குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார், பக். 352, விலை 275ரூ. குந்தியின் தந்தை பெயர் சூரசேனன், சகோதரன் வசுதேவன். கிருஷ்ணனும், பலராமனும் அண்ணன் மகன்கள். குந்தியின் தந்தை சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்ததால், இவள் குந்தி எனப் பெயர் பெற்றாள். பிறந்தது ஓர் இடம்; வளர்ந்தது வேறிடம். இல்லற வாழ்க்கையில் ஈடுபட இயலாத பாண்டுவை கணவனாகக் கொண்டாள். அரண்மனை வாழ்க்கையாவது கிடைக்குமா என்றால், அதுவும் கிடைக்கவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான் பாண்டு. மந்திரத்தின் உதவியால் […]

Read more

சபாஷ் சாணக்கியா

சபாஷ் சாணக்கியா, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 வணிக வீதி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. திருக்குறளின் மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்து சோம வீரப்பன் எழுதிய ‘குறள் இனிது- சிங்கத்துடன் நடப்பது எப்படி?’ வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அர்த்தசாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் மேலாண்மைக் கருத்துகளை இன்றைய வணிகச் சூழலில் பின்பற்றுவது எப்படி என்று தனக்கே உரிய தனிச்சுவை நடையில் ‘சபாஷ் சாணக்கியா’ தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார் சோம வீரப்பன். அத்தொடரில் வெளியான முதல் 50 கட்டுரைகளின் […]

Read more

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர், நாகூர் ரூமி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. நமக்கு நாமே தடை தி இந்து குழுமத்தின் ‘காமதேனு’ இணையதளத்தில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பு. வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விக்கும்கூட மனமே காரணமாக இருக்கிறது. தாழ்வுணர்ச்சிகளால், தவறான அபிப்ராயங்களால் உருவாக்கிக்கொள்ளும் மனத் தடைகள் வெற்றிக்கு எப்படி தடைக்கற்களாக மாறுகின்றன? அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவது எப்படி என்பதை சாதனையாளர்களின் சரித்திரங்களை உதாரணம்காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி. நன்றி: தமிழ் இந்து,16/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஆயிரம் பூக்கள் கருகட்டும்

ஆயிரம் பூக்கள் கருகட்டும், ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் ஆய்வுலகம் ஏன் தூங்கிவழிகிறது? சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை. டெல்லி பல்கலைக்கழகத்தால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏ.கே.ராமானுஜனின் ‘முந்நூறு ராமாயணங்கள்’ கட்டுரையைப் பற்றிய அறிமுகத்தோடு அதை எதிர்ப்பதற்குப் பின்னுள்ள அரசியலைக் குறித்தும் விவாதிக்கிறது முதல் கட்டுரை. ராமாயணத்தின் பல்வேறு பிரதிகளுக்கு […]

Read more

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை

தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை, இயக்குனர் வ.கவுதமன், பன்மை வெளியீடு, விலை 250ரூ. தமிழ் தேசியத்துக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளை சந்தித்து உண்மை தொண்டராக இருந்தவர் வடமலை. தலைவணங்காத் தமிழ்தேசியப் போராளியாக இருந்த, அவருடைய வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் பற்றி சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைவரும் இதனை வாங்கி படிப்பதன் மூலம் வடமலை தமிழ்த்தேசியத்துக்காக ஆற்றிய பணிகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனை நாமும் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். நன்றி: […]

Read more

அறிவியல் தத்துவம் சமுதாயம்

அறிவியல் தத்துவம் சமுதாயம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா; தமிழில்: அ.குமரேசன், அலைகள் வெளியீட்டகம், பக்.64, விலை ரூ.50. பண்டைய இந்தியாவில் சமயச்சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் மிக விரிவாக விளக்குகிறார். மாயாவாத – மதச்சடங்கு சார்ந்த சிகிச்சை என்பதிலிருந்து பகுத்தறிவு சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறை முன்னேறுகிறது என்றும், யுக்தி-வ்யாபஸ்ரேய பேஸாஜா'வாக மருத்துவம் மாறுகிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். புத்தரின் கொள்கைகளை விளக்கும் நூலான வினய பீடகத்தில் துறவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து புத்தர் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். அது […]

Read more

கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல், ஆ.எஸ்தர் பிரதீபா, பக்.172, விலை ரூ.175. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நூலாசிரியரின் சங்க இலக்கியம் சார்ந்த நூலறிவு நம்மை வியக்க வைக்கிறது. கி.மு.300 – கி.பி.300 வரையிலான காலத்தில் நான்மாடக் கூடல் நகரில் கடைச்சங்கம் செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநூனூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றில் காணப்படும் இசை, […]

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம், வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. இந்த நூல் மூலம் மகாகவி பாரதியாரை வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடிகிறது. பாரதியாருக்கும், வள்ளலாருக்கும் உள்ள ஒற்றுமை, பாரதியாருடன் நேரில் பழகிய ராஜாஜி உள்பட 5 பிரமுகர்களின் ஆச்சரியமான கருத்துக்கள், பாரதியாரின் நகைச்சுவை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டு என்று பலதரப்பட்ட ருசிகரமான தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027275.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த்துளியும்,  ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக்.200, விலை ரூ.190. தமிழகத்தின் நீராதாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நூலின் முதல் கட்டுரையான தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி கட்டுரையிலேயே நீராதாரத்தைப் பெருக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, மழைக்காலங்களில் ஆறுகளிலிருந்து வீணாகப் போய்ச் சேரும் தண்ணீரைப் பயன்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது, நதிகளை இணைப்பது என பலவழிகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையின் விரிவாகவே இந்நூலின் பிறகட்டுரைகள் அமைந்துள்ளன. கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, முல்லைப் பெரியாறு பிரச்னை என பல நீராதாரப் […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.க.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 104, விலை 85ரூ. கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது. கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய […]

Read more
1 49 50 51 52 53 88