பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ. மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் […]

Read more

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும்

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும், குமாரதேவர் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 120, விலை 200ரூ. சங்க இலக்கியத்தில், கன்னிப் பெண்கள் நீர்த்துறையில் நீராடி, நமக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டி இறைவனைக் குறித்து நோன்பு நோற்று வழிபாடு நடத்தியதை தை நீராடல், மார்கழி நீராடல், பாவை நோன்பு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. இதை பரிபாடல் கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்றுவரை இப்பாவை நோன்பு பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகரும் ஆண்டாள் நாச்சியாரும் அருளிச்செய்த திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய […]

Read more

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும், சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 250ரூ. விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புகரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ. தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி […]

Read more

சக்கர வியூகம்

சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி […]

Read more

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள், மௌலானா முகம்மத் ஃபாரூக் கான், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பெரம்பூர், விலை 240ரூ. கவிதை மாதிரி ஓர் அறநூல் “மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. தவறிழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தான்.” இதற்கான விளக்கம் தவறிழைத்த பிறகு அதிலேயே உழன்று கிடைக்காமல் கணப்பொழுதுக்குள்ளாக செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு, மனம் நொந்து, வேதனையடைந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என மனம் பதைத்து அந்தக் கணத்திலேயே இறைவன் பக்கம் திரும்புகிறவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாவர் என்பதே. ‘இஸ்லாம் என்றால் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. ‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார். ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள். பிறப்பின் பொருள் என்ன? […]

Read more

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2), ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன் மற்றும் வசந்த் அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html வசந்த் டிவி ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன. இரண்டாம் பாகத்தில் 76 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சின்ன கோடு-பெரியகோடு தத்துவத்தைக் கூறி அதற்கு, வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால், அவன் மற்றவரை மறைக்காமல், அழிக்காமல் தன் […]

Read more
1 93 94 95 96 97 336