கருத்தியல் பற்றிய சிந்தனைகள்

கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170. இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் […]

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை. மாற்கு, தமிழினி . போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

விதுர நீதியில் நிர்வாகம்

விதுர நீதியில் நிர்வாகம்,  நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், பக்.400, விலை ரூ.325. ஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு. பழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், […]

Read more

வள்ளுவப் பொருளியல்

வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200. திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது. பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன. உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார். திருவள்ளுவர் காலச் சூழலும் […]

Read more

மனிதனாய் ஆன கதை

மனிதனாய் ஆன கதை, முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விலை 40ரூ. குரங்கிலிருந்தா? மனிதப் பரிணாமம் குறித்து ஏராளமான புத்தகங்கள் இதுவரை வந்திருந்தாலும் காலத்துக்குத் தேவையான விவாதங்களுடன், ஆய்வு நிரூபணங்களுடன் எளிய மொழி நடையில் முனைவர்.சு.தினகரன் எழுதி இருக்கும் நூல்தான், ‘மனிதனாய் ஆன கதை’. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள்வரை பலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘அறிவியல் வெளியீடு’ இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், தமிழ் திசை , விலை 225ரூ. உலகம் போற்றும் தமிழ் இலக்கியமான திருக்குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம். தலைமைப் பண்பு, ஆளுமை, மேலாண்மை தத்துவம் ஆகியவற்றையும் திருவள்ளுவர் திறம்படத் தந்து இருக்கிறார். இந்தத் தலைப்புகளில் உள்ள 125 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள ஆழமான கருத்துகளை, ஆங்காங்கே நகைச்சுவையுடனும், எளிய முறையிலும் விளக்குவதோடு, இன்றைய வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதும் அழகாகத் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை,  தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 —

Read more

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும், சங்கர சுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. எந்தக் காலத்துக்கும், எந்த இனத்தாருக்கும் பொருந்தும் திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அத்தகைய திருக்குறளில் ஏராளமான விஞ்ஞான கருத்துக்களும் பொதிந்து இருக்கின்றன என்ற அதிசய தகவலைத் தரும் இந்தப் புத்தகத்தின், 12 தலைப்புகளில் அடங்கிய பல திருக்குறள்களில் என்ன என்பதை, அறிவியல் பூர்வமாக மிகச் சிறப்பாக, படங்களுடன் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். ஏற்கனவே படித்த குறள்களுக்குள் இவ்வளவு விஞ்ஞானம் அடங்கி இருக்கிறதா என்ற வியப்பு இதனைப் படிக்கும் போது மேலிடுகிறது. […]

Read more

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016)

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986- 2016),  அ.மார்க்ஸ், அடையாளம், பக்.278, விலை ரூ.240. 1986 – ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி அரசின் புதிய கல்விக் கொள்கை முதல் 2016 – ஆம் ஆண்டின் பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரை இந்தியக் கல்விமுறையில் என்ன என்ன மாறுதல்களைக் கொண்டு வர அவை முயன்றிருக்கின்றன என்று இந்நூல் ஆராய்கிறது. நூலாசிரியர் கல்விக் கொள்கை தொடர்பாக, கடந்த 30 ஆண்டுகளாக எழுதிய நான்கு குறுநூல்கள்,சில கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் […]

Read more

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more
1 12 13 14 15 16 84