கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா.பெருமாள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 85ரூ. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அரும்பெரும் கவிஞராகவே அறிந்திட்ட நமக்கு இந்த புத்தகம் அதே எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. கவிமணி கல்வெட்டு ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. அவருடைய திறமையின் இன்னொரு புறம் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது என்றே கூறவேண்டும். கவிமணி பற்றி இதற்கு முன்னர் இதுபோன்ற ஆய்வு நூல் வந்திருக்குமா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். கேரளாவில் நிலவி வந்த தந்தையிட்ன சொத்து அவருடைய சகோதரி […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி – தஞ்சை வெ.கோபாலன்,  கலைமகள் டிரேடர்ஸ், பக்.96, விலை ரூ.75. ஒவ்வோராண்டும் திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்டியாஞ்சலி குழுவில் இடம் பெற்றிருப்பவர் நூலாசிரியர். பல நாட்டியக்கலைஞர்களுடன் பழகும் அனுபவமும், நாட்டியம் பற்றிய பரந்த அறிவும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய வரலாற்று நூல்களின் தாக்கமும் சேர்ந்து இந்நூலை எழுத அவரைத் தூண்டியிருக்கிறது. பல்வேறு ஆலயங்களில் நடனமாடும் பெண்களின் சிலைகளைக் காண முடியும். நடனம் தவிர பல்வேறு வகையான வாத்தியங்களும் […]

Read more

மூலிகைக் காற்று வீசட்டும்

மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தளகம், விலை 400ரூ. செய்தி வாசிப்பு தொடர்பாக ஆசிரியர் சொல்லும் கருத்துகள் மகத்தானவை. செய்தித் துறையின் அடிப்படை, அதில் நிலவும் சிக்கல்கள், சவால்கள், நடைமுறை, போக்கு போன்ற பல்வேறு கூறுகளையும் பல கோணங்களில் அலசி ஆராய்கிறார். இன்றைய ஊடகத் துறையின் நிலை குறித்த மனக் குமுறலை வெளியிடும் ஆசிரியர், தரமான ஊடகவியலாளர்கள் விளைய, நல்ல ஆலோசனை விதைகளை நுாலெங்கும் துாவிச் செல்லும் பாங்கு பாராட்டிற்குரியது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்,  தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,  பக்.496, விலை ரூ.600. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. அவற்றுள் சைவத்தைப் பொருத்தவரை காரைக்கால் அம்மையார் (மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கி சேக்கிழார் (12 ஆம் நூற்றாண்டு) வரை இருபத்தேழு அருளாளர்கள் வழங்கிய "பன்னிரு திருமுறை' சைவ சமயத்தின் கவசமாகவே கருதப்படுகிறது. மேலும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோரும் சைவத்தால் தமிழையும், தமிழால் சைவத்தையும் மேம்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியங்கள் எவ்வகையிலெல்லாம் சைவத்தை வளர்த்தெடுக்க உதவின என்பதை உணர்த்தும்விதமாக […]

Read more

பறவை போல் வாழ்தல் வேண்டும்

பறவை போல் வாழ்தல் வேண்டும், இ.தனுஷ்கோடி, தமிழ்வாணி பதிப்பகம், பக். 102, விலை 70ரூ பறவை போல் வாழ்தல் வேண்டும் எனும் இந்த நுாலில், 34 பறவைகளின் வாழ்க்கைச் செய்தியை, திரட்டியுள்ளார் என்பது, இந்த நுாலை வாசிப்பவர்களுக்குத் தெரியும். அன்பால் இணை பிரியாத அன்றில் பறவை, காக்கை, சிட்டுக்குருவி, கிளி, புறா, குயில், மயில், ஆந்தை போன்ற பல பறவைகளின் குணங்களையும், அதன் வாழ்க்கை, வாழும் சூழலையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர். சேர்ந்து வாழும் காதல் பறவைகள், அடிக்கடி முத்தமிட்டு ஆனந்தம் கொள்ளும். தன் […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more

பண்டைய தமிழர் பண்பாடு

பண்டைய தமிழர் பண்பாடு, பாலசுந்தரம் இளையதம்பி, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. பண்டைய தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு எனும் இந்நுால், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியால் எழுதப் பெற்றது. இது, பெயருக்கேற்ப பண்டைய காலத் தமிழர்களின் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இந்நுாலாசிரியரின் ஆய்வுப் பார்வை தெளிவாக உள்ளது. பண்டைய தமிழர்கள் வாழ்ந்த நாட்டிற்கு நாவலந்தீவு நிலம் எப்பெயரால் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவர், பிற்பாடு அப்பெயர் மருவியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கிச் செல்லும் பாங்கு அருமை. […]

Read more
1 15 16 17 18 19 84