மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள், தமிழில் ஜா. தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 170ரூ. உலகின் சிறந்த திரைப்பட இயக்குனர்கள் 20 பேரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட நூல். அன்பையும், அறத்திணையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவர்கள் கட்டுப்பாடில்லாத கனவு காண்பவர்களாகவும் இருப்பதுடன், சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும், தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துவது இந்த நூலின் வெளிப்பாடாகும். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நலம் தரும் நாட்டு மருந்துகள், டாக்டர் கலைமதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. ஒவ்வொரு நோய்க்கும் என்ன மருந்து […]

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

வெற்றிச் சிம்மாசனம்

வெற்றிச் சிம்மாசனம், ப. ஜான் கணேஷ், தி ஒரிஜினல்பிரிண்டிங் பிரஸ், விலை 60ரூ. “நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை அர்த்தப்படும், யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை வசப்படும்” என்பார்கள். அதுபோல வாழ்க்கை வசப்படவும், வெற்றி நிசப்படவும் வழிகாட்டிடும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- கார்ல் மார்க்ஸ், வெ. சாமிநாத சர்மா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், மார்க்சியத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தமிழக மக்கள் அறிந்து […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. ஆழமான சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர் படுதலம் சுகுமாரன். இந்தத் தொகுதியில் அவருடைய 35 கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் நெஞ்சைத் தொடும் கதைகள். அநாவசியமாக வளர்த்தாமல், நாலைந்து பக்கங்களில் கதையை அடக்கி விடுவது இவருடைய சிறப்புகளில் ஒன்று. முதல் கதையான “மாப்பிளை”, 5 பக்கங்களில் பிரமாதமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. திரை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிக மன்னன் பி.யு.சின்னப்பா, குணசித்ர நடிகர் டி.எஸ். பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். ஆர்.சி. சம்பத், முப்பெரும் நடிகர்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். சில பிழைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும். “சந்திரகாந்தா படத்தில், சுண்டூர் இளவரசன் வேடத்தில் கதாநாயகனாக பி.யு. சின்னப்பா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. சின்னப்பா ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்று […]

Read more

குபேர் புதுச்சேரிப் புயல்

குபேர் புதுச்சேரிப் புயல், வில்லியனூர் பழனி, கனிமொழி வெளியீட்டகம், விலை 80ரூ. வெள்ளையரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, புதுச்சேரி பிரெஞ்ச ஆட்சியின் கீழ் இருந்தது. அது, பிரான்சு நாட்டிடம் இருந்து விடுதலை பெறவும், இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்படவும் காரணமாக விளங்கியவர் குபேர். அதுபற்றிய விவரங்களை தெளிவாக விளக்குகிறது இந்நூல். புதுச்சேரி வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

சாமானுயனுக்கான சட்டங்கள்

சாமானுயனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும், அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் […]

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ. “மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட […]

Read more

தந்தை பெரியாரின் 100 அறிவுரை

தந்தை பெரியாரின் 100 அறிவுரை, தொகுப்பு கவிஞர் கலி. பூங்குன்றன்,பெரியார் சுய மரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, விலை 15ரூ, விலை 10ரூ. தமிழ்ச் சமுதாயத்துக்கு தந்தை பெரியார் வழங்கிய அறிவுரைகள் ஏராளம், ஏராளம். அவற்றில் 100 அறிவுரைகளை தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் கலி. பூங்குன்றன். உணவு பற்றாக்குறை தீர, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிய, கலவரங்களைக் களைய, வகுப்பு வாதம் ஒழிய, ஒழுக்கம் வளர… இப்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுகிறார் பெரியார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். விலை 15ரூ. “பெரியார் ஒரு […]

Read more

குழந்தைகள் மன நலம்

குழந்தைகள் மன நலம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 160ரூ. இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில் சரியான திசையில் கொண்டு செல்வது என்ற வழிகாட்டலுக்குத் தகுதி படைத்த நூலாக படைத்திருக்கிறார் மருத்துவ உளவியலாளர் ஏ. வினோத்குமார். நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   தமிழே என்னுயிரே, சு. திருநாவுக்கரசு, தேன்பழனி பதிப்பகம், விலை 150ரூ. காலத்திற்கு ஏற்ற வகையில் 76 வெவ்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ள மரபுக் […]

Read more
1 79 80 81 82 83 223