மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்

மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும், கே.எம்.சரீப், சமூக உயிரோட்டம் வெளியீடு, விலை 500ரூ. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை ஆட்சியாளர், முதல் கவுன்சிலர், திவான் முதலான முக்கியப் பதவிகளை வகித்தவர் கலிபுல்லா. விளிம்புநிலை மக்களுக்காக சமஸ்தானத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முன்னோடி. அவற்றில் முக்கியமானவை, மதிய உணவுத் திட்டமும் தவணை முறைக் கடனில் வீட்டு மனைகள் அளிக்கும் திட்டமும். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் குறித்த பதிவுகள் அருகிவிட்டன. அவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு தரவுகளைச் சேகரித்து நூல்வடிவம் வழங்கியிருக்கிறார் கே.எம். சரீப். […]

Read more

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100, லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார். அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more

சுரங்க நகரம்

சுரங்க நகரம், மு.நடேசன், செம்மண் பதிப்பகம், விலைரூ.150. நெய்வேலி நிலக்கரி நிறுவன வளர்ச்சி வரலாற்றை, பணி அனுபவ பின்புலத்துடன் விவரிக்கும் நுால். மாற்றங்களை ஆவணப்படுத்தும் உள்ளூர் வரலாற்றுப் பதிவாக உள்ளது. எளிய மொழி நடை வாசிக்க ஏதுவாக உள்ளது. சுரங்கம் துவங்கியதில் இருந்து, வளர்ந்த விதம், உழைப்பு, அதை நெறிப்படுத்தும் நிர்வாகச் செயல்பாடு என கவனமுடன் பதிவாகிஉள்ளது. மொத்தம் 22 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. போட்டோ மற்றும் ஆவண ஆதாரங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்ட பயன்பட்ட இயந்திர படங்கள், பணி நடைமுறை […]

Read more

இந்திர விழா

இந்திர விழா, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.130. இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத் தலைவன் என்றும் இலக்கிய ஆதாரங்களோடு நிறுவுகிறார். ஐந்து கட்டுரைகள் அழகு செய்கின்றன. இந்திர விழா என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. மழை வளம் பெருகவும், மன்னனின் ஆட்சி சிறக்கவும் விழா எடுப்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது கோவை பேரூரில் நடைபெறும் இந்திர விழா எனும் நாற்று நடவுத் திருவிழாவையும் […]

Read more

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி, கு.அன்பழகன், காவ்யா, பக்.368, விலை ரூ.370. அடிமை இந்தியாவில், ஒற்றுமையின்றி பல்வேறு பாளையங்களாகச் சிதறிக்கிடந்த நெல்லைச் சீமையில், பூலித்தேவன் அரசாண்ட நெல்கட்டும் செவ்வல் மட்டுமே கப்பம் கட்டாமல் ஆங்கிலேயரை துணிவுடன் எதிர்த்தன. பூலித்தேவனின் படைக்குத் தலைமைத் தளபதியாக விளங்கியதோடு மட்டுமல்லாது, அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய வெண்ணிக் காலாடியின் வீர தீரத்தையும் அவர்தம் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்றையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. சாதிய உணர்வுகள் தலைதூக்காமல், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்ணிக் காலாடியின் […]

Read more

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி, குமார் ராஜேந்திரன், தாய் வெளியீடு, விலை குறிப்பிடப்படவில்லை. எம்.ஜி.ஆர்., பற்றி, ‘தாய்’ வார இதழில் அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரை தொகுத்து ஆக்கப்பட்ட நுால். 41 அத்தியாயங்களில் எம்.ஜி.ஆர்., குறித்த தகவல்களை, படங்களுடன் அழகாக தொகுத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த ‘பாரத ரத்னா’ விருது வாங்கிய தருணம், இலங்கை, கண்டியில் நீதிபதியாகவும், ஆசிரியராகவும் எம்.ஜி.ஆரின் தந்தை பணிபுரிந்து, ஒரு தெருவுக்கே அவரது பெயரைச் சூட்டும் அளவிற்கு வாழ்ந்ததையும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., பற்றி அறிய உதவும் […]

Read more

குளிரும் தேசத்துக் கம்பளிகள்

குளிரும் தேசத்துக் கம்பளிகள், சதீஸ் செல்வராஜ், நெம்புகோல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை, போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் விவரிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், வணிகத்துக்காகவும், மூலப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் போர்த்துக்கீசியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள் செய்த முயற்சிகளின் விளைவாக பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த […]

Read more

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், பல்லடம் மாணிக்கம், காமாட்சி சண்முகம்; காவ்யா, பக்.396, விலை ரூ.400; கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய சான்றோருள் குறிப்பிடத்தக்கவர் தெ.பொ.மீ. எனப்படும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார். அவர் இந்நூலில், தமிழ்மொழியின் வரலாற்றைச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். தமிழ்மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பட்டியலிடும் முதல் கட்டுரையில் தொடங்கி, “மூலத் திராவிட மொழி’, “தென் திராவிட மொழிகளும் தமிழும்’, “தொல்காப்பியத் தமிழ்’, “சங்ககாலத் தமிழ்’, “பல்லவர் சோழர் நாயக்கர் காலத் தமிழ்’ உள்ளிட்ட பத்து தலைப்புகளில் தமிழ்மொழியை […]

Read more

வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை

வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை, ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், வெர்சோ பேஜஸ் பதிப்பகம்,  பக்.160, விலை  ரூ.200. வடலூரின் தோற்றம் முதல் நிகழ்காலம் வரையிலான வரலாற்றைக் கூறும் நூல்.<br>பார்வதிபுரம் வடலூரான வரலாறு, இராமலிங்க பெருமானின் வரலாறு என வரலாற்றுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. திருவருட்பாவில்தான் வடலூர் என்ற பெயர் முதன்முதலாககுறிப்பிடப்பட் டுள்ளது என்ற செய்தியை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருத்துவம், இசுலாம் போன்ற மதங்களின் தாக்கம் பற்றியும், அம்மதங்கள் எப்படி மனிதத்தையும், […]

Read more
1 3 4 5 6 7 104