கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை – சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை,  முகில், விகடன் பிரசுரம்,  பக்.264, விலை ரூ.190 எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகளான ஹிட்லர், முசோலினியை விட மிகக் கொடூரமானவர்களாக உலகில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் 21 சர்வாதிகாரிகளின் கதை இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 3800 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபியின் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை உண்டு. இல்லையென்றால் குற்றம் சுமத்தியவனுக்கு மரணதண்டனை இருந்திருக்கிறது. கி.பி.1547 இல் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகைக்கு மேற்கே அர்பாட் […]

Read more

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ்

அம்பேத்கர் பிள்ளைத் தமிழ், வித்துவான் வீ.சேதுராமலிங்கம், உரை ஆசிரியர் ரா.சரவணன், டுடே கிராபிக்ஸ் வெளியீடு, விலை 250ரூ. சமூக நீதி சிந்தனையாளர் டாக்டர் அம்பேர்கர் மீது பாடப்பட்ட, தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக இந்த நூல் திகழ்கிறது. அம்பேத்கர் தொடர்பான பல வரலாற்று தகவல்களை, இலக்கியச் சுவையுடன் பாடல்களாகத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூல் மூலம் ஆசிரியரின் இலக்கிய புலமை முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. வளரும் தலைமுறையினர், அம்பேத்கர் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இலக்கியச் சுவையுடன் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி. […]

Read more

மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே, க.ஜெயச்சந்திரன், காவ்யா, பக்.88, விலை ரூ.90. மகாராஷ்டிராவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் ஜோதிராவ் புலே. 1827 இல் பிறந்த அவர், அனைத்துச் சாதியிலும் உள்ள ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 170 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளைத் திறந்து நடத்தியவர். அதற்காக அவருடைய தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என்றபோதிலும் மனம் கலங்காமல் தொடர்ந்து தனது பாதையில் நடைபோட்டவர். விதவைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு – இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.480, விலை ரூ.250. வரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார். காந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக்.120. விலை ரூ.300. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் வரம் வெகு சிலருக்கே வசப்படும். அதில் எம்ஜிஆருக்கு தனியிடம் உண்டு. எம்ஜிஆர் உடல் நலிவுற்று அதிலிருந்து மீண்டதில் தொடங்கி, சில காலத்துக்குப் பிறகு அவர் மரணம் அடைந்தது வரைக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கிப் பழகியவரும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவர் எச்.வி.ஹண்டேவால் எழுதப்பட்டது இப்புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. எனவே, அதில் […]

Read more

என்றும் எம்.ஜி.ஆர்.

என்றும் எம்.ஜி.ஆர்., புவனகிரி செயபாலன், விஜய் பதிப்பகம், விலை 200ரூ. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை பற்றியும் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றில் இல்லாத பல புதிய செய்திகளை இந்த நூல் தருகிறது. எம்.ஜி.ஆருடன் பேசிப் பழகி, அவரது உணர்வுகளோடு ஒன்றி, அவரது வழி நடக்கும் 15 பேர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம், எம்.ஜி.ஆர். தொடர்பான வியப்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகச் சாதாரண நிலையில் இருந்த மு.கற்பகவிநாயகம், […]

Read more

தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928

தி கோமின்டர்ன் அண்ட் ஏர்லி இந்தியன் கம்யூனிசம்: 1921-1928, பாஞ்சாலி மஜும்தார், டுவார்ட்ஸ் ஃப்ரீடம் வெளியீடு, விலை: ரூ.295 இந்திய விடுதலைப் போராட்டம் முகிழ்விடத் தொடங்கிய நேரத்தில், ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் சோஷலிசக் கருத்துகளும் இங்கே வேர்விடத் தொடங்கின. லெனின் தலைமை விவாதங்களில் வெளிநாடுகளில் வசித்த இந்திய இளைஞர்கள் பலரும் பங்கேற்றனர். சமூக விடுதலைக்கு முன்பாக காலனி ஆதிக்கத்திடமிருந்து விடுபட வேண்டும் என்றார் லெனின். அதற்கிணங்க எம்.என்.ராய் உள்ளிட்டோர் பம்பாயில் டாங்கே, சென்னையில் சிங்காரவேலர், கல்கத்தாவில் முசாஃபர் அகமது என இந்திய மண்ணில் சோஷலிசக் […]

Read more

நாகரிகங்களின் மோதல்

நாகரிகங்களின் மோதல், உலக ஒழுங்கின் மறுஆக்கம், சாமுவேல் பி.ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், விலை 540ரூ. அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்குமான உறவு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் – கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை. பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 300ரூ. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1984 செப்டம்பர் 15 -ந் தேதி, விழா ஒன்றில் திடீர் என்று மயங்கி விழுந்த போது தான் அவருக்கு எத்தகைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது என்ற தகவலை டாக்டர் எச்.வி.ஹண்டே இந்தப் புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார். அது முதற்கொண்டு எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை அவருக்கு என்னென்ன கோளாறுகளுக்கு என்னென்ன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? […]

Read more
1 20 21 22 23 24 104