ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ. உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது […]

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், விலை 100ரூ. ஐன்ஸ்டைன் பொதுச்சார்பியல் கோட்பாட்டினை வெளியிட்டு நூறு ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், நோபல் பரிசுபெறும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன? அவரது கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு என்ன லாபம்? அவரது மூளையில் இருந்த சிறப்பு அம்சம் என்ன? ஐன்ஸ்டைன் பற்றி வித்தியாசமான கோணத்தில் விளக்கமாகச் சொல்லும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை)

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை), மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதிநூல், அதை அடுத்து சிறந்த நீதிகளை போதிக்கும் நூல் நாலடியார். இதில் அடங்கிய பாடல்கள், சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. சில கருத்துக்களை திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுமே வலியுறுத்துகின்றன. அதுபற்றி “யோகாசித்தர்” என்று புகழ் பெற்ற மானோஸ் ஆராய்ந்து அதுபற்றி இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார். திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நீதிநூல்களையும் ஒன்றாக படித்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்நூல் தருகிறது. மானோஸ் முயற்சி பாராட்டுக்கு […]

Read more

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. சில குழந்தைகள், பிறந்ததும் இறப்பது ஏன்? விபத்துகளில் மரணம் ஏற்படுவதற்கு காரணம் என்ன? இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஒருவருடைய ஆயுளை அறிய வழிகாட்டுகிறது இந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

காப்பியங்கள் அணிந்த காலணிகள்

காப்பியங்கள் அணிந்த காலணிகள், தாமல் கோ.சரவணன், கோமல் பதிப்பகம், விலை 50ரூ. கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர். பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது. […]

Read more

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக்.104, விலை ரூ.100. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிகவும் எளியமுறையில் விளக்கும் நூல். இடம், வலம், மேலே, கீழே, சிறியது, பெரியது, அதிக தூரம், குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம், இடம்சார்புடையவை. திசை சார்புடையது. பேரண்டப் பிறப்பு, முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு போன்றவற்றை சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் […]

Read more

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன்

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன், தொகுப்பு அறிமுகவுரை டீஸ்டா செடல்வாட், தூலிகா புக்ஸ், விலை 550ரூ. எம்மானை வீழ்த்திய மாயமான்! இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பாக வேற்றுமைகளைக் கடந்து கோடானு கோடி மக்களை அணி திரட்டிய அண்ணல் காந்திக்கு எதிரான உருவான விஷமிக்க கசப்புணர்வு, அவர் காலம் எல்லாம் உறுதிபட முன்வைத்த கருத்துகளை அனைத்தையும் மறுதலித்தது ஆகிய அனைத்தையும் நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அண்ணலின் படுகொலையின் பின்னேயுள்ள அரசியல் தன்மையை நம்மால் உணர முடியும். கொலையுண்டவரின் மீது பழி […]

Read more

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும்

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும், தமிழ்மணவாளன்,  அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக்.400, விலை ரூ390. ஓர் ஆய்வேடு நூலாகியுள்ளது. தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைகளில் நாடக ஆக்கக் கூறுகள், நவீன தமிழ்க் கவிதைகளில் பாத்திரப் படைப்பும் உரையாடலும், நவீன தமிழ்க் கவிதைகளில் காலமும் வெளியும் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு திகழும் இந்நூல், எடுத்துக் கொண்ட தலைப்புக்குத் தகுந்தாற்போல இந்நான்கு இயல்களிலும் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. நூல் முழுவதும் நவீன தமிழ்க் […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்; நலம்,  பக்.128; விலைரூ.125. யோகாசனம், தியானம், பக்தி போன்றவை மனித மூளை, மனம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் மாறுதல்களை அறிவியல் அடிப்படையில் விளக்கும் நூல் இது. உதாரணமாக சிலவற்றைச் சொல்லலாம். ‘கம்ப்யூட்டர் உதவியுடன் மனித மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் அலை அளவுகளை உடனடியாகக் கணக்கிடலாம். அதன்மூலம், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்னைகளையும் எளிதில் அறியலாம். ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது இந்த ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் […]

Read more
1 24 25 26 27 28 84