தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 274, விலை 250ரூ. தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் வசியப்படுத்தாத, அவரிடம் வசியப்படுத்தாத, அவரிடம் வசப்படாத இலக்கிய உலக ஆளுமைகள், வெகு குறைவு. எழுதத் தொடங்கும் எல்லார் மீதும் அவர் பாராட்டு மழை பொழிந்தார். அந்தப் பாராட்டு மழையை உரமாக்கிக் கொண்டு இலக்கிய உலகில் வாழ்ந்து செழித்தவர்கள் பலர். அவ்வாறு தி.க.சி.யால் உரம் பெற்ற பலரும், அவர் மறைந்துவிட்டார் என்ற உடன், தாமே முன்வந்து தமது நினைவலைகளை எழுத்தில் வடித்திருக்கின்றனர். […]

Read more

காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்), பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 708, விலை 800ரூ. முப்பது ஆண்டு கால உழைப்பு. அசாத்தியமான தேடலுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ள, பாராட்டுதலுக்குரிய நூல். மூன்றுவித தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கருவூலம் போன்றது இது. அதாவது 1. ரஷிய – இந்திய அரசியல் வரலாற்றுத் தொடர்புகள் குறித்தான தேடல். 2. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு வளர்ந்தது, […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், கே. குருமூர்த்தி (மாயூரன்), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 172, விலை 90ரூ. வாயு புத்திரனாக அவதரித்த ஆஞ்சநேயர், மாருதி என்றழைக்கப்பட்டு பின்னர் அனுமனாக மாற்றம் பெற்றதாக அஞ்சனை மைந்தனின் கதை துவங்குகிறது. சிறுவயதில் அபார சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்டு விளங்கிய அனுமன், சூரிய பகவானிடம் வேத சாஸ்திரங்களையும், சகல கலைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்ததின் காரணமாக, பிற்காலத்தில் இராமபிரானால், நவவியாகரன் என்ற பாராட்டைப் பெறுகிறார். அனுமனின் பராக்ரமங்களை மிக அழகாக எளிய நடையில் சிறுசிறு கதைகளாகச் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ. பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் வெளியீடு, சென்னை, விலை 170ரூ.     To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-459-6.html உனது எழுத்தை எனது மொழியில் நீயே எழுது – என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், உங்களுக்கு ஆதரவாக நான் என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல் என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் […]

Read more

சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 192, விலை 145ரூ. ஒரு மனிதனின் எண்ணத்தையும், செயலையும் செம்மைப்படுத்துவதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. ஒருவனின் மனதையும் செயலையும் எவ்வாறு தூய்மைப்படுத்துவது? தோல்வியிலிருந்து எதிர் நீச்சல் போட்டு எப்படி வெற்றி பெறுவது? துன்பங்களை எப்படிக் கடப்பது? என்பனவற்றைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு செயலால் பிறருக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. விமர்சனங்கள் ஒருவருடைய முன்னேற்றத்திற்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும். ஆகவே விமர்சனங்கள் எப்போதும் ஆரோக்கியமானவையாகவே இருக்க வேண்டும். செய்யும் செயலில் […]

Read more

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது, மாயா ஏஞ்சலோ, தமிழில் அவைநாயகன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 336, விலை 300ரூ. உலகில் இன்றும் எஞ்சியிருக்கும் நிறவெறிக்கு எதிரான போரில் தனது எழுத்தையே ஆயுதமாக்கியவர் ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏங்சலோ. தனி தேவாலயம், பொது இடங்களில் வெள்ளையர்களின் சுரண்டல், எங்கும் ஆணாதிக்கம், கேலி, வன்கொடுமைகள் எனப் பல மோசமான அனுபவங்களுடன் வளர்ந்தாலும், அவற்றை மீறி சிலிர்த்தெழுந்த அமெரிக்க கறுப்பினப் பெண்ணான மாயா, பிற்காலத்தில் அடிமைத்தளையை எதிர்க்கும் போரில் முன்னுதாரணமான பெண்மணியாக உயர்ந்தார். எழுத்தாளர், […]

Read more

காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், அசோகமித்திரன், தொகுப்பு யுகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 366, விலை 300ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-368-6.html சில கதைகளைக் கேட்கும்போதும், வாசிக்கும்போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு. தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என […]

Read more

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சிறப்பு மலர் 2015, குமுதம் வெளியீடு, சென்னை, பக். 274. கிருஷ்ணன் மணியம், மாநாட்டுத் தலைவரான டத்தோஸ்ரீ உத்தமா ச. சாமுவேலு பற்றி எழுதியுள்ள தமிழ்மொழிக் காதலர் கட்டுரை, அவர் தமிழ் மொழி மீது கொண்ட தணியாத தமிழ்க் காதலையும், இளம் வயதிலிருந்து அவர் கடந்து வந்த கரடு முரடான சவால்கள் நிறைந்த பாதைகளையும் விவரிக்கிறது. இதுவரை நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை ஒரு மீள் பார்வை செய்துள்ளார் சு. இராசாராம். மலேசியாவில் தமிழ்க் கல்வி அன்றும் […]

Read more

கண்ணதாசனின் வனவாசம்

கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ. கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது […]

Read more
1 88 89 90 91 92 336