பன்முக நோக்கில் இராமானுசர்

பன்முக நோக்கில் இராமானுசர், பதிப்பாசிரியர்: ப.முருகன், கங்காராணி பதிப்பகம், பக்256, விலை ரூ.160. உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீஇராமானுசர் வேதத்துக்கு எளிய உரை வகுத்தவர். இளையாழ்வார், யதிராஜர், உடையவர், எம்பெருமானார், சடகோபன் பொன்னடி, கோயிலண்ணர், பாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர், இராமானுசர் ஆகிய எட்டுப் பெயர்களால் இவரை வைணவர்கள் போற்றித் துதிக்கின்றனர். இராமானுசரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில், சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த் துறையினரால் தேசியக் கருத்தரங்காக நடத்தப்பட்டு, பன்முக நோக்கில் இராமானுசர் பற்றி 21 பேர் எழுதிய ஆழமான ஆய்வுக் […]

Read more

அமராவதி

  அமராவதி, இரா.ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மண்டலம், விலை 500ரூ. நடந்தாய் வாழி அமராவதி! தமிழ் மொழியில் நதிகளைப் பற்றி வெளியான புத்தகங்கள் மிகக் குறைவே. காவிரியைப் பற்றி தி.ஜ.-வும், சிட்டியும் எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’க்குப் பிறகு, நதியைப் பற்றி விரிவான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது, உடுமலையைச் சேர்ந்த இரா.ரவிக்குமார் எழுதிய அமராவதி நதியைப் பற்றி ஆய்வுப் பார்வையிலான புத்தகம். கொங்கு மண்டலத்தில் பழனி மலைத் தொடருக்கும் ஆனை மலைத் தொடருக்கும் இடையே […]

Read more

திருக்குறளில் தன்னம்பிக்கை

திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல், முனைவர் த.தமிழரசி, அய்யா நிலையம் வெளியீடு, பக். 208, விலை 200ரூ. ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக அப்படைப்பாளியின் வரைபடம் ஒன்று புலனாகும். முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியத்தின் கதைக்களத்தில் உலா வரும் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை பலவகையிலும் ஆய்ந்து, அவரை ஒரு வாழ்வியல் படைப்பாளியாக நிலை நிறுத்துகிறார் முனைவர் தமிழரசி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் கதை மாந்தர்களிடையே வெளிப்படும் எதிர்பார்ப்பற்ற மனிதநேயம், பயன் பெற்றதும் நன்றி மறத்தல், நெருக்கடியிலும் சுயநலம், துன்பத்திலிருந்து மீட்கும் நம்பிக்கைகள், […]

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ. கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர். நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி […]

Read more

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் ரகு அந்தோணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 273, விலை 250ரூ. கி.பி., 1500 –- 1600 காலத்திற்குட்பட்ட சோழ மண்டலக் கடற்கரையும், அதன் உள்நாட்டு விபரங்களும் அடங்கிய முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சார்ந்த நுால் இது. சோழ மண்டலப் பகுதியின் பொருளாதார, சமூகத்தை ஆய்வு செய்கிறது; இதற்காக உள்நாட்டு, அயல்நாட்டுத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அக்காலக்கட்டத்தில் தக்க வரலாற்று விளக்க நுால்கள் இல்லாத நிலையில், கல்வெட்டுகளின் தேதிகளும் தெளிவில்லாத நிலையில், தென்னகக் […]

Read more

திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம்

திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம், கவிஞர் ஆ. பட்டிலிங்கம், கவிஞர் ஆ.பட்டிலிங்கம், பக். 72, விலை 50ரூ. தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பெறும் சைவ – வைணவ கோவில்கள், அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிட்டு, வழிபாட்டு முறைகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர். விநாயகர் வரலாறு என்ற தலைப்பில், விநாயகர் வழிபாடு, 6 – 7ம் நுாற்றாண்டில் தான் தமிழகத்தில் பரவியது என்றும், விநாயகரும் விஷ்வக்சேனரும் ஒருவரே என்பது போலவும் எழுதியுள்ளார். சோழர்கள், பாண்டியர்கள் கட்டிய கோவில்களைக் குறிப்பிட்டு, தஞ்சையின் சாசனக் குறிப்புகளும் எழுதப் […]

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, எதிர் வெளியீடு, விலை 120ரூ. நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 21 22 23 24 25 84