அக்னியின் ஆயிரம் நாமங்கள்

அக்னியின் ஆயிரம் நாமங்கள். சு. கோதண்டராமன், கிரி டிரேடிங் ஏஜென்சி, விலை 100ரூ. அக்னியை இறைவனாகக் கருதி குத்துவிளக்கு பூஜை செய்கிறோம். கார்த்திகை தீபத்தை இறைவனின் வடிவமாக காண்கிறோம். அந்த அக்னி பிறப்பு, ஒளி, புகழ், பரம்பொருள், யாகம், வழிபாடு உள்ளிட்ட 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   தாவரவியல் மருத்துவம், மு. சண்முகவேல், அடன் புக் மால், விலை 70ரூ. நோய்கள் பற்றிய விவரங்களையும் அதைக் குணப்படுத்த மூலிகை மருந்துகள் தயாரிக்கும் வழிமுறைகளையும் எழுதியுள்ளார் மு. […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள்

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள், முனைவர் கோ. எழில்ஆதிரை, இயல்வெளியீடு, விலை 400ரூ. தமிழகத்து வரலாற்றில் ஈடு இணையற்ற கலைத்தொண்டு ஆற்றிய பெண்மணி செம்பியன்மாதேவியாவார். இவர் கண்டாதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயுமாவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காளத்தி மலை முதல் நாகப்பட்டினம் வரை புகழ்வாய்ந்த பாடல் பெற்ற தலங்களைப் புதியதாகக் கட்டி அவற்றில் எழிலார்ந்த செய்யுத் திருவுருவங்களை வீதி உலாவிற்காக செய்தமைத்து ஏராளமான கொடைகளை அளித்து தனக்கென ஒரு மாபெரும் வரலாற்றையே தோற்றவித்த பெண்மணியாவார். அவர் கோனேரிராசபுரத்தில் செய்த பணிகளை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறது […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், விலை 120ரூ. திக்குத் தெரியாமல் நிலை தடுமாறும் கப்பலுக்கு வழிகாட்டிக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் போலக் காட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று வழிகாட்டி, தன்னலமற்ற தியாகத்திற்கு வழிகாட்டி, பொது வாழ்க்கைக்கான தொண்டு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு வழிகாட்டி, நாட்டின் வளர்ச்சிக்குச் செயல் வீரவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களை நேசிக்கும் தொண்டராகவும் ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய பாங்கிற்கு வழிகாட்டி, உண்மையான நேர்மையான உழைப்புக்கு […]

Read more

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல்

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல், ஞானேஸ்வரி, ஓங்காரம் வெளியீடு, விலை 600ரூ. திருவருளை அடைய குருவருள் அவசியம் என்பார்கள், மெய்யன்பர்கள். இதைத்தான் ‘குருவின் திருமேனி கண்டாலே தெளிவு பிறக்கும்’ என்றார், திருமூலம். ஓங்காரநந்தா சுவாமிகளுடனான தனது நேரடி அனுபவங்கள், சுவாமிகளின் ஜீவகாருண்ய அனுபவங்கள், குருபக்தி, குருவின் பெருமைகள், குருவின் அவசியம் உள்ளிட்டவற்றையும் மகேஸ்வர புஜை, படி பூஜை, ஞானதீப வழிபாடு, குரு பூஜை போன்ற வழிபாடுகளை நடத்தும் முறைகளையும் நூலாசிரியர் ஞானேஸ்வரி எளிய தமிழில் விரிவாக விளக்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

Read more

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த […]

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர்

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 220ரூ. வரலாற்றில் மகளிரையும், மகளிரின் வரலாற்றையும் வெளிக்கொணரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நூலாகும். தொடக்க காலத்திலிருந்து தமிழக மகளிர், சமூக சீர்திருத்தங்களும் மகளிர் இயக்கங்களும், மகளிர் கல்வி, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – தன்னாட்சி இயக்கம் வரை, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – காந்தியின் காலம், பெண்களும் வாக்குரிமை இயக்கமும், பெண்களின் ஆரோக்கிய நல முன்னேற்றம் ஆகிய ஏழு தலைப்பின் கீழ் சங்க காலம் முதல் 1947 வரையிலான நிகழ்வுகளை சான்றுகளின் […]

Read more

சேதுபதியின் காதலி

சேதுபதியின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், வானதி பதிப்பகம், விலை 195ரூ. பனையபுரம் பனங்காட்டீசன் கோவில், பழையாறை வடதளி தர்பூரீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி ஆலயம், திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் அமைந்துள்ள அதிசய மலைக் கோவில், போடி பரமசிவம் கோவில், பேரையூர் நாகநாதசுவாமி ஆலயம் உள்பட 33 கோவில்கள் குறித்து பனையபுரம் அதியமான எழுதிய நூல். கோவில்களின் தொன்மை சிறப்பு, புராண சிறப்பு, அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள், வழித்தடங்கள் போன்ற முழுமையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

அறிவுசார்ந்த சொத்துரிமைகள் சட்டம்

அறிவுசார்ந்த சொத்துரிமைகள் சட்டம், வழக்கறிஞர் சோ. சேசாச்சலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. பதிப்புரிமை, வணிகக் குறியீடுகள், புத்தாக்கம், வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற சொத்துக்களைக் குறிக்கும் சொல்லாக “அறிவு சார்ந்த சொத்துரிமைகள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுபற்றிய சட்ட விவரங்களை விளக்கமாகவும், விரிவாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் சோ. சேசாச்சலம். இது சட்டம் பயில்வோருக்கான பாடநூலாகும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more
1 82 83 84 85 86 223