ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், விலை 300ரூ. ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குடில்களின் அமைப்பு, உணவுப் பழக்கங்கள், திருமணம் செய்யும் முறை, திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த நூலில் முனைவர் ஜே.ஆர். லட்சுமி பதிவு செய்துள்ளார். ‘இவர்களுக்கு கல்வியறிவு, இடஒதுக்கீடு பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்ற வேதனையையும் அவர் இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், பக். 194, விலை 200ரூ. பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேளூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம் முதல், கோவிலூர் வரை, 32 கிராமங்களில் கள ஆய்வு செய்து, அங்கு நிலவும் வாழ்வு முறை, தொழில், பண்பாடு, திருமணம், உணவு முறை, பேச்சு மொழி போன்ற எல்லாத் தகவல்களையும் திரட்டி வழங்கியுள்ளார். அறிமுகம் துவங்கி, கள ஆய்வுக்கு உதவியவர்கள் வரை, […]

Read more

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம்,  பக்.374, விலை ரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. ‘கம்பர் விலாசம் 39’ ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, புலவர் கா. கோவிந்தன், ராமையா பதிப்பகம், விலை 90ரூ. நாகரிகத்தில் சிறந்தவர்கள் தமிழ் மக்கள். ஆரியர் வருகைக்கு முன்பு அவர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்த நூலின் நோக்கம். தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், சமுதாய அமைப்பு முறை, திருமண முறை, வணிகம் என பல்வேறு வாழ்க்கை முறைகளை சங்க இலக்கிய சான்றுகளுடன் புலவர் கா.கோவிந்தன் தொகுத்தளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும், பா. பாரதி, சிவகுரு பதிப்பகம், விலை 90ரூ. வணிக நோக்கம் இன்றி, இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடுபவை சிற்றிதழ்கள். சிறந்த சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன. புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றியும் கூறுகிறார் ஆசிரியர் பா. பாரதி. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

சங்க இலக்கியத்தில் சூழலியல்

சங்க இலக்கியத்தில் சூழலியல், ஆ. அரிமாப்பாமகன், இராசகுணா பதிப்பகம், விலை 190ரூ. அனைத்து உயிர்களுக்கும் மரியாதை தர மறந்தால், வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்துவிடும் என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். சங்க இலக்கியங்கள் சூழலியல் திறனாய்விற்கு உட்பட்டு இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும், பேராசிரியர் முனைவர் ரா. நாராயணன், அலைகள் வெளியீட்டகம், பக். 184, விலை 140ரூ. பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல மலைகளும் கடலால் சூழப்பட்டு அழிந்து போயின. பல இலக்கண, இலக்கிய நூல்களும் அழிந்தன என்று வரலாறு கூறுகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளின் துணையோடு’ 58 – துணை நூல்களின் மேற்கொள்களுடன், புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலக்கிய உளப்பகுப்பாய்வு, […]

Read more

ஆண்கள் படைப்பில் பெண்கள்

ஆண்கள் படைப்பில் பெண்கள், சு. ஜெயசீலா, காவ்யா, பக். 134, விலை 130ரூ. நாவல்களில் பெண்கள் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராயும் நூல். கு. அழகிரிசாமி, ஐசக் அருமை ராஜன், சு. சமுத்திரம், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 16 புதினங்களில் பெண்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே போராடுவதை இந்நூல் வெளிக்காட்டுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

பன்முக நோக்கில் தொல்காப்பியம்

பன்முக நோக்கில் தொல்காப்பியம், வா.மு.சே. ஆண்டவர், லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. தமிழில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதுபற்றி, பல்வேறு தமிழறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார், முனைவர் வா.மு.சே. ஆண்டவர். தமிழின் அருமை, பெருமை பற்றி இந்நூலில் வா.மு.சே. ஆண்டவர் எழுதியிருப்பதாவது “உலகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர், 90 வயது ஆகியும் மொழியியல் ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் நேர்ம்ச்ம்ஸ்கி என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பழமையான மொழிகள் இரண்டு என்றும், அதில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் […]

Read more
1 25 26 27 28 29 84