கிரா 95

கிரா 95, மூன்று தொகுப்புகள், தொகுப்பாளர்கள் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், அன்னம் பதிப்பகம், விலை 700ரூ. ஆய்வுகள் அனுபவங்கள், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் 95-வது பிறந்தநாளையொட்டி ‘கி.ரா. என்னும் மானுடம்’, ‘கி.ரா.வும் புனைகதைகளும்’, ‘கோட்பாட்டு நோக்கு ஆய்வு’ என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. வாசக அனுபவங்கள், இலக்கிய நண்பர்களின் மதிப்பீடுகள், ஆய்வுக் கட்டுரைகள் என பல்வேறு கோணங்களில் கி.ரா.வை அணுகும் 82 கட்டுரைகளின் பெருந்தொகுப்பு. கி.ரா.வின் வாசகர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்புகள் புதிய வெளிச்சங்களைத் தரக்கூடும். புதுப் புது அர்த்தங்களையும்கூட. […]

Read more

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

இஸ்லாமிய வெறுப்புத் தொழில், நாதன் லீன், அடையாளம் பதிப்பகம், விலை 330ரூ. இஸ்லாமிய வெறுப்பு என்கிற சொல்லாடல் முன்னைக் காட்டிலும் இப்போது மிகப் பரவலாக சமூகத்தில் இருக்கிறது. ‘அச்சம் என்பது நல்ல விலைக்குப்போகும் சரக்கு’ என்கிறார் நாதன் லீன். இந்த அச்சம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைத் தனது ஆய்வில் முன்வைக்கிறார். “அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் அடித்துச்செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை, இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்டது” என்கிறார் நாதன் லீன். இஸ்லாமிய வெறுப்புத் தொழில் உருவாக்கும் அச்சத்தின் […]

Read more

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி

சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி, சிவ. விவேகானந்தன், காவ்யா, பக்.301, விலை ரூ.300. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும். சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் […]

Read more

பேரிடர்களை எதிர்கொள்வோம்

பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ. அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன. நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் […]

Read more

தமிழாய்வு: புதிய கோணங்கள்

தமிழாய்வு: புதிய கோணங்கள், அ.பாண்டுரங்கன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.240, விலை ரூ.200. தமிழாய்வுக்கென்று மரபு வழிப்பட்ட சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரைகள், தமிழாய்வைப் புதிய கோணத்தில் பார்த்திருப்பதுடன், தமிழாய்வு குறித்து, மரபுவழிப் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ள பிம்பங்களை உடைத்திருக்கிறது. தமிழ் உரைநடை பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை. அது லிட்ரரி கிரிட்டிசிஸம் என்ற பெயரில் போதிக்கப்படுகிறது. அதைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆங்கில நூல்களை அடியொற்றியே இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்னும் அடிப்படையில் கற்பிப்பதால், இலக்கிய விமரிசனம் […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.இராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு […]

Read more

பழந்தமிழில் காலங்கள்

பழந்தமிழில் காலங்கள், ச.சுபாஷ் சந்திரபோஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 160ரூ. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலப்பகுப்பை தொல்காப்பியர் காலம் தொட்டு விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் பழந்தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொழியில் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இந்தியாவின் இருண்டகாலம்

இந்தியாவின் இருண்டகாலம், சிசி தரூர், கிழக்குப் பதிப்பகம், பக். 384, விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வி.ன துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு,, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An […]

Read more

ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது. அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி […]

Read more

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள்

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.384, விலைரூ.200. அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல்.  இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள். இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன். கோயில், குளங்களை சுற்றிவருவதும், […]

Read more
1 14 15 16 17 18 84