யோகியுடன் கொஞ்ச தூரம்

யோகியுடன் கொஞ்ச தூரம்,  எஸ்.பார்த்தசாரதி, நேசமுடன், சென்னை, பக். 304, விலை: ரூ.150. இந்நூல் யோகி ராம்சுரத்குமாருடன் பழகிய பக்தர்களின் அனுபவங்கள் அத்தியாய, அத்தியாயமாக அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில… “யோகியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து ஏதோ ஒன்று கனமாக, வேகமாக, வெள்ளமாகப் பரவி அனைவரையும் ஆட்கொள்ளும். அச்சமயத்தில் உடல் செத்துவிடும், மனம் நினைவை இழக்கும். உணர்வு உணர்வற்ற நிலையை அடையும்’ என்று நூலாசிரியர் பார்த்தசாரதி தமது அனுபவத்தை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். யோகி மீது ஒரு மூதாட்டி வைத்திருந்த பக்தி, 85 வயதான பக்தருக்கு அவரது […]

Read more

நெல்லை நாட்டுப்புறக் கலைகள்

நெல்லை நாட்டுப்புறக் கலைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை, பக்.216, ரூ.210. நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடம் கிராமங்கள். கிராமங்களில் நடைபெறும் விழாக்களின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்படுவதுண்டு. இன்று விவசாயம் நலிந்து, கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக பெரும் அளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய வேர்களிலிருந்து கிளை பரப்பி, மலர்ந்துள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அறிமுகமாகவும், நமது மரபை நாம் மறந்துவிடாமல் நினைவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஆலி ஆட்டம், […]

Read more

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே.இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.382, ரூ. 220. முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சமூகம், கலை, மொழி, இலக்கியம், அரசியல், நிர்வாகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட மொகலாயப் பேரரசு, கி.பி. 1526 முதல், 1857 வரை சுமார் 330 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. வடஇந்தியாவிலும், தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் பகுதிகளிலும் அவர்களது ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது. மொகலாயர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை, தில்லி செங்கோட்டை, தாஜ்மகால், ஜும்மா மசூதி […]

Read more

சிக்குவானா? சிக்குவாளா?

சிக்குவானா? சிக்குவாளா? , ஜோதிர்லதா கிரிஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.160; ரூ.125; சமூகக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் எழுதி வந்த ஜோதிர்லதா கிரிஜா, ஓர் அருமையான துப்பறியும் நாவலை எழுதியுள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் யார் கொலை செய்தது என்ற புதிர் வெளிப்படாமல் வெகு நேர்த்தியாக எழுதியுள்ளார். இன்ஸ்பெக்டர் மணவாளனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணுவும் கொலைகாரன் யார் என்று எல்லா கோணங்களிலும் துப்பறிந்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள். கலாவதி என்கிற பெண் கொல்லப்படுகிறாள். இறந்த அவளின் மூடிக் கிடந்த கைகளில் இருந்த ஒரு பேனா […]

Read more

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம்

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம் ,  பக். 296; ரூ.200. பன்னிரு ஆழ்வார்களுள் ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த போதிலும், கலியன் எனப்படும் திருமங்கையாழ்வார்தான் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவர். இவர் ஏன் இவ்வாறு போற்றப்படுகிறார் என்னும் காரணத்தை, “பெருமானிடம் ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணியவர் ஆழ்வார் என்று அதாவது – பெருமானும் பிராட்டியும் புதுமணத் தம்பதிகளாக வந்தபோது, அவர்களை வழி மறித்து, அவர்கள் ஆபரணங்களை எல்லாம் பறித்தார். அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எடுக்கப் பார்க்க, எடுக்க முடியவில்லை. “என்ன மந்திரம் போட்டாய்? […]

Read more

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம், மணற்கேணி, பக். 80, விலை 60ரூ. சாதிகளின் உடலரசியல், உதயசங்கர், நூல்வனம், பக். 94, விலை 75ரூ. ஜாதி ஒழிப்பு : நம்பிக்கை விதைக்கும் நூல்கள் இந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிட முடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. மாறாக தன், சாதியின் ‘பெருமை’யை பெரிதாகப் பேசித்திரிவது, தன்னை இன்ன சாதி […]

Read more

திரைப்பாடம்

திரைப்பாடம், டாக்டர் ஆர். கார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. திரைப்படம் என்னும் கருவி இசை, நடனம், நடிப்பு, ஓவியம் என அத்தனை கலைகளும் சங்கமிப்பது சினிமாவில். ஆனால் நெடுங்காலமாக சினிமா என்பது மலினமான பொழுதுபோக்கு ஊடகமாகவே கருதப்படுகிறது. இந்தப் பார்வையைப் புரட்டிப்போட்டு, திரைப்படத்தைப் பயிற்றுக் கருவியாக மாற்ற முடியும் என்பதை ‘திரைப்பாடம்’ புத்தகம் காட்டுகிறது. சார்லி சாப்ளினின் ‘தி கிரேட்டிக்டேட்டர்’ , ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’, பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ எனப் புகழ்பெற்ற 31 திரைப்படங்களை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் அலசுகிறது இப்புத்தகம். இந்தத் திரைப்படங்கள் […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. நினைவில் புரளும் ஜே.கே. ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது. ஜே.கே. மறைந்து […]

Read more

மதுரை நாயக்கர்கள் வரலாறு

மதுரை நாயக்கர்கள் வரலாறு, ஆர். சத்தியநாத அய்யர், தமிழில் எஸ். அர்ஷியா, கருத்து பட்டறை வெளியீடு, விலை 370ரூ மதுரை நாயக்கர்கள் மதுரை நாயக்கர்களின் வரலாற்றை விரிவாகப் பேசும் ஆய்வு நூல் இது. விஜயநகரப் பேரரசின் வரலாற்றையும், தொலைதூரத்திலிருந்து அது செயல்படுத்திய அரசப் பிரதிநிதித்துவத்தையும் இணைத்துப் பேசும் ஒரு முயற்சியை இந்த ஆய்வு நூல் செய்கிறது. இந்நூலில் மதுரையை ஆட்சிசெய்த ஒவ்வொரு நாயக்க மனன்ரைப் பற்றிய குறிப்பும் தனித்தனியாக இடம் பெற்றிருக்கின்றன. அத்துடன், நாயக்கர் ஆட்சியின் சிறப்பம்சங்களும் தனிக் கட்டுரையாக இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன், […]

Read more

பேலியோ டயட்

பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக். 175, விலை 150ரூ. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, தகுந்த பின்னணியை விளக்கும் நூல். அதாவது முறையான உணவு வழக்கத்தைக் கையாண்டால் எடை குறைவதோடு உடல் நலனும் மேம்படும் என்பதைச் சொல்லும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/5/2016.   —- நோய்களும் தடுக்கும் உணவு முறைகளும், உமா பாலகுமார், குமுதம், பக். 128, விலை 120ரூ. ஒரு நோயைக் குணப்படுத்த மருத்துவ […]

Read more
1 488 489 490 491 492 841