பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, கெ.இரவி, நிலாசூரியன் பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. ஏதேனும் ஓர் இலக்கை எடுத்துரைப்பது இலக்கியம் எனப்படும். மனித உள்ளத்தின் தன்மைகளை எடுத்துரைப்பது உளவியல் எனப்படும். ஆளுமை என்பதை, ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்று கூறுவர். இது, தனி மனிதனது உடல் தோற்றம், பேசுவது, உடுப்பது, பழகுவது, அறிவாற்றல், குணங்கள், பண்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இம்மூன்றையும் விரிவாக விளக்குகிறது இந்நூல். சங்க இலக்கியங்களை உளவியல் இலக்கியம் என்கிறார் தமிழண்ணல். அந்த வகையில் இலக்கியமும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவை. இலக்கியத்தில் உள்ள ஆளுமை […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

உணவின்றி அமையாது உலகு

உணவின்றி அமையாது உலகு,  அ.உமர் ஃபாரூக், விகடன் பிரசுரம், பக்கம் 103, விலை ரூ.110. ‘இந்த உலகில் எல்லா போர்களும் தொடங்கிய இடம் உணவுதான். எல்லா உணவுகளையும் நம்மால் இயற்கையைப் பின்பற்றி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நாமோ அன்றாட உணவுகளில் கூட நஞ்சைக் கலந்து வைத்திருக்கிறோம்’ என்கிறார் நூலின் ஆசிரியர். ஆங்கில மருத்துவரும், அக்குபஞ்சர் மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள நூலாசிரியர், நம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களான பால், சர்க்கரை, எண்ணெய், மசாலாத்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களோடு விளக்குகிறார். மேலும் பலர் விரும்பி […]

Read more

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும், இரா.தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக். 112, விலை ரூ.70. நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம் கோமாளி கலைஞர்கள். நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக சமர்ப்பித்த‘ ‘ராசா ராணி ஆட்டத்தில் கோமாளிகள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்நூலாக மாறியிருக்கிறது. கோமாளி கலைஞர்களின் தோற்றம், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளில் அவர்களுடைய […]

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 80ரூ. இதயம், மனிதனை இயங்கச் செய்கின்ற தொழிற்சாலை. இத்தகைய சிறப்பு பெற்ற இதயம் எவ்வாறு இயங்குகின்றது? இதயத்தில் வருகின்ற நோய் நிலைகள், அதைத் தடுக்கும் வழிமுறைகள், எத்தகைய உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற கருத்துகளை நவீன விஞ்ஞான மருத்துவப் பார்வையிலும், அன்றைய சித்தர்கள் காட்டிய வழியிலும் இந்த நூலில் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா அழகிய முறையில் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு, சு.சீனிவாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், பக். 264, விலை 250ரூ. தமிழ் மொழியின் கட்டமைப்பு – பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாடு அணுகு முறை என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீட்டு நுாலாக வந்துள்ளது. பேராசிரியர் ராம.சுந்தரம் நெறியாளராக இருந்து வழிகாட்டிஉள்ளார்.கணித அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியை நுட்பமாகவும், கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வு செய்துள்ளார். தமிழின் எழுத்துகள், அதன் வரி வடிவங்கள், ஒலி […]

Read more

தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு, பக்.224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் கிடக்கும் […]

Read more

தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள்

தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள்,  த.கண்ணன், பல்லவி பதிப்பகம், பக். 206, விலை ரூ.155. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாகியுள்ளது. லக்ஷ்மியின் ‘கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி‘, ராஜம் கிருஷ்ணனின் ‘மலர்கள்‘ வாஸந்தியின் ‘மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்‘, எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ ஸ்டெல்லாபுரூஸின் ‘மாயநதிகள்‘, ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ ஆகிய புதினங்களின் கதாபாத்திரங்கள் எவ்வகையான மனநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நூல் ஆராய்கிறது. மனநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் – பதற்றம், மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள், ஆளுமைக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதற்கான காரணங்கள் விரிவாக இந்நூலில் […]

Read more

காவிரி மகாத்மியம்

காவிரி மகாத்மியம், வே.மகாதேவன், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வுமையம், பக்.208, விலை 100ரூ. அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண, வரலாற்றுச் சான்றுகளோடு மேற்கோள் பாடல்களுடன் விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. குரு பகவான், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நதியில் புஷ்கர மேளா தீர்த்தவாரி நிகழ்வது பற்றி குறிப்பிடுகையில், 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியில் புஷ்கரம் உருவாக ஏற்பாடாகி, அதன்படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கைக்கு விசேஷம். ரிஷபத்தில் நர்மதை, […]

Read more

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில்

மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், விலை 200ரூ. இந்தப் புத்தகத்தை எழுதிய சுரானந்தா, உண்மையில் மகாபாரதத்தை நன்கு ஆராய்ந்து, புதிய கோணத்தில் எழுதியுள்ளார். இடையிடையே தன் கருத்துக்களையும் சொல்கிறார். இதில் பல புதிய தகவல்கள் அடங்கியுள்ளன. சகுனி, பகடை உருட்டுவதில் வல்லவன். அதற்குக் காரணம் அவனுடைய அண்ணன், தான் இறப்பதற்கு முன்னதாக இரண்டு பெருவிரல்களையும் வெட்டித் தருகிறான். அவைதான் பகடைக்காய்களாக மாறி, வெற்றி தேடித்தருகின்றன. இப்படி சுவையான தகவல்கள் நிறைய உள்ளன. நன்றி: தினத்தந்தி, 08/11/2017

Read more
1 23 24 25 26 27 84