வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன். ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். கிட்கிந்தா காண்டத்தில் […]

Read more

காகிதம்

காகிதம், வெ. இறையன்பு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 32, விலை 50ரூ. காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும், வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்நுால். காகிதப் பயன்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இந்நுால், வண்ணப் படங்களுடன் வர்ண ஜாலம் காட்டும் நுாலாசிரியரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இதழாளர் பாரதி

இதழாளர் பாரதி,பா.இறையரசன், யாழிசைப் பதிப்பகம், பக்.326, விலை ரூ.300. பாரதியை பலரும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த நிலையில் இந்த நூலில் ஐந்து தலைப்புகளில் பாரதியை பத்திரிகையாளராக முன்னிலைப்படுத்தி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். பாரதியாரின் இதழியல் நடை எனும் கட்டுரையில், பாரதி கூற்றாக, கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை, அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது என்று குறிப்பிட்டு […]

Read more

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150. சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர்,  பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.190, விலை ரூ.160. தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய ஆராய்ச்சி இதழின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. இந்நூலாசிரியர் பொன்னீலன், தனது இளமைப் பருவத்தில் இருந்தே நா.வானமாமலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பல இயக்கங்களில், […]

Read more

கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ. எவ்வகையான கல்வி தேவை? மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் […]

Read more

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், விலை 50ரூ. தோலுரிக்கும் முயற்சி! இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக இந்திய கல்வித் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நடைபெறும் சதிகளை தோலுரித்து இப்புத்தகத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2016-ன் மீது கடுமையான விமர்சனத்தை அவர் இப்புத்தகத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார். உலகமயம், வகுப்பு வாதம் இரண்டையும் மறைபொருளாக கொண்டு புதிய கல்வித் திட்டம் செதுக்கப்படுவதால் அது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் […]

Read more

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை, தொகுப்பு தேனி சுந்தர், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. புதிய கல்விக் கொள்கை அவசியமா? இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ – புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியாளர்கள் முனைவர் ச.மாடசாமி, எஸ்.எஸ்.இராஜகோபாலான், பேரா. ஆர்.ராமானுஜம், பேரா.என்.மணி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு […]

Read more

இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more
1 19 20 21 22 23 84