சமயங்கள் நான்கு

சமயங்கள் நான்கு, முனைவர் நல்லுார் சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.120. மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக உரைக்கிறது. ஐந்து தலைப்புகளில் உள்ளது. முதல் அத்தியாயம், சமயம் பற்றி தெளிவாக விளக்குகிறது. துணைத் தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக அணுகி, கருத்துகளை புரிந்து கொள்ள துணை புரிகிறது. தொடர்ந்து, காணாபதியம் என்ற சமயம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கணபதி வழிபாட்டின் தொன்மை, சிறப்புக்கூறுகள் பற்றி முழுமையாக சொல்கிறது. இது போல், சவுரம், கவுமாரம், […]

Read more

சொல்லாத சொல்

சொல்லாத சொல் , மாலன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.248, விலை ரூ.160. துக்ளக் வார இதழில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 செப்டம்பர் முதல் வாரம் வரை எழுதிய 49 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அந்த ஓராண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகில் நடைபெற்ற அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த சுருக்கமானபதிவுகளே இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடக்கமாக அக்கட்டுரை கருத்துகளின் குறியீடாக ஒரு சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கிறார் நூலாசிரியர். தெரிந்த கதைகள் சிலவும், தெரியாத கதைகள் பலவும் இருந்தாலும் அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் […]

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300.  சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள்

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், ரம்யா, அகலன் வெளியீடு, விலைரூ.100. தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார்.தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 16/5/21 இந்தப் […]

Read more

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்,  சரசுவதி வேணுகோபால்,மணிவாசகர் பதிப்பகம்,  பக்.159,  விலைரூ.125.  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலவும் வெளிவந்துள்ளன. அவ்வரிசையில், நாட்டுப்புற இலக்கியக் கூறுகளான வாய்மொழிப் பாடல்கள், கூத்து, ஆட்டம், விளையாட்டு, பழமொழி, விடுகதைகள், கதைப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மக்கள் வாழ்வியல், பண்பாடு முதலியவற்றை சாறு பிழிந்து தந்திருக்கும் இந்நூல், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட, சில மாத, நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாட்டுப்புறவியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியை, நாட்டுப்புறவியலின் போக்குகள், அணுகுமுறைகள், கோட்பாடுகள், […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி? , ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512.  விலைரூ.500,  இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

சுக்கா மிளகா சமூக நீதி

சுக்கா மிளகா சமூக நீதி, மருத்துவர் ச.ராமதாஸ், செய்திப்புனல், விலை 500ரூ.   நாட்டின் விடுதலைப் போராட்டத்தைவிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மேலானது என்று கூறும் மருத்துவர் ச. ராமதாஸ், சமூக நீதி என்றால் என்ன? அதைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எவை? சமூக நீதியினால் கிடைக்கும் பயன்கள் என்ன? போன்றவற்றை இந்த நூலில் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். உயிரைப் பலி கொடுத்தும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும் பெற்ற இடஒதுக்கீட்டின் முழுமையான வரலாறு, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும். பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோருக்கும் […]

Read more

மக்கள் நேயச் சுயமரியாதை

மக்கள் நேயச் சுயமரியாதை, பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலை 200ரூ. சுயமரியாதைக்கென்று ஓர் இயக்கம் பிறந்தது தமிழகத்தில் மட்டும்தான் என்பதும், சுயமரியாதை உணர்ச்சிதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது என்பதும் இந்த நூலில் விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. சுயமரியாதை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரியார் அறக்கட்டளை திட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இந்த உரைத் தொகுப்பில், பெரியார் தெரிவித்த புரட்சிகரமான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள், ஆ.இரத்தினம், கலைக்கோ, விலைரூ.140. திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது. திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது. குடிசெயல் வகை […]

Read more

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180 நிம்மதியான வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! மனிதன், ‘தன்னை உணர’ சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை அழகாக விளக்குகிறார் விஜயகுமார். தேவையே இல்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவை கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுக்கிடையே மனப் பிரச்னை இருக்கிறது. ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ’மன அழுத்தம்’ என்று […]

Read more
1 15 16 17 18 19 88