கலீல் கிப்ரானின் காதல் கதை

கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி […]

Read more

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன், நிழல் பதிப்பகம், பக். 140, விலை 150ரூ. குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் எராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. அந்த அபூர்வக் கலைஞனைப் பற்றிய அரிய ஆவணப் பதிவே இந்நூல். 1936இல் ‘சதிலீலாவதி’யில் அறிமுகமாகி 1972-இல் ‘எல்லைக்கோடு’ வரை சுமார் 145 திரைப்படங்களைத் தாண்டி பயணித்த டி.எஸ்.பாலையா பற்றி இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் […]

Read more

தாய்ப்பால்

தாய்ப்பால், முகுந்தன், தமிழில் டி.க. சதாசிவம், சாகித்ய அகாதெமி குணா பில்டிங்ஸ், சென்னை, பக். 336, விலை 185ரூ. சுனாமிபோல புறப்பட்டு வரும் மேற்கத்திய நாகரிகம், தொழில்நுட்பப் பெருக்கம், நவீனமயமாக்கல், காலனிமயமாக்கல் போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை நமது பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு முரண்பட்டு எதிர்கொள்கின்றன என்பதைப் பாசாங்கில்லாமல் எடுத்துச் சொல்கின்றன ‘உண்ணி சொன்ன கதை’, ‘பிளாஸ்டிக்’, ‘காரோட்டி‘, ‘பாவாடையும் பிக்கினியும்’ ஆகிய சிறுகதைகள். யதார்த்தத்தை மீறிய கற்பனைக்கு எட்டாத உலகத்தை சுவாரசியமாகவும் தத்துவார்த்தமாகவும் சொல்கின்றன. ‘தணியாத தாகம்’, ‘குளியலறை’ ஆகிய சிறுகதைகள். ‘மாதவனின் பயணங்கள்’, […]

Read more

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது, எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில் சி.சீனிவாசன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, பக். 760, விலை 550ரூ. இலக்கியத்துக்கான நோபல் பரிசை தனது ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காகப் பெற்றவர் எர்னெட் ஹெமிங்கே. அவருடைய குறிப்பிடத்தக்க இன்னொரு நாவல் இது. 1936 – 1939 இல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போர் நிகழும் காலத்தில் ஆண்களும், பெண்களும் சிந்திக்கும் முறை, நடந்துகொள்ளும் முறை ஆகியவை மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வெடி மருந்து நிபுணர் ராபர்ட் ஜோர்டான் […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

இந்தியா வரலாறும் அரசியலும்

இந்தியா வரலாறும் அரசியலும், டி. ஞானய்யா, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 400ரூ. 95 வயதையும் தாண்டி வாழும் வரலாறாக வாழ்ந்துகொண்டு இருப்பவர் தோழர் டி.ஞானய்யா. இன்றும், இன்னும் எழுதிக்கொண்டும் இருக்கிறார். நீண்ட ஆயுளுக்கு உடல் நலம் மட்டும் காரணம் அல்ல, சிந்தனைத் தெளிவும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இவர். அவரது வன்மையான எழுத்தில் இந்தியாவின் வரலாறு சீரான பார்வையுடன் செதுக்கித் தரப்பட்டுள்ளது. புத்தகங்களில் இருந்து அல்லாமல், தன்னுடைய 74 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களின் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளை அவர் […]

Read more

வெற்றிப் படிக்கட்டு

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. வசந்தகுமாரின் இரண்டாவது வெற்றிப் படிக்கட்டு இது. படிப்போரையும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவைக்கிறார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பினரும், எல்லா தொழில் செய்பவர்களும், அவர்கள் சிறு வியாபாரிகளாக இருந்தாலும் சரி, பெரும் தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, ஆண்கள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பும்வகையில் வெற்றிக்குரிய வழிகாட்டுதலைத் தந்துள்ளார். அதற்குப் பொருத்தமான உன்னதமிக்க சின்னஞ்சிறிய கதைகளைக் கூறிச் சொல்வது நூலின் சிறப்பு. தன்னம்பிக்கை, […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. தொழில் அதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான எச். வசந்த்குமார் தொலைக்காட்சியில் 5 நிமிட நேரம் சின்ன சின்ன குட்டிக்கதைகளைக் கூறி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை எடுத்துரைத்தார். அவை இப்போது ‘வெற்றிப் படிகட்டு பாகம் 2’ என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களைக் கவரும் வகையில் தன்னம்பிக்கைக் கதைகளை எளிய நடையில் எடுத்துச் சொல்கிறார். வெற்றிப் படிக்கட்டுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்வில் […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more
1 95 96 97 98 99 336