ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஆர்.மோகன், வானதி பதிப்பகம், பக். 862, விலை 1000ரூ. சாதனையாளர்களின் பண்புகள் பற்றிய பெட்டகம். ஏர்வாடியார் தன் இதழான கவிதை உறவில் தொடர்ந்து வெளியிட்டு வரும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற கட்டுரைத் தொடர் அவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. அக்கட்டுரைத் தொடர் பிரபலங்கள் பலரைப் பற்றியது. நடைச் சித்திரமாக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் சிறக்கப் பணியாற்றுகிற பிரபல பிரமுகர்கள் குறித்த, சின்னஞ்சிறு தகவல் களஞ்சியமாக இந்நுால் தொகுக்கப்பட்டு உள்ளது. பெருந்தகையோர், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சுடர்கள், இலக்கிய ஆளுமைகள், […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 200, விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்),  ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய தாவரத் தரகன். கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர், இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை 160ரூ. சிங்களவர்களின் பூர்வீகம் சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது. மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் […]

Read more

நடைவழிக் குறிப்புகள்

நடைவழிக் குறிப்புகள், சி.மோகன், பரிசல் வெளியீடு, விலை 150ரூ. கவனிக்க மறந்த ஆளுமைகள் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 […]

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ்,  மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம்; வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம்; தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், மூன்று பெண்களின் கதையைச் […]

Read more

பட்டுக்கோட்டையார் பாதையிலே

பட்டுக்கோட்டையார் பாதையிலே, சங்கை வேலவன், பக். 272, விலை 240ரூ. நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.இதில் அமைந்துள்ள கவிதைகளில் பெரும்பகுதி 1978 – 79ம் ஆண்டுகளில் உருவானவை என்பதை நுாலாசிரியர் முன்னுரையால் மட்டுமன்றி, கவிதையின் பாடுபொருள் கொண்டும் உணர முடிகிறது. பட்டுக்கோட்டையாரின், ‘வீரர் மரபு வாழ்க!’ எனும் கவிதையை முன்வைத்து, தன் வளர்ப்புத் தாயான பார்வதியை தமிழ்த்தாயாக பாவித்து முதல் வணக்கம் கூறி நுாலைத் துவங்குகிறார். ‘மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும்’ எனும் உரிமை முழக்கக் கவிதையோடு […]

Read more

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் […]

Read more
1 50 51 52 53 54 88