இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

மறைக்கப்பட்ட மருத்துவம்

மறைக்கப்பட்ட மருத்துவம், மருத்துவர் யுவபாரத், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு, விலை 150ரூ. நோய்கள் குணமடைவதற்கு மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் நலன் கருதி, மருந்தில்லாமல் எப்படி நோயை குணப்படுத்தவது என்பதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்ட நூல். மன அழுத்தம், வாழ்வியல் முறை மூலமாகதான் 98 சதவீரம் நோய்கள் வருகிறது. அவற்றை குணப்படுத்த முதலில் உணவு ப் பழக்கத்தை முறையாக எடுத்துக்கொண்டால் அந்த நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை இந்த நூல் மூலம் உணர முடிகிறது. புதிய […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது. 1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து […]

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ. உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் […]

Read more

நதிபோல ஓடிக்கொண்டிரு

நதிபோல ஓடிக்கொண்டிரு, இரா.காயத்ரி, தினத்தந்தி பதிப்பகம், விலை 100ரூ. தன்னிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர முடியாமல், சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இன்றைய இளைஞர்களைத் திசை திருப்புகின்றன. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நூலை பேராசிரியர் முனைவர் இரா. காயத்ரி படைத்துள்ளார். “சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்” “நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப் பிடித்த கை நீ மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் கை தனியே […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், தமிழ் திசை , விலை 225ரூ. உலகம் போற்றும் தமிழ் இலக்கியமான திருக்குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம். தலைமைப் பண்பு, ஆளுமை, மேலாண்மை தத்துவம் ஆகியவற்றையும் திருவள்ளுவர் திறம்படத் தந்து இருக்கிறார். இந்தத் தலைப்புகளில் உள்ள 125 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள ஆழமான கருத்துகளை, ஆங்காங்கே நகைச்சுவையுடனும், எளிய முறையிலும் விளக்குவதோடு, இன்றைய வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதும் அழகாகத் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி, சா.அப்துர்ரஹீம், அறிவு நாற்றங்கால் வெளியீடு, விலை 110ரூ. இறைத்தூர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இதில் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த செய்தி, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், ஆற்றிய உரைகள், அந்தக் காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றிய விவரம் ஆகியவையும் தந்துள்ளதால், இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும் தகவல் பெட்டகமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம், சம்பத்குமார், வானதி பதிப்பகம், விலை 180ரூ. சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களின் பாடல்களில் மறைந்து இருக்கும் பொருள் என்ன? சித்தர்களின் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகள் யாவை? அவர்கள் வசிக்கும் குகைகள் எங்கே இருக்கின்றன? நமது பூமிக்கு அவர்கள் வருவது எப்படி? என்பது போன்ற அனைத்து வினாக்களுக்கும் இதில் ஆச்சரியமூட்டும் விளக்கம் இருக்கிறது. அனைத்து சித்தர்களின் பிறந்த ஊர், நட்சத்திரம், சமாதி அடைந்த இடம், மற்றும் சமீபகாலத்தில் வாழ்ந்த சித்தர்களின் விவரங்கள் ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டுள்ளதால் […]

Read more
1 30 31 32 33 34 223