கற்றுக்கொடுக்கிறது மரம்

கற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ: 150 ஹைக்கூ விளக்கம் தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்துச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல். ‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் […]

Read more

நினைவின் பயணம்

நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), ஜே.ஜி.சண்முநாதன், விஜயா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120 கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 – ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையாகவும், உலகியல் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது. தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில்மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை […]

Read more

தமிழர்கள் நாம் அடிமைகளா?

தமிழர்கள் நாம் அடிமைகளா?, வேத.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், விலை 150ரூ. அயல்மொழி மேல் மையல் கொண்டு அன்னைத் தமிழ் மறந்தோம். வீரமும் பண்பாடும் தொலைத்து வீணரைப் பின்பற்றுகின்றோம். இப்படியெல்லாம் இருக்க, தமிழன் என்ன அடிமையா? இனத்தின் பண்புகாத்து நிற்க, இழந்திட்ட வீரம் மீட்க கவி நடையில் நம் பெருமை சொல்லும் நூல். எண்ணற்ற கவிஞர்களின் எண்ண வெளிப்பாட்டின் தொகுப்பு. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]

Read more

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்,  தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ, கொரியக் கவிதைகள் உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் […]

Read more

திருக்குறள்களே கவிதையாய்

திருக்குறள்களே கவிதையாய், கோவூர் தணிகை, மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரைநடையில் விளக்கம் எழுதி இருக்கும் நிலையில், இந்த நூலில் ஆசிரியர், திருக்குறளுக்கு கவிதை வடிவில் விளக்கம் அளித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. திருக்குறளின் 133 அத்தியாயங்களில், அத்தியாயத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 133 குறள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிமையான அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் கவிதைகளில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கவிதைகளும் திருக்குறளின் பரிணாமத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

குழந்தை வரைந்த காகிதம்

குழந்தை வரைந்த காகிதம், கவிஞர் இளவல் ஹரிஹரன், ஓவியா பதிப்பகம், வலை 100ரூ. தெலுங்கில் சமீப காலமாக நானிலு என்னும் நான்கு வரிக் கவிதை வடிவம், கொடி கட்டிப் பறக்கிறது. இதற்குத் தமிழில் தன் முனைக் கவிதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது குழந்தை வளர்ந்த காகிதம் என்ற தலைப்பில் தன் முனைக் கவிதை நூலை முதன்முறையாகப் படைத்து வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் இளவல் ஹரிஹரன். பத்திரப் பதிவுத்துறையில் மிக உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், வாழ்வில் தான் கண்டதையும், உணர்ந்ததையும் […]

Read more

அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், பக்.106, விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

புவி எங்கும் தமிழ்க் கவிதை

புவி எங்கும் தமிழ்க் கவிதை, தொகுப்பாசிரியர்: மாலன், சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ.160. புவியின் எட்டுத் திக்குகளிலிருந்தும் பெறப்பட்ட கவிதைகள் சிறப்பாக இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை பன்முகம் கொண்டதாகவும், அதே நேரத்தில் விரிவின் பொருட்டு செறிவைத் தவறவிடாமல் செழுமை வாய்ந்ததாகவும் ஆக்க நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சியை கவிதைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. இலங்கையில் வசிக்கும் கவிஞர் அபார் தாள் […]

Read more

அகயாழின் குரல்

அகயாழின் குரல், கனகா பாலன், நண்பர்கள் பதிப்பகம், விலை 120ரூ. நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்… உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே…!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 6 7 8 9 10 57