பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ. பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார். தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார். வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, தொகுப்பு டாக்டர் ஆர். வைத்தியநாதன், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குரு பரம்பரையை வரிசைப்படுத்தி, வண்ணத்தாளில், உரிய படங்களுடன், அதற்கான தகவல்களுடன் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் முனைவர் மட்டும் அல்ல பட்டயக்கணக்காளரும் கூட. வழிவழியாக இந்த மடத்தின் சீடர் கூட்டத்தில் பிரதானமானவர் என்பதை முன்னுரையில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காஞ்சி மாமுனிவர், அவரது அருளுரைகள் தாங்கிய, ‘தெய்வத்தின் குரல்’ தமிழகம் நன்கு பழகியதொன்றாகும். நம் நாட்டில் வேதநெறி தழைக்கவும், […]

Read more

பக்தி யோகம்

பக்தி யோகம், (ஸ்ரீமத் பகவத் கீதை 12வது அத்தியாயம்), மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி), பக். 192, விலை 80ரூ. சனாதன தர்மம் எனப்படும் இந்து மத நெறியை, பகவத் கீதை பார்வையில் அழகாக விளக்கும் நூல். பக்தி நெறி மூலம் பழகும், இறையின் நாம கீர்த்தனமே உயிருக்கு ஆதாரமான உரமூட்டும் சிந்தனையை வளர்க்கும் என்ற பார்வையில், முரளிதர சுவாமிகள் பகவத் கீதையில் பக்தியோகத்தை தன் சொற்பொழிவுகளில் தெரிவித்த கருத்து, இங்கே அழகிய மாலையாக உருவாகியிருக்கிறது. பக்தியில் பிரகலாதன் போல அல்லது துருவன் போல […]

Read more

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை, சாலமோன் மனுவேல், பக். 448, விலை 80ரூ. குமரி மாவட்டத் தமிழரின் படைப்பு இந்நூல். நூலின் முதல் 80 பக்கங்கள் அணிந்துரை, கருத்துரை, மதிப்புரை, என்னுரை, முன்னுரை என, தனி நூலளவுக்கு நீளுகிறது. அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, அரசியல், பேச்சுகள், எழுத்துகள் என்று தொடரும் நூலில், ஆங்காங்கே அண்ணாவின் சிந்தனைகளும், அவற்றில் சுய முன்னேற்றம் அடங்கி இருப்பதும் எழுதப்பட்டு உள்ளது. புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல். இதயத்தின் மகிழ்ச்சியே முகத்தின் மலர்ச்சி. […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ. முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை. எஸ்.ராமகிருஷ்ணன் […]

Read more

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பள்ளிப் பாடத்தில் திருக்குறள் முழுவதையும் சேர்க்க வேண்டும் என்று மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண் WP(MD)11999/2015க்கு, நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில், 6 முதல், பிளஸ் 2 வகுப்புக்குள் திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் முழுமையாகச் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இத்தீர்ப்பில் மெக்காலே கல்வி முறையும், அதனால் பண்பாடு உருவாகவில்லை, நீதிநெறி முறைகள் […]

Read more

கணினித் தமிழ்

கணினித் தமிழ், இல. சுந்தரம், விகடன் பிரசுரம், பக். 368, விலை 230ரூ. கணினி, இணையம் இவை இன்று மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றைப் பற்றிய புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாக்கும் வகையில், ‘கணினித் தமிழ்’ என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அலகுகளில் ஆசிரியர் கணினி, இணையம் சார்ந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார். கணினியின் பாகங்கள், அதன் செயல்பாடு, அதில் பயன்படும் வன்பொருட்கள், மென்பொருட்கள், இன்று பெருகி வரும் நவீன மொபைல்பேசிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள், […]

Read more

தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ்

தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ், இரா. சிவராமன், பை கணித மன்றம் வெளியீடு, விலை 250ரூ. கணித பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் கணித சிந்தனைகள் எல்லாம், நம் அன்றாட வாழ்வில் எங்கே பயன்படுகின்றன என்ற கேள்விக்கான விடை தான், The journey of genius என்ற ஆங்கில நூல். இதன் முக்கிய அம்சமே கதை வடிவில் கணித சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. கணிதத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்த அதுல்யா என்ற மேதையும், கணிதம் பற்றி பெரிதாக புரிதல் இல்லாத வியாபாரி ஒருவரும் சந்திக்க […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தரராஜன், திருமகள் நிலையம், பக். 280, விலை 175ரூ. இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மகாதேவபுரம், மழையின்றி, தண்ணீர் இன்றித் தவித்தபோது, தாசி கமலாம்பாள் அங்கு வந்து, அவ்வூர் நடராஜர் சன்னிதியில் நடனமாடி, மழையை வரவழைத்தாள் என்ற செய்தியுடன் நாவல் தொடங்குகிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஊஞ்சல் பத்திரிகை ஆசிரியர் அமிர்தலிங்கம், பிரபாகர் என்ற செய்தி சேகரிப்பவரை அந்த ஊருக்கு அனுப்புகிறார்; அவன், அஸ்வதி என்ற பெண்ணுடன் மகாதேவபுரம் சென்று உண்மையை […]

Read more

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பெரிய புராணத்தில் வாழ்வியல், பேராசிரியர் சாமி.தியாகராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 280, விலை 190ரூ. எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார். பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் […]

Read more
1 128 129 130 131 132 240