நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், இ.எஸ்.எஸ்.ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 250ரூ. மருத்துவர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று, பன்முகம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், எழுதி இருக்கும் இந்த நூல், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். நீரழிவுக்கான அறிகுறிகள், அந்த பாதிப்பைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள், தனக்குத் தானே இன்சலின் எவ்வாறு போட்டுக் கொள்வது போன்ற அனைத்தையும் மிக விரிவாக அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகத் தந்து இருக்கிறார். நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறைகள், மற்றும் அதற்குரிய […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ. இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன். எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே […]

Read more

மொழிகளின் தாய்

மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ. மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ. ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ, ப்ரியா கல்யாணராமன், குமுதம், விலை 150ரூ. திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோயின்மை, பில்லி சூனியங்களிடமிருந்து பாதுகாப்பு என ஏராளமான வரங்களை அள்ளித்தரும் ஆலயங்களின் அற்புத வரலாறு அடங்கிய நூல். அம்மன் மீது பெண்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நெருக்கத்தை நூலாசிரியர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். குமுதம் இதழில் வெளிவந்த தொடர்களின் தொகுப்பே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம், தமிழில் புவனா நடராஜன், சாகித்திய அகாடமி, விலை 415ரூ. 1972-ம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல், கொஞ்சம் புரிந்துகொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே. அவற்றை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வங்க எழுத்தாளர் சந்தோஷ்குமார்கோஷ். இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புவனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சர்க்கரை நோய், தொகுப்பாசிரியர் மரு.கு. கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 145ரூ. சர்க்கரை நோய் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம், நாலுமாவடி கே.பி. கணேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இந்தியாவின் ராணுவ பலம் தேசபக்தியைத் தூண்டும் விதத்தில், “நம் நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உதவிடுவோம்” என்ற தலைப்பில் நாலுமாவடி கே.பி.கணேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது புதுமையான புத்தகம். ஓரங்க நாடக பாணியில் நூல் தொடங்குகிறது. மாணவி ஜெயா (ராணுவ அதிகாரியின் மகள்) பாரதி டீச்சர் ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல் நாட்டுப்பற்றை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நூலின் இடையே இந்தியாவின் ராணுவ பலம், அண்டை நாடுகளின் […]

Read more

உச்சாடனம்

உச்சாடனம், கா.சு. வேலாயுதன், கதை வட்டம் வெளியீடு, விலை 150ரூ. மந்திரங்களை உச்சரிக்கும் கலையின் மறுபெயரே ‘உச்சாடனம்’. வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த நூலை பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் எழுதி உள்ளார். பத்திரிகை, படைப்பிலக்கியம், அரசியல், குடும்பம் என அனைத்திலும் சாதனை பல புரிந்து வயதிலும் நூற்றாண்டை நோக்கி நடைபோடுபவர் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி. இவருடைய நிருபர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில் சுவாரஸ்யமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

மனதில் பதிந்தவர்கள்

மனதில் பதிந்தவர்கள், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த பிரமுகர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை ‘மனதில் பதிந்தவர்கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கட்டுரைகளைக எழுதி வருகிறார். இந்த வரிசையில் எட்டாவது புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. வெ. இறையன்பு, நீதியரசர் மு. கற்பக விநாயகம், ‘கிருஷ்ணா சுவீட்ஸ்’ முரளி, ரவிதமிழ்வாணன், கவிஞர் முடியரசன் உள்பட 19 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு என்றால் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. தன்னை கவர்ந்தவர்களை எழுத்தோவியங்களாகத் தீட்டி […]

Read more
1 87 88 89 90 91 223