மாத்தி யோசி கவிதைகள்

மாத்தி யோசி கவிதைகள், மில்டன், விலை 89ரூ இளம் கவிஞர் மில்டன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறார் காந்தி. இன்றோ அந்தக் கிராமங்களில் தான் வாழ எவருமில்லை, உன் தலைமுறையை மருத்துவனாக்கு பொறியாளனாக்கு அதற்கு முன் சாதி வெறி இல்லா மனிதனாக்கு பிறருக்கு உதவும் மனிதநேயனாக்கு என்பன போன்ற நெஞ்சை அள்ளும் கவிதைகள். மறுக்கப்பட்ட வாழ்வை அளித்தவன் நீ மறைக்கப்பட்ட வரலாற்றை உரைத்தவன் நீ வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்புச் சட்டை நீ எந்த வேள்வியையும் சட்டை செய்யாத நெருப்புச் […]

Read more

இறகென இருத்தல்

இறகென இருத்தல், செ.கார்த்திகா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 60ரூ. மெல்லிறகாய் வருடி, கனமான பதிவுகளை மனதுக்குள் எழுதும் யதார்த்த கவிதைகள். குழந்தை முதல் தெய்வம் வரை, பாசம் முதல் நேசம் வரை அத்தனையும் இங்கே அவரவர் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற நடையிலேயே நகர்வது நளினம். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஹைக்கூ புதிது

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு),  நெல்லை சு.முத்து, பக்.240, விலை ரூ.220. ன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. ஹைக்கூ பற்றித் தெரிந்து கொள்ள பயன்படும் நூல். நூலாசிரியர் புகழ்பெற்ற அறிவியலாளர். ஹைக்கூ பற்றிய நூலிலும் அவருடைய அறிவியல்சார்ந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. விவரங்களைப் பரிசீலனை செய்து முடிவுக்கு வருதல் அறிவியல் அணுகுமுறை. ஹைக்கூ பற்றிய இந்நூலிலும் ஹைக்கூ சார்ந்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன. சுமார் 274 ஹைக்கூ கவிஞர்கள் உள்ளனர்; 26 ஹைக்கூ இதழ்கள் உள்ளன; ஹைக்கூ எழுதுபவர்களைக் […]

Read more

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

நாரணோ ஜெயராமன் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய வலுவான நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது. ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் […]

Read more

புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.200. கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

உறவே உதவும்

உறவே உதவும், ரவணசமுத்திரம் நல்லபெருமாள்,ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. சந்தக் கவிதைகள் பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் […]

Read more

புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ 200. எரிக்காத வெளிச்சத்தின் கவிதைகள் கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் […]

Read more
1 7 8 9 10 11 57