அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம்

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம், முனைவர் அ. அன்பாநந்தன், அறம் பதிப்பகம், விலை 50ரூ. ஈ.வெ.ரா. பெரியாருக்கு முன்னதாக அயோத்திதாசப் பண்டிதர், தமிழ் எழுத்துக்களில் கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஆய்வு நோக்கில் இந்த நூல் தந்து இருக்கிறது. தற்போதைய தமிழ் எழுத்து, ‘தமிழி’ மற்றும் ‘வட்டெழுத்து’ மூலம் எவ்வாறு உருவானது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சொல்லாத சொல்

சொல்லாத சொல் , மாலன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.248, விலை ரூ.160. துக்ளக் வார இதழில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 செப்டம்பர் முதல் வாரம் வரை எழுதிய 49 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அந்த ஓராண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகில் நடைபெற்ற அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த சுருக்கமானபதிவுகளே இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடக்கமாக அக்கட்டுரை கருத்துகளின் குறியீடாக ஒரு சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கிறார் நூலாசிரியர். தெரிந்த கதைகள் சிலவும், தெரியாத கதைகள் பலவும் இருந்தாலும் அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் […]

Read more

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்), ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம்,  பக்.23.,  விலை ரூ.200. தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும். இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது. இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு […]

Read more

நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு

நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு, நரேன், நீல் கிரியேட்டர்ஸ், பக்.224, விலை ரூ.100. சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஏசியா பசிபிக்கின் தலைமை மேலாளர் நாகராஜனின் வாழ்க்கை குறித்த புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்காக நாகராஜன் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து பேசுகிறார் நூலாசிரியர். நாகராஜனின் குடும்பம், பிரபலங்களுடனான அவருடைய நட்பு, அவரது வாழ்க்கையின் திருப்புமுனைகள் என அவருடைய வாழ்வின் முக்கிய தருணங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இடையிடையே கதைகள், சம்பவங்கள், கவிதைகள் மூலமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறது புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்களையும் பொது […]

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300.  சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

படேல் நேரு

படேல் நேரு – விடுதலை நெருப்பும் எதிரெதிர் துடுப்பும், மீனாட்சி புத்தக நிலையம், ஜெகாதா, பக். 288, விலை ரூ. 250. சுதந்திரத்திற்கு முன்பும்பின்பும் நேருவும் படேலும்எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்ததையும், படேல், நேரு இருவரின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்றுதலையும், நம்பிக்கையையும் விவரித்துக் கூறும் நூல். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் படேல்-நேருவிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தன. முதலாளித்துவ சமூகம் பயனுள்ளது என்பதில் படேல் உறுதியாக இருந்தார். புதிய சோஷலிச உலகம் என்ற நேருவின் கனவை படேல் நிராகரித்தார். நாட்டு […]

Read more

உப்புச்சுமை

உப்புச்சுமை , ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160.  கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை, திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் […]

Read more

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும், எஸ்.பி.சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. ராகு கேது கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், பலாபலன்களும், செய்ய வேண்டிய பரிகாரங்களும் இந்த நூலில், உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய தகவலும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள்

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், ரம்யா, அகலன் வெளியீடு, விலைரூ.100. தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார்.தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 16/5/21 இந்தப் […]

Read more

பெண்

பெண் (இந்தியப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்), தொகுப்பாசிரியர் சு.மல்லிகா, நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை , பக்.176,  விலை ரூ. 200 . இந்தியப் பெண் எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் சிறுகதை தொகுப்பு இந்நூல். இத்தொகுப்பில் தமிழ் முதல் உருது வரை 12 இந்திய மொழிகளின் கதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவிதமும் சரி, அவற்றின் இயல்பான மொழிபெயர்ப்பும் சரி அவற்றை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக வாஸந்தி, லலிதாம்பிகா அந்தர்ஜனம், அமிர்தா ப்ரீதம், ஆஷா பூர்ணா தேவி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க […]

Read more
1 82 83 84 85 86 505