கேட்பவரே

கேட்பவரே, லக்ஷ்மி மணிவண்ணன், படிகம், விலை 320ரூ. வாழ்க்கையை விடவும் பெரிய வகைமாதிரியை உருவாக்குவதே கலையின் நோக்கம். தமிழ் கவிதையின் தரிசனங்களில் வெகு அரிதாகவே லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை காண முடிகிறது. அது அப்படித்தான். கலைஞனது சுயசரிதையில் எஞ்சிக் கிடக்கும் சுவாரஸ்யம்தான் என்ன? அவனது வாழ்க்கையா? ஒரு மனிதன், படைப்பாளனாகிற அந்தக் கணத்திலிருந்தே அவன் செல்லுகிற பாதை முன்கூட்டி நிச்சயக்கப்பட்டு விடுகிறது. மணிவண்ணன் சூதாட்டப் பலகையில் சுற்றி வருகிற எண்களைப் பார்க்கிற அதி தீவிர கவனத்திலேயே வாழ்க்கையைப் பார்க்கிறார். பிரதி செய்யவே முடியாத அவரது […]

Read more

சேது காப்பியம்

சேது காப்பியம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலை 600ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தன் வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில், “சேது காப்பியம்” (கவிதை வடிவில்) எழுதி வருகிறார். இப்போது 8-வது பகுதி வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு முன்பே, தமிழ்ஈழ விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் மாநாடு நடத்திய டாக்டர் பஞ்சாட்சரம் பற்றி இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரை “மா.கோ.ரா” என்றே குறிப்பிடுகிறார், பெருங்கவிக்கோ. ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆர். என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டால் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுமே. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.‘

Read more

சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி, குவைத் கா. சேது, மணிமேகலைப்பிரசுரம், விலை 240ரூ. தமிழகத்தில், செம்பொன்மாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்து, மும்பையில் வேலை பார்த்து, பின்னர் குவைத் நாட்டுக்குச் சென்ற கா.சேது, அங்கு விமானப் பணியாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார். குவைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சிறந்த எழுத்தாளரான இவர், தன் வாழ்க்கை வரலாற்றை “சிகரத்தை நோக்கி” என்ற தலைப்பில் எழுதினார். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. தன் வாழக்கை அனுபவங்களை கதைபோல சுவைபட […]

Read more

திரைத்தொண்டர்

திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், விகடன் பிரசுரம், பக். 288, விலை 185ரூ. அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுயசரிதை இந்நூல். பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது. […]

Read more

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள், ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக், கண்ணதாசன் பதிப்பகம், பக்.320, சலுகை விலை 100ரூ. தொழில் மேதை ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக் தோல்விகளை எதிர்த்துப் போராடி தான் கண்ட வெற்றிகளை தன் வாழ்க்கை வரலாறு எழுதுவதுபோல, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன் அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாகத் தந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த சூழல் பள்ளிப்படிப்பு, கல்லூரிக்குப்பின் பார்த்த வேலை, மாதச் சம்பளத்தை உதறிவிட்டு, புதிய தொழில் தொடங்கியது. அவரது மனைவியின் ஒத்துழைப்பு, குடும்பத்தார் […]

Read more

என் கதை

என் கதை, சார்லி சாப்ளின், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 190ரூ. ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். மறைந்த பிரதமர் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் ஆகியோர் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், “உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர்” என்று தீர்மானிக்கப்பட்டது. “திரைப்படத் துறையில் தோன்றிய உண்மையான மாமேதை சாப்ளின்” என்று பேரறிஞர் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, கே. சிவகாமிநாதன், கலைஞன் பதிப்பகம், பக். 192, விலை 180ரூ. அரசு துறையான ஆவினில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே. சிவகாமிநாதன், தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரியாக, அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்பு நடந்த பல வரலாற்று தகவல்களையும், சுவையாகக் கூறியுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊரில் இருந்து, நினைவுகளை தொடங்கியுள்ளார். சாதாரண கிராமமாக இருந்த […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், ரமணன், கவிதா பப்ளிகேஷன், பக். 264, விலை 800ரூ. இசையரசியின் வாழ்க்கைப் பயணம் இசையரசி எம்.எஸ்.,ஸின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தாலும் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியாகிஇருக்கும் இந்த நூல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. எம்.எஸ்.,ஸின் வாழ்க்கையின் உன்னத தருணங்களை மிகுந்த உணர்ச்சிகரமான நடையில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். எம்.எஸ்., ஆறு வயது குழந்தையாக இருந்தபோதே, ‘ஆனந்தாரா’ என்ற மராட்டியப் பாடல் அருமையாக நம் முன்னால் பாடியதிலிருந்து, அவரது வாழ்நாள் இறுதி வரை எதிர்பாராத பல சம்பவங்களே […]

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 420, விலை 350ரூ. வாழ்வில் திட்டமிட்டு உழைத்து, உயர்ந்த சிகரங்களை எட்டியவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவை. அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் வாழ்க்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். நாமக்கல்லில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கல்வி வேட்கையால் உந்தப்பட்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்ற பெரியசாமி, அங்கேயே கல்வியாளராக மாறினார். இருந்தபோதும் தாய்மண் மீதான […]

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி. ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 352, விலை 350ரூ. கல்லும் முள்ளும் நிறைந்த கடினப்பாதையில் தொடங்கி, நிறைந்த முன்னேற்றத்தை அடைந்த தொழிலதிபர் பழனி.ஜி.பெரியசாமி, தன் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் மாணவரான பெரியசாமி, அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக சென்ற முதல் தலைமுறை இந்தியர் ஆக செல்லும் முன், அங்கு செல்ல தன் மாமனார் தயங்கியதை சுட்டிக்காட்டியிருப்பது, அருமை. ஆனாலும் தன் மனைவி அதை மீறி அனுப்ப முன்வந்தது, தமிழக குடும்பங்களில் உள்ள, […]

Read more
1 3 4 5 6 7 11