பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் பெண்களின் பாதுகாப்பு, சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்படும் குற்றங்கள், வரதட்சணைக் கொடுமை, சிசுக் கொலை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் அல்லாமல் சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

எக்சைல்

எக்சைல், தஸ்லிமா நஸ்ரின், ஆங்கிலத்தில்: மஹார்க்யா சக்ரவர்த்தி பெங்க்வின், விலை: ரூ.599. சுதந்திரம் என்பதே பேச்சு ஆணாதிக்கச் சமூகத்தில் மத அடிப்படைவாதமும் சேர்ந்துகொண்டால் நவீனச் சிந்தனைகளுக்கு எத்தகைய எதிர்ப்புகள் காத்திருக்கின்றன என்பதற்கான நம் காலத்து உதாரணமே தஸ்லிமா நஸ்ரின். ஒரு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருந்த அவர் பெண்ணுரிமை பேசியதற்காக வங்க தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களோ அவரது நூல் ஒன்றுக்குத் தடைவிதித்து அவரை கொல்கத்தாவிலிருந்து விரட்டினார்கள். அன்றிலிருந்து சுமார் ஏழு மாத காலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வீட்டுக் காவலிலும் அரசின் ரகசிய இல்லங்களிலும் தங்கவைக்கப்பட்டு […]

Read more

சோத்துக் கட்சி

சோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]

Read more

காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.188, விலை ரூ.175. இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (கால வரிசையில்ஆவணப் பதிவுகள்) – பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன், மொழிபெயர்ப்பு: கி.அ.சச்சிதானந்தம், இரா.சுப்பராயலு , வெளியீடு: சீனி.விசுவநாதன்,  பக்.416, விலைரூ.350 . மகாகவி பாரதி ஒரு பத்திரிகையாளராகவும், தேசவிடுதலை என்ற இலட்சியத்துடன் ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்திருக்கிறார். அவர் விடுதலை வேட்கையுடன் நடத்திய கூட்டங்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், இந்தியா பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் ஆங்கிலேய ஆட்சியாளரைக் கோபமடையச் செய்தன. அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற நினைக்க வைத்தன. எனினும் பாரதி நிலைகுலைந்துவிடவில்லை. நண்பர்கள், […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தமிழக மீனவர்களின் கலைந்த கனவு, கச்சத்தீவு. இந்தியாவில் நெருக்கடி நிலை, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தபோது, கட்சத்தீவு தாரை வார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் மீனவர்களால் இதை இன்னும் ஏற்கமுடியவில்லை. தமிழர்கள் எழுப்பிய செபஸ்தியர் ஆலயம், அவர்களின் வழிபாட்டுத் தலமாய் இன்றும் கச்சத்தீவில் இருக்கிறது.ஆனால், தமிழர்களால் அங்கு சென்று வழிபட அனுமதி இல்லை. இது ஏன் என்பது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027242.html இந்தப் புத்தகத்தை […]

Read more

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

1000 கடல் மைல்

1000 கடல் மைல், வறீதையா கான்ஸ்தந்தீன்,  தடாகம், விலை 250ரூ. மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027320.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 2 3 4 5 17