கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ. மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் […]

Read more

மது விழிப்புணர்வுக் கல்வி

மது விழிப்புணர்வுக் கல்வி, கோ. பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, பக். 160, விலை 100ரூ. மது விற்பனை இலக்கு, மதுவினால் ஏற்படும் விபத்துகள், மதுப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், நிதானம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் – மற்றவரைக் கொன்றவர்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அசிங்கப்படும் இன்றைய இளம்தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பற்றிய செய்திகள் போன்றவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். மது உருவான வரலாறு, புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணக்கிடைக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாட்டுப்புறப் […]

Read more

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ. உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார். இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், தொகுப்பாளர்கள் இரா. சினிவாசன், பா. மதுகேசுவரன், அ. சதீஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 576, விலை 560ரூ. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் வீ. அரசவின் பணி நிறைவையொட்டி, அவரிடம் பயின்ற மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ‘ஓர்மை’ என்பதை ஆங்கிலத்தில் (Consciousness) என்று தமிழில் மொழியாக்கம் செய்யலாம். ‘ஒர்மை வெளி’ என்பதை A Space for consciousness என்று மொழியாக்கம் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

கண்ணதாசன் பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ. மாந்திரீக எதார்த்த நாவல் […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், பி.எல்.ராஜேந்திரன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 285ரூ. தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத ஆளுமைகளான எல்லிஸ் ஆர். டங்கன், கே. சுப்பிரமணியம், எஸ்.எஸ். வாசன், டி.ஆர்.சுந்தரம், இளங்கோவன், மு. கருணாநிதி, தியாகராஜபாகவதர், எம்.ஜி.ஆர். முதலிய 99 பேரைப் பற்றிய அறிமுகம் சாதனைச் சுருக்கமும் சில அரிய புகைப்படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முதல் முதலில் டைட்டில் இசையை இசைத்தட்டாக வெளியிட்டு புதுமை செய்தவர் வீணை எஸ். பாலசந்தர், கே. சுப்பிரமணியத்தின் ஸ்டுடியோ, கோர்ட் உத்தரவுப்படி, […]

Read more
1 94 95 96 97 98 336