தூரமில்லை தொட்டுவிடலாம்

தூரமில்லை தொட்டுவிடலாம், முனைவர் பாபு புருஷோத்தமன், தினத்தந்தி பதிப்பகம், விலை 200ரூ. தினத்தந்தியில் ஞாயிறுதோறும் வெளியாகும் குடும்ப மலரில் முனைவர் பாபு புருஷோத்தமன் எழுதி தொடர்ந்து 54 வாரங்கள் வெளிவந்த “துரமில்லை தொட்டுவிடலாம்” என்ற தன்னம்பிக்கை தொடரின் தொகுப்பே இந்த நூல். குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வாழ்வியல் நெறிமுறைகள் என அனைத்தும் அம்சங்களையும் கொண்டுள்ளது. “புண்படுத்தக்கூடாது பண்படுத்த வேண்டும், “கேலிக்கு வேண்டும் வேலி”, “பண்புகளை வளர்க்கும் பண்டிகைகள்”, “நல்ல பழக்கம் நம்மை உயர்த்தும்”, “இல்வாழ்க்கை இனிக்க”, “முதியவர்கள் அனுபவ […]

Read more

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள்

வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள், டாக்டர் மு. நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், விலை 130ரூ. வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அவருடைய சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விரிவாகவும் கூறும் நூல். வள்ளலார் எப்படி இருப்பார், அவருடைய நடை – உடை – பாவனைகள் எப்படி என்பதையும் ஆசிரியர் வர்ணித்துள்ளார். வள்ளலாரின் கருத்துக்கள், வைரங்களாக ஜொலிக்கின்றன. அவற்றில் ஒன்று ‘இறந்தவர்களை எரிக்கக்கூடாது, இறந்தவுடன் எந்தச் சடங்கும் செய்யக்கூடாது. அவர் எந்த ஆடையில் இருந்தாரோ அப்படியே அடக்கம் செய்துவிட வேண்டும். யாரும் அழவோ, துயரப்படவோ […]

Read more

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள்

வியப்பில் ஆழ்த்தும் சித்தர்கள், வானதி பதிப்பகம், விலை 450ரூ. முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், தவவலிமையினால் இறைவனின் இன்னருளைப் பெற்றவர்கள். அட்டமா சித்திகளைக் கைவரப்பெற்று அரிய செயல்களைப் புரிந்தவர்கள். பொதுவாகச் சித்தர்கள் எண்ணிக்கையில் 18பேர் என்பார்கள். அது உண்மையல்ல, நூறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடிப்படையில் மா.ந.திருஞான சம்பந்தன் ஏற்கனவே ‘சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்’ என்ற நூலில் 81 சித்தர்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த நூலில் பூண்டி மகான், மல்லையா சித்தர், கொடுவிலார் பட்டி சித்தர், பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் […]

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை நகரிலும், சுற்றுப்புறங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சியாகும். இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் கண்டு மனம் நொந்த நீதிபதியும், கவிஞருமான மூ.புகழேந்தி, அந்த நிகழ்ச்சியை கவிதை வடிவில் கண்ணீர்க் காவியமாகவே வடித்துத் தந்துள்ளார். ஒரு துயர நிகழ்ச்சியை காவியமாக வடித்துள்ள நீதிபதி புகழேந்தி பாராட்டுக்கு உரியவர். பல சம்பவங்களை […]

Read more

திரைப்பட இசைப்பாடல்கள்

திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ. தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது […]

Read more

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள், முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ், மணிமேகலைப்பிரசுரம், விலை 160ரூ. இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் படித்து மகிழ முடியாது. எனவே ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்துடன், இலக்கியத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ். சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் என்ற தலைப்புக்கேற்ற சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more

கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

கம்பரின் மறுபக்கம்

கம்பரின் மறுபக்கம், புலவர் ஆ. பழனி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. ராவணன் சிவபக்தன் அல்ல, சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல. வஞ்சி என்படுவது கரூர் அல்ல என்பன போன்ற பல புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர் புலவர் ஆ. பழனி. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   ஒரு வரிச் செய்திகள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீஅலமு புத்தகநிலையம், விலை 70ரூ. போட்டித் தேர்வுக்கு பயன்படும் செய்திகளை ஒரு வரிச் செய்திகளாக தொகுத்தளித்துள்ளார் கள்ளிப்பட்டி சு. […]

Read more

குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ. ‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ. நன்றி: தினத்தந்தி, 14/9/2016. —-   பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ. சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே […]

Read more

எது தர்மம்

எது தர்மம், சுகி. சிவம், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. நமக்குப் பிறர் என்னென்ன நன்மைகளெல்லாம் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நன்மைகளை நாம் பிறருக்குச் செய்வோம். நமக்குப் பிறர் என்னென்ன தீமைகளெல்லாம் செய்யக்கூடாது என்று நாம் கருதுகிறோமோ, அந்தத் தீமைகளை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்போம். அவ்வளவுதான். இதற்குள்ளேயே எல்லாத் தர்மங்களும் அடங்கிவிட்டன என்று தர்மத்திற்கு விளக்கம் அளிக்கிறார் சுகி. சிவம். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   கவி வானம், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. பல்வேறு பொருள்கள் […]

Read more
1 81 82 83 84 85 223