நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ. பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது. இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், […]

Read more

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

பாலச்சந்திரனின் இறுதியுணவு

பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ. நம் காலத்தின் கவிதைகள் சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன. எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. உலகின் முதல் (சமைத்த) உணவு எது? பாறையை அடுப்பாக பயன்படுத்தி சுட்டு எடுக்கப்பட்ட ரொட்டியாக இருக்கலாம். உணவுக்கு சுவை எப்போது வந்து சேர்ந்தது? சந்தேகமில்லாமல் உப்பை உணவில் சேர்த்த பின்புதான். இந்தியர்கள் உலகிற்கு நன்கொடையாக வழங்கிய உணவுப் பண்டங்கள் என்னென்னஈ பிற நாட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியர்கள் எந்த உணவுகளின் சுவைக்க அடிமையானார்கள்? என்பது போன்ற சுவையான உணவு வரலாற்றை பரிமாறுகிறது ‘உணவு சரித்திரம்’ நூல். மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள்தான் […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும்போதுதான், முழுமை பெறுகிறான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பைப் பார்த்தபின், வேறு யாருடைய நடிப்பையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படி ரசித்தாலும், அவர்களுக்குள் சிவாஜியின் வடிவத்தை பார்க்கிறேன் என்ற ஒய்.ஜி.மஹேந்திரா சிவாஜியுடன் நடித்தபோது, பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை ரசித்து, சுவைத்து, சுவாசித்து கட்டுரை வடிவில் படைத்திருக்கிறார். சிவாஜி பற்றிய அரிய புகைப்படங்கள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச்செய்து, அவரது இனிய […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ. இந்திய விடுதலைப் போரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என மத பேதமின்றி எல்லோரும் பங்கேற்றனர். 1857-1859களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சி, புரட்சி குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும் அதில் பங்கேற்ற இஸ்லாமிய மன்னர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் பொதுமக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் இந்த நூலில் ஆசிரியர் செ. திவான் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இந்திய சுதந்திரப் போரில் தென்னகத்தின் பங்களிப்பு குறித்தும், […]

Read more

சிறுகதைச் சிகரங்கள் 7

சிறுகதைச் சிகரங்கள் 7, பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, சூடாமணி, புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன், அசோகமித்திரம், விகடன் பிரசுரம், சென்னை, விலை ரூ750 (7 புத்தகங்களும் சேர்த்து). என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்போது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது – புதுமைப்பித்தன். இப்படி ஒருமுறை சொன்னார். நூற்றாண்டுகள் கடந்த தமிழ்ச் சிறுகதைகளில் எது நல்ல கதை, எவர் மட்டும் சிறந்த கதாசிரியர் என்று எப்படித் தேர்ந்தெடுக்க முடியும், கடலிலும் முதலில் ஒரு […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ. மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. பன்முக திறமை கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா எழுதியுள்ள இந்த ஆய்வு நூலின் மிக பழமைவாய்ந்த மகாபாரம் இதிகாசத்தை இதுவரையில் யாரும் செய்யாத அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ் மாலையும் சூடியிருக்கிறார். ஆங்காங்கு பல கண்டன கணைகளையும் வீசியிருக்கிறார். மகாபாரதம் என்ற ஆழ்கடலில் மூழ்கி அங்கு இருக்கும் முத்துக்களை மட்டுமல்லாமல், விமர்சனத்துக்குரிய பல கருத்துக்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை நேசிப்பவர்களுக்கும், அதை முழுமையாக எல்லா கோணங்களிலும் […]

Read more

மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, விலை 270ரூ. பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலமாக இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து அவர்களை வெற்றிப்படி நோக்கி அழைத்து செல்பவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு. விரக்தியின் விளிம்புக்குச் செல்லும் மனிதன், அழிவில் இருந்து மீள நெஞ்சக்கு ஆறுதல் களிபம்பு தடவுகிறார். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; எனவே முடியாது என்ற வார்த்தைக்கு முடிவு கட்டுங்கள் என்பதை முடிவாகச் சொல்கிறார். வாழ்க்கையை வசப்படுத்தவும், வாசப்படுத்தவுமான […]

Read more
1 98 99 100 101 102 336