இந்தியன் ரயில்வேஸ் தி பிகினிங் அப்டு 1900

இந்தியன் ரயில்வேஸ் தி பிகினிங் அப்டு 1900, எஸ். வெங்கடராமன், சென்னை, பக். 500, விலை 800ரூ. அன்றைய சுயநலமும் இன்றைய பலவீனமும் படிக்கப் படிக்க மலைப்பைத் தரும் ஒரு பிரமாண்ட தொகுப்பு நூல் இது. புத்தகத்துக்குள் ஓர் அரிய புகைப்பட கண்காட்சி! இந்திய ரயில்வேயின், 100 ஆண்டுக்கால வரலாற்றை, நேர்த்தியாக பதிவு செய்துள்ளார், நூலாசிரியர். அவர், ரயில்வே துறையில் பணியாற்றியவர். அப்போதே ரயில்வேயில், வெளிநாட்டு முதலீடு செய்து, கொள்ளை லாபம் ஈட்டிய ஆங்கிலேயரின் வியாபார தந்திரம், அகல பாதை, மீட்டர் பாதை, குறுகிய […]

Read more

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம். நன்றாக தூங்குபவனுக்கு இரு மனைவிகளாம்! மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நூலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கோபல்ல கிராமம்’ உண்மை சம்பவமா, நாவலா, வரலாற்று பதிவா என, என்னால் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. இஸ்லாமிய மன்னர்களுக்கு பயந்த, ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறியோர் பற்றியது அந்த நூல். தமிழகத்தின் ஒரு பகுதியில் குடியேறி, அங்கு விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வாழ்ந்த, கோபல்ல கிராம மக்களின் […]

Read more

படம் பார்த்து படி

படம் பார்த்து படி, சுரேகா, மதி நிலையம், பக். 128, விலை 100ரூ. நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துக்களைப் புரிய வைப்பதுதான் நூலாசிரியர் சரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு பல நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. பிரச்சினையை அணுக தெரியாமல் தவிக்கின்றனர். நண்பர்களின் பிரச்னைக்கான தீர்வுகளை, பாய்ஸ், ரமணா, அற்புதம், வானவில், ஐயா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய கீதை போன்ற பிரபல சினிமா […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more

மானுடப்பண்ணை

மானுடப்பண்ணை, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. வேலை இல்லாத, கிடைக்காத, கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வரப்பெறாத இளைஞர்கள், இந்தத் தேசத்தில், தெரு நாய்களைப் போல வாழச் சபிக்கப்பட்டவர்கள். இந்த துருப்பிடிக்கும் இளமையாளர்கள் பற்றிய சரியான சமூகக் கவலையே இந்த நாவல். கதாநாயகனை பெரியாரியத்தின் பக்கம் இழுக்கும் பாலகிருஷ்ணன். காதல் பக்கம் தள்ளும் நீலா, மார்க்சியத்தில் பக்கம் வசீகரிக்கும் தோழர், மண்ணின் மைந்தர் தண்டபாணி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்கள். வேலையில்லாத இளைஞன் மன உளைச்சல், குடும்ப உறவு, காதல், வேலை வாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு […]

Read more

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம், பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புத்தொளி பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 80ரூ. மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான இந்நூலாசிரியர், கல்வி, அரசியல், ஆன்மிகம், பேச்சு, எழுத்து, ஆய்வுத்திறன்… என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இந்நூலில் அரபுலகில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய முப்பெரும் மதங்களுக்கும் புராதான தொடர்புடைய நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தின் தொடக்க காலம் முதல், 13-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்துள்ளார். இந்நாட்டின் பிரசித்தி பெற்ற நகராகிய ஜெருஸலத்தில்தான், […]

Read more

சாமிநாதம்

சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ. தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் […]

Read more

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ. ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். […]

Read more

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ. மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும். மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more
1 97 98 99 100 101 336