சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி,  சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.504, விலை ரூ. 450. சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்‘ நூல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றிப் பொதுவாகப் பேசினாலும், ஓர் அரசனின் கடமைகளில் தொடங்கி, கீழ்மட்ட அரசு அலுவலர்களின் பணிகள் வரை தெளிவாக விவரிக்கிறது. அரசனின் பாதுகாப்பு, அரச ஊழியம், வாரிசு முறை, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள், கருவூல அதிகாரிகள், வேளாண்மை, காடு வளர்ப்பு, சட்டமும் நீதியும், மண வாழ்க்கை, குற்றப் புலனாய்வு, பாலியல் குற்றங்கள், ராணுவ அமைப்பு போன்ற எல்லாப் பிரிவுகள் […]

Read more

முல்லை மண்-மக்கள்-இலக்கியம்

முல்லை மண்-மக்கள்-இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.200, விலை ரூ.150. சங்கத் தமிழ் இலக்கண-இலக்கியங்களில் பல சந்தேகங்களும், சிக்கல்களும், முரண்பாடான கருத்துகளும் இருக்கின்றன. அந்தவகையில், முல்லைத் திணைப் பாடல்களில் உள்ள பல வகை சிக்கல்களும் ஐயங்களும் ஆய்வுப் பொருளாகியுள்ளன. அவை களையப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘முல்லைத் திண‘யில் இருக்கும் ஐயங்களுக்கான விடைகளை இந்நூல் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறது. முல்லைத் திணைப் பாடல்கள், உலக இலக்கியங்களான கிரேக்க, லத்தீன் முல்லைத் திணைப் பாக்களோடு ஒப்புநோக்கப்பட்டுள்ளது. பல பொருள் தரும் ஒரு சொல் […]

Read more

மரபணு என்னும் மாயக்கண்ணாடி

மரபணு என்னும் மாயக்கண்ணாடி, இரா.சர்மிளா, காவ்யா, பக்.112, விலை ரூ.120. உயிரினங்களின் இயக்கத் திறனுக்கு காரணமாக இருக்கும் மரபணு குறித்து இந்நூல் பேசுகிறது. மரபணு ஆராய்ச்சி நடைபெற்றது எப்போது? அதைக் கண்டறிந்தது யார்? என்பன போன்ற பல சுவாரசியமான தகவல்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. மரபணுவின் அமைப்பு, குரோமோசோமின் அமைப்பு, புரத உற்பத்தி, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் என பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் மரபணு ஆராய்ச்சி எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள […]

Read more

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்,  கீழப்பாவூர் ஆ.சண்முகையா, ராஜ கோகிலா அறக்கட்டளை, பக். 150, விலை ரூ.100. திருமூலர் அருளிய திருமந்திரம் சிவபெருமானைப் போற்றிப்பாடும் வகையில் தோத்திர நூலாகவும், சைவ சித்தாந்தங்களைக் கூறுவதில் சாத்திர நூலாகவும், யோகங்களை விரித்துரைப்பதில் யோக நூலாகவும் திகழ்கிறது. ஏழு தந்திரங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் தந்திரம் பற்றிய பாடல்களுக்கு வெறும் விளக்கம் மட்டும் தராமல், சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் முதலியவற்றோடு ஒப்பிட்டுக் கூறி, சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் […]

Read more

புத்திக் கொள்முதல்

புத்திக் கொள்முதல் (சிறுகதைகள்), ஜனநேசன்,பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.90. தினமணி கதிர், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, வண்ணக்கதிர் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 17 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரிய அளவுக்கு நஷ்டமடைந்த சொக்கலிங்கம், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு எழுந்ததைச் சொல்லும் ‘புத்திக் கொள்முதல்‘ சிறுகதை, பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ‘பாடம்‘ மற்றும் ‘உதிர்வதற்கல்ல முதுமை‘ கதைகள், காதல் திருமணம் பற்றி கூறும்‘கெளரவம்‘, மதநல்லிணக்கத்தை […]

Read more

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு, எஸ்.அன்பழகன், அன்பு பப்ளிசிங் ஹவுஸ், பக்.384, விலை ரூ.250. திருமணப்பொருத்தம் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திருமணப்பொருத்தங்களான தசவித பொருத்தங்கள், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம், திருமணத்திற்கு நாள் குறிப்பது போன்றவற்றை எளிய முறையில் ஜோதிடரல்லாதோரும் அறிந்துகொள்ள எழுதப்பட்ட அரிய நூல். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைக் குறித்தும் அதில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் ஸ்தானத்தின் மதிப்பு, இந்த ஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியிருக்கும் ஆசிரியர், ஆயுள் ஸ்தானம் குறித்தும் […]

Read more

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ், தமிழில் நா.தர்மராஜன், அலைகள் வெளியீடு, விலை 160ரூ ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது. […]

Read more

பழைய யானைக் கடை

பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை),  இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195. சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது. ‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழ் நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் டி.கே.சண்முகம். இளைஞரான அவர்,அவ்வை மூதாட்டிய நடித்து “அவ்வை சண்முகம்” என்று போற்றப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.திரவுபதி உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இவரது நாடகக் குழுவில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் புகழ் பெற்றனர். அவ்வை சண்மகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் டி.கே.எஸ்.கலைவாணன் சிறப்பாக எழுதியுள்ளார். டி.கே.சண்முகத்தின் ஆற்றலைப் புகழ்ந்து, தலைவர்களும், தமிழறிஞர்களும் தெரிவித்த கருத்துக்களும் இந்த நூலில் […]

Read more

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ. மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற […]

Read more
1 295 296 297 298 299 505