பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125 . பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை […]

Read more

அசோகர்

அசோகர், ஒரு பேரரசின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.272, விலை ரூ.300. பேரரசர் அசோகரின் வரலாறு, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.   ‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்’ என்று அறிவித்த அசோகர், பின்னாளில் தனது சகோதரர்களைக் கொன்று விட்டுதான் அரியணை ஏறினார் என்பதை பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அரச பதவிக்கு வந்தவுடனேயே தனது வன்முறை ஆட்டத்தை அசோகர் தொடங்கிவிட்டதாக அசோகாவதனம் குறிப்பிடுகிறது. கையில் அகப்பட்ட அப்பாவிகளை விதவிதமாக வதைத்துக் கொல்வதற்காக கிரிகா என்பவனையும் […]

Read more

பண்டைத் தடயம்

பண்டைத் தடயம், பதிப்பாசிரியர்கள்: நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ275. தமிழகத்தின் வடபகுதியும், ஆந்திர மாநிலத்தின் சிறு பகுதியும் இணைந்த பகுதிதான் தொண்டை நாடு. ஜவ்வாது மலை, வேங்கடமலை, வங்கக்கடல், பெண்ணையாறு ஆகிய நான்கும் தொண்டை நாட்டின் எல்லைகள். அப்பர், சுந்தரர், வள்ளலார் மற்றும் முதல் மூன்று ஆழ்வார்கள் முதலிய அருளாளர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றிய பெருமைக்குரியது இந்நாடு. அத்தகைய தொண்டை மண்டலத்தின் தொன்மைச் சிறப்புகளையும், வரலாற்று உண்மைகளையும், அங்கு கிடைத்த தடயங்களையும் இந்நூல் பறை சாற்றுகிறது.  அதுமட்டுமல்ல, திருமாணிக்குழி-சோழர்கால அளவுகோல், […]

Read more

தியாகம் விளைந்த செம்புலம்

தியாகம் விளைந்த செம்புலம், பொன்முடி. சி.சுப்பையன், விஜயா பதிப்பகம், பக். 320, விலை ரூ.250. கோவைக்கு கிழக்கே இருபது கல் தொலைவில் நெடுஞ்சாலைகளின் தீண்டல் எதற்கும் சிக்காமல், உள் ஒதுங்கியிருக்கும் ஊர் அது. அங்கு பழமையும், புதுமையும் கலந்த ஒரு பண்பாடு உயிர்த் துடிப்போடு இன்றும் இருக்கிறது. கம்பும், நெல்லும், தானியங்களும் மட்டுமல்லாது, உழைப்பும் விளைந்த பூமி கண்ணம்பாளையம் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய முடிகிறது. பெரியவர்கள் பலரும் தந்த தகவல்களோடு ஊரில் தனது அனுபவங்களையும் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.  ஊரின் வரலாற்றை காலவரையறையோடு […]

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம், விலை 300ரூ. மிகச் சாதாரண நிலையில் இருந்து கடின உழைப்பால் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தவரும், அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவரான வி.ஜி.சந்தோசத்தின் 85-வது பிறந்த நாளையொட்டி இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தொழில் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்துத்தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வி.ஜி.சந்தோசம் பற்றி வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. வி.ஜி,சந்தோசத்தின் அருமை பெருமைகளைக் கொண்டுள்ள இந்த நூல், உழைத்து […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), த.முத்தமிழ்,  காவ்யா, பக்.418, விலை ரூ.420. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக, புற, அற நூல்கள் உள்ளன. அவற்றில் அகம், புறம் சார்ந்த கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது ஆகிய ஏழு இலக்கியங்களின் பதிப்பு வரலாற்றை முழுமையாகத் தருகிறது இந்நூல். ஓர் இலக்கியத்தைக் கூறுவதற்கு முன்பாக, அவ்விலக்கியம் குறித்த பதிப்புகள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், அவ்விலக்கியத்திலுள்ள பாட பேதங்கள், குறிப்புரைகள், துறை விளக்கம், அட்டவணை, […]

Read more

மாப்ளா புரட்சி

மாப்ளா புரட்சி – மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்,  ஜெகாதா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. நிலச்சுவான்தார்களிடமிருந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க மலபார் மாப்ளா சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசு இருந்ததால் மாப்ளா சமூகத்தினர் காலனியாதிக்கத்தையும் எதிர்த்தனர். ஆனால் இந்துக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே “மாப்ளா புரட்சி’ என்று பல்வேறு தரப்பினர் பதிவு செய்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும்விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மலபாரின் ஜென்மி சமூகத்துக்கு வரைமுறையற்ற நில உடைமை அதிகாரங்களை வழங்கியதை எதிர்த்து மாப்ளா குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் […]

Read more

எல்லாம் மெய்

எல்லாம் மெய், எனது வாழ்க்கைப் பயணம், டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக்.528, விலை ரூ.450. டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் கொண்ட நூல்.நூலை வாசிக்கும்போது, நூலாசிரியர் பத்திரிகையாளரா, எழுத்தாளரா, மருத்துவரா, அரசியல்வாதியா? இவர் எதில் முதன்மை வகிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் எழுத்தும் பத்திரிகையும் இவரது நேசிப்புக்கு உரியவை என்று தெரிகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பயின்றபோதே தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி இருக்கிறார். “மாணவம்’ இதழுக்கு உதவி ஆசிரியராக, ஓவியராகப் பணி புரிந்திருக்கிறார். அரசியலைப் பொருத்தவரை, […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு, எம்.எஸ்.செல்வராஜ், பாரதி புத்தகாலயம், விலைரூ.100 இலங்கையின் வளர்ச்சிக்கு மலையகத்தமிழர்களின் பங்களிப்பு மிகுதி. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும் போராட்டமும் சொல்லிட முடியாது. அவர்களின் வலியை உணர்த்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள நுால். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு மிகவும் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள், மலையகத் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டியதை வரலாற்று கண்ணோட்டத்தோடு எடுத்துக்காட்டுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் உழைப்புச்சுரண்டலை இதழ்களில் வெளிப்படுத்திப் புது எழுச்சியை உண்டாக்கிய தஞ்சாவூரைச் சார்ந்த நடேசய்யர் பற்றிய செய்தியும் முக்கியமானது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் […]

Read more

சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்

சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும், மு. பாலகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.100. சிவகங்கை மாவட்டத்தை அறிந்து கொள்ள, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மு.பாலகிருஷ்ணன் எடுத்துள்ள அருமையான முயற்சி இந்த புத்தகம். 125 ஊர்களின் பெயர் காரணம், அமைப்பு, வரலாறு, தொன்மை, ஆன்மிக சிறப்பு ஆகியவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் தொகுத்திருக்கிறார் நுாலாசிரியர். நாட்டரசன்கோட்டை, திருப்புத்துார், திருப்புவனம், திருக்கோஷ்டியூர் போன்ற பல ஊர்களின் வரலாற்று, ஆன்மிக பெருமைகள் வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பும், வரலாற்று பெருமையும் இருப்பது ஆச்சரியம். சிவகங்கை […]

Read more
1 2 3 4 5 104