நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் பதிப்பகம், பக். 736, விலை 460ரூ. எம்.ஜி.ஆரின் சுயசரிதாதான் ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூல் வடிவம் கொண்டுள்ளது. அவர் கைப்பட எழுதியது என்பது இதன் தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர். பங்கு கொண்ட நாடக அமைப்புகள், பட நிறுவனங்கள், தன்னோடு பணியாற்றிய சக கலைஞர்கள், அவர் சாந்த கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், குடும்ப நண்பர்கள், தொண்டர்கள் என்று யாரையும் விடாமல் உள்ளதை உள்ளபடி தைரியமாக எழுதிச் செல்கிறார். அவருக்கு உதவியோரையும் அவரை படுபாதளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரைப் பற்றியும் […]

Read more

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் சிந்தனைகளைத் தூண்டும் நூல். சிறப்பான மொழி பெயர்ப்பு. நூலாசிரியர் நெப்போலியன் ஹில், 12 மகத்தான செல்வங்கள் எனப் பட்டியலிட்டு, நேர்மறை மனோபாவம், நல்ல உடல் ஆரோக்கியம், சகமனிதர்களுடன் நல்லுறவு, பயத்திலிருந்து விடுதலை, சாதிக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை கொள்வதற்கான ஆற்றல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாட்டம், உழைப்பின் மீது காதல், திறந்த […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. பதினென் சித்தர்கள் யாவரும் ஆதிசித்தனாகிய சிவனிடம் நேரடியாக தீட்சை பெற்றவர்கள். இந்த சித்தர்களை பற்றிய தெளிவான விரிவான தகவல்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 115ரூ. தனித்துவமான கதைக் களங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுதி. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், ஏ.வினோத்குமார்,கண்ணதாசன் பதிப்பகம், பக்.245, விலை ரூ.160. கரு உருவானது தொடங்கி அவற்றில் ஏற்படும் மனவளர்ச்சி, குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பயம், இடதுகைப் பழக்கம், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்றவை, குழந்தைகளின் படிப்பு தொடர்பான உளவியல் என 3 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் பிறந்த பின்பு தன் முழு வாழ்நாளில் உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உயிரியல் மாற்றங்களைக் கடக்கிறானோ, அதைவிட அதிகமான உயிரியல் மாற்றங்களை அவன் கருவறையில் இருக்கும் 10 மாதங்களில் கடக்கிறான். எனவே ஒரு பெண் தாய்மை […]

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 17/8/2016.   —- செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக […]

Read more

சிவனும் சித்தர்களும்

சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், பக்.176 விலை ரூ.100. சித்தர்கள், கோயில்களில் உள்ள சிற்பங்களிலோ, சிலைகளிலோ சிவனைத் தேடாமல் தங்கள் சித்தத்தின் உள்ளேயே சிவனைக் கண்டு, தெளிந்து வழிபட்டதனால்தான் சித்தர்கள் எனப்பட்டனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு’’ என்கிற பண்டைத் தமிழரின் சொலவடை இதை உணர்த்தும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் என்பதைத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. பதினெண் சித்தர்களும் மெய்ஞ்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சமய உலகிற்கும், மருத்துவ உலகிற்கும், அறிவியல் உலகிற்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். தற்போது சித்தர்கள் […]

Read more

நான் ப்ரம்மம்

நான் ப்ரம்மம்,  ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.250. “நான்’ எனும் தேடலே கேள்வியாக மனதினுள் வளர்ந்து நிற்கும்போது அதற்கான தேடலும் பதிலும் அவசியமாகிறது. ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் தமது ஆன்மிக சொற்பொழிவுகளால் பலரின் மன இருளைப் போக்கி ஆன்மபலத்தைப் பெருக்கும் கருவியாக இருந்தவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமே ஒரு நூலாக (முதல் பகுதி) வடிவெடுத்திருக்கிறது. “”கடவுள் ஏன் என்னை இவ்வாறு படைத்தார்?” என்பது கேள்வி. அதற்கு மஹராஜ் அவர்கள் […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்,  கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவற்றில் 32 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் கேள்விகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என தங்களுடைய முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தின் தேவை, பெண்களின் நிலை, நிறுவனங்களில் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகள் என பொதுவான விஷயங்களைப் பற்றியதாகவும் இருக்கின்றன. கேள்விகள் எப்படியிருப்பினும், அதற்கான பதில்கள் பிரச்னைகளை அறிவியல்ரீதியான முறையில் […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்,

. உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அது போலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். கடந்த 10 ஆண்டுகளில் அப்துல் கலாமுக்கு இளைஞர்களிடமிருந்து வந்த கடிதங்கள், கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான பதில்கள் எல்லாம் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட சுய அனுபவங்கள் சார்ந்தவை. […]

Read more

உலகத் திரைப்படம்

உலகத் திரைப்படம்,  வெ.சுப்ரமணியபாரதி, கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.225. “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, “ஒயிட் பலூன்’ போன்ற ஈரானியத் திரைப்படங்களை எத்தனை முறை பார்த்திருந்தாலும் இந்த நூலில் அப்படங்கள் குறித்துப் படிக்கும்போது, மீண்டும் கண்கள் கசிகின்றனவே, அதுதான் இந்நூலின் மிகப்பெரிய வெற்றி. எடுத்துக் கொண்ட தலைப்புக்கேற்ப உலகத் திரைப்படங்களில் உன்னதமானவற்றையெல்லாம் காட்சிகள், வசனங்களோடு கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். “உலக இலக்கிய’ கர்த்தாக்களின் தரத்திற்கு எந்த விதத்திலும் குறையாத திரை மேதைகளை, அவர்களது ஈடு இணையற்ற படைப்புகள் மூலம், ஆய்வுப் பார்வையோடு இந்நூல் அணுகியிருக்கிறது. […]

Read more
1 4 5 6 7 8 15