அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள், குடந்தை பாலு, வானதி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தாயின் மடியில் விளையாடிய குழந்தைப் பருவம் முதல், கோடிக்கணக்கான மக்களின் முதல் குடிமகனாக, மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த காலம் வரை, உண்மை, நேர்மை, அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், சமூக ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானி கலாம் எவ்வாறு சிந்தித்தார், எப்படி செயல்பட்டார் என்பதை மக்களின் மனதில் விதைக்கிறது இந்நுால். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கல்விப் போராளி மலாலா

கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 208, விலை 180ரூ. இந்தப் புதிய தலைமுறையினருக்கு பேனா கொடுக்கப்படவில்லை என்றால் தீவிரவாதிகளால் அவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுவிடும்!’ என, பெண் கல்விப் போராளி மலாலாவின் சரிதம் முரசடிக்கிறது! தலிபான்கள் பிற்போக்குவாதிகள். பெண்கள் கல்வி பெறுவதை வெறுப்பவர்கள்.பெண் பிள்ளைகளை பள்ளிக்குச் செல்ல விடுங்கள். பள்ளிகளை மூடாதீர்கள். பெண் கல்வியின் பொருட்டு நடத்தி வரும் பெருங்கொடுமைகளை நிறுத்துங்கள் என, தலிபான்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துக் காட்டியவர் மலாலா. கடந்த, 2009ம் ஆண்டிலேயே, பி.பி.சி.,யின் உருது வலைப் பதிவு […]

Read more

பசும்பொன் கருவூலம்

பசும்பொன் கருவூலம், தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 300, விலை 300ரூ. நாத்திகம், சுயநலம், பிரிவினை வாதங்களால் தமிழகம் தாழ்ந்து நின்றது. நாசமுற்று தமிழகம் வீழ்ச்சி பெற்றிருந்த நேரத்தில் தேசியமும், தெய்வீகமும் தோற்றுவிடாமல், தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி பெற வைத்தவர் பசும்பொன் முத்துராலிங்கத் தேவர். மேடையேறி சங்கநாதம் செய்தார். தியானம், தொண்டுகள் செய்து பக்திமானாகத் திகழ்ந்தார். களத்தில் எதிர் நின்று வீரனாகப் போராடி சிறை புகுந்தார். பத்திரிகைகளில் முரசு முழங்குவது போல் எழுதியவைகளை ஆவணப்படுத்துகிறது இந்த […]

Read more

பெரியார்

பெரியார், அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. தமிழகத்தின் விடிவெள்ளி, ஈ.வெ.ரா., தமிழுணர்ச்சியையும், தமிழனின் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பிய மாமேதை. சமூகப் புரட்சி சிந்தனைகளின் பிறப்பிடமாக இருந்தது மட்டுமின்றி, மக்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அரசியல் கடலில் முதல்வர் பதவிக்காக மூழ்கிப் போனவர்களுக்கு மத்தியில், தம்மை நாடி வந்த முதல்வர் பதவியை மறுத்த திராவிட இயக்கங்களின் பிதாமகன், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000011851.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விலை 275ரூ. சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். 150 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்தவர். இவருக்கு “நிவேதிதை” என்ற பெயரை அளித்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் புதல்வி நிவேதிதை என்றால், மகாகவி பாரதியாருக்கு ஆன்மிக குரு என்று கூறலாம். பிறப்பால் மேல்நாட்டுப் பெண் என்றாலும், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவர். அவர் வரலாற்றைப் படிப்பது, இந்தியாவின் அரசியல் வரலாற்றையும், ஆன்மிக வரலாற்றையும் சேர்த்துப் படிப்பதற்கு சமம். அழகாகவும், விரிவாகவும் அமைந்துள்ள […]

Read more

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை விரிவான வாழ்க்கை வரலாறு, சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், பக். 625, விலை 275ரூ. அன்பினுக்கு ஓர் கோவிலாய், எமதுயிர் நாடாம் பயிருக்கு மழையாய் வாழ்ந்த அன்னை’ என்று, பாரதியார் புகழ்ந்த சகோதரி நிவேதிதையின் 151ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் வெளியாகி உள்ள சிறந்த நுால். குருநாதர் விவேகானந்தர் காட்டிய ஆன்மிப் பாதையில் வாழ்ந்த இவரை ஐரோப்பியப் பெண் என்பது மடமை. தியாகமும், தொண்டும் லட்சியமாகக் கொண்டவர். அதன் அடையாளமாக நிவேதிதை அன்னையின் பெருமை, புனிதம், ஆற்றல் ஆகிய […]

Read more

உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 280ரூ. ‘தினத்தந்தி’யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில். 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது. சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆனது. 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது. தமிழ், மலையாளம், […]

Read more

சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

வன்காரி மாத்தாய்

வன்காரி மாத்தாய், பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.318, விலை 275ரூ. ஸ்டீபன் ஹாக்கிங், ப்ராய்ட் வரிசையில் கென்ய  நாட்டு சுற்றுச்சூழல் போராளி வான்காரி மாத்தாய் குறித்து தன் அடுத்த மொழி பெயர்ப்பு நுாலை தந்துள்ளார் பேராசிரியர் ச.வின்சென்ட். ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என இப்போது குரல் எழும் நிலையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன், ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என குரல் கொடுத்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கென்யாவை சேர்ந்த வான்காரி மாத்தாய். அதுமட்டுமின்றி பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர். பசுமை பகுதி இயக்கத்தை […]

Read more

அற்புத மனிதர் அப்துல்கலாம்

அற்புத மனிதர் அப்துல்கலாம், நெல்லை சு.முத்து, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன. போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு. ஆபுல் – காபுல் ஒலியுல்லா தர்க்கா என்னும் தொழுகை இடம் ராமேஸ்வரத்தில் உள்ளது. அவர்கள் ஆதாமின் மக்கள் என்று திருமறை உரைக்கிறது. […]

Read more
1 10 11 12 13 14 46