பாடுபொருள் ஒத்துப்போவதை முனைவர் கு. தேன்மொழி இந்த நூலில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- சங்கத் தொன்மம், கெ. […]

Read more
1 86 87 88 89 90 336